AUTHOR NAME

Sri Giridhari Das

117 POSTS
0 COMMENTS
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

யோகத்தின் அத்தகு உயர்ந்த நிலையை அடைவதற்கு உடல், மனம், மற்றும் ஆத்மாவினை எப்போதும் பரமனின் தொடர்பில் ஈடுபடுத்த வேண்டும்; தனிமையான இடத்தில் தனியே வசித்த

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

பகவத் கீதையின் அழிவற்ற விஞ்ஞானம் பன்னெடுங் காலத்திற்கு முன்பாகவே சூரிய தேவனுக்கு உரைக்கப்பட்டு குரு சீடப் பரம்பரையின் மூலமாக உணரப்பட்டு வந்தது என்றும், தன்னுடைய நண்பனாகவும் பக்தனாகவும் இருப்பதால் அதே ஞானத்தினை தற்போது அர்ஜுனனுக்கு வழங்குவதாகவும் கிருஷ்ணர் கூறினார். தன்னுடைய வயதை ஒத்தவரான கிருஷ்ணர் எவ்வாறு சூரிய தேவனுக்கு உபதேசித்திருக்க முடியும் என்ற அர்ஜுனனின் கேள்விக்கு, தனது சொந்த விருப்பத்தின்படி தான் பல்வேறு அவதாரங்கள் எடுத்திருப்பதாக அவர் பதிலளித்தார். தர்மம் சீர்குலைந்து அதர்மம் தலைதூக்கும்போது, பக்தர்களைக் காத்து துஷ்டர்களை அழித்து தர்மத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்காக தான் தோன்றுவதாகவும் தெரிவித்தார். அவ்வாறு அவர் தோன்றும்போது, அவருடைய பிறப்பும் செயல்களும் தெய்வீகமானவை என்பதைப் புரிந்துகொள்பவன் முக்தியடைகிறான்.

இராமாயணம் கேள்வி பதில்கள்

இராமாயணம்—பாரத தேசத்தின் பொற்காவியம். பன்னெடுங்காலத்திற்கு முன்பு முழுமுதற் கடவுளான ஸ்ரீ இராமர் இப்புண்ணிய பூமியில் வாழ்ந்தபோது, அவரது செயல்களை, மக்கள் எக்காலத்திற்கும் நினைவில் கொள்ள வேண்டும் என்பதற்காக மாமுனிவர் வால்மீகி, இராமாயணம் என்னும் இதிகாசத்தின் வடிவில் தொகுத்தார். இராம லீலைகள் இப்பூமியில் நடைபெற்று இலட்சக்கணக்கான வருடங்களாகியும், இன்று வரை இராமாயணம் பராமரிக்கப்பட்டு வருகிறது. பாரத தேசத்தின் பண்பாட்டில் இராமாயணத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. பாரதத்தின் பல்வேறு மொழிகளில் இராமாயணம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, அல்லது வால்மீகி எழுதியதை அடிப்படையாகக் கொண்டும் மற்ற சாஸ் திரங்களை அடிப்படையாகக் கொண்டும் முழுமையாகவே இதர மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. தமிழில் கம்பர் இயற்றிய இராமாயணம் அனைவரும் அறிந்ததே.

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

கடமையைச் செய்வதா, துறப்பதா, இரண்டில் எது சிறந்தது என்னும் அர்ஜுனனின் கேள்வியுடன் தொடங்கிய மூன்றாம் அத்தியாயத்தில், கர்ம யோகத்தின் தன்மைகள் குறித்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் விளக்கமளித்தார். செயல்படுதல் என்பது அனைவருக்கும் கட்டாயமான ஒன்று, அச்செயல்கள் விஷ்ணுவின் திருப்திக்காகச் செய்யப் படும்போது அவை பந்தத்திலிருந்து விடுவிக்கக்கூடியவை. தன்னை யுணர்ந்த நபருக்குக் கடமைகள் இல்லை, இருப்பினும் மக்களை வழிநடத்து வதற்காக அவர்கள் தங்களது கடமைகளில் ஈடுபடுகின்றனர். சில நேரங்களில் பலவந்தமாக பாவச் செயல்களில் ஒருவர் ஈடுபடுவதற்கு காரணம் என்ன என்று அர்ஜுனன் வினவ, உயிர்வாழிகளின் நித்திய எதிரியான காமமே அதற்குக் காரணம் என்று கிருஷ்ணர் பதிலளித்தார். காமத்தின் பல்வேறு தன்மைகளையும் நிலைகளையும் விளக்கியபின்னர், காமத்தை தெய்வீக ஞானத்தினால் வெல்லு மாறு அர்ஜுனனை அறிவுறுத்தினார்.

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

யோகம் என்றால் “இணைத்தல்” என்று பொருள். ஜடவுலகில் கட்டுண்டு வசிக்கும் ஜீவனை முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணருடன் இணைப்பதற்கான வழிமுறையே யோகம் எனப்படும். செய்யும் தொழிலைக் கொண்டு (கர்மத்தைக் கொண்டு) இணைத்தல், “கர்ம யோகம்” என்றும், ஞானத்தைக் கொண்டு இணைத்தல் “ஞான யோகம்” என்றும், எட்டு அங்கங்களைக் கொண்ட பயிற்சியினால் இணைத்தல் “அஷ்டாங்க யோகம்” (அல்லது தியான யோகம்) என்றும், பக்தியைக் கொண்டு இணைத்தல் “பக்தி யோகம்” என்றும் அறியப்படுகின்றன.

Latest