AUTHOR NAME

A.C Bhaktivedanta Swami Prabhupada

227 POSTS
0 COMMENTS
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

மூவகை யோகங்கள்

மன அனுமானத்தின் மூலமாக கடவுளை அறிந்துகொள்ள இயலாது. நமது அறிவு ஓர் எல்லைக்கு உட்பட்டுள்ளதாக இருப்பதால், நம்மால் இந்த பௌதிக உலகின் கிரக அமைப்புகளைக் கூட புரிந்துகொள்ள முடிவதில்லை. நாம் அனைவரும் நான்குவித குறைபாடுகளைக் கொண்டுள்ளோம்.

அறிவை வழங்கும் சமயக் கல்வி

வேத இலக்கியங்களில் இந்து சமயம் எனும் வார்த்தையே கிடையாது. சமயம் என்பது ஒருவகையான நம்பிக்கையல்ல. தர்மம் (அல்லது சமயம்) என்பது உயிர்வாழியின் நித்திய இயற்கை. இதனை இரசாயனக் கலவையுடன் ஒப்பிடலாம். சர்க்கரை இனிப்பானதுஶீஅதுவே அதன் இயற்கைத் தன்மை, தர்மம். சர்க்கரை என்பது இனிப்பாகத்தான் இருக்க வேண்டும், காரமாக இருக்கவியலாது. மிளகாய் காரமாகவே இருக்க வேண்டும், இனிப்பானதாக இருந்தால் அதனை நிராகரித்து விடுவோம். சர்க்கரை காரத்தன்மையுடன் இருந்தால், அதனை நிராகரித்து விடுவோம்.

தவத்தினால் கடவுளை உணர்தல்

பரம்பொருளின் மூன்று தோற்றங்களை சூரியனை உதாரணமாக வைத்து புரிந்துகொள்ளலாம். சூரியக் கதிர்களைக் கொண்டு சூரியனை எளிதில் உணரலாம், இது முதல் நிலை. சூரிய கிரகத்தை உணர்வது இரண்டாவது நிலை. சூரிய கிரகத்திற்கு நம்மால் செல்ல இயலாது. நவீன விஞ்ஞான கணக்கின்படி சூரியன் பூமியிலிருந்து 930 இலட்சம் மைல்களுக்கு அப்பால் அமைந்துள்ளது. சூரியன் இவ்வளவு தொலைவில் உள்ளபோதிலும், அதன் வெப்பத்தை நம்மால் தாங்க முடிவதில்லை. ஆகவே, சூரிய கிரகத்திற்கு சென்றால் நமது நிலை என்னவாகும் என்பதைச் சற்று சிந்தியுங்கள். சூரிய கிரகத்திலிருந்து பல இலட்சம் மைல்களுக்கு முன்பாகவே நாம் சூரிய வெப்பத்தால் எரிக்கப்பட்டுவிடுவோம்.

ஆன்மீக ஆர்வம் குறைகிறதா?

கடவுள்குறித்து கேட்பதற்குக்கூட மக்கள் தயாராக இல்லை, இந்த நிலைக்கு காரணம் என்ன? போஸ்டனில் பாதிரியார் ஒருவரிடம் நான் உரையாடிக் கொண்டிருந்தபோது அவர் கூறினார், உங்களது சீடர்கள் அனைவரும் கிறிஸ்தவம் அல்லது யூத மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். முன்பு அவர்கள் தேவாலயங்களுக்கு வந்ததில்லை, இறைவனைக் குறித்து ஒருபோதும் வினவியதில்லை. ஆனால் இன்று அதே ஆண்களும் பெண்களும் இறைவனுக்காக தங்கள் வாழ்வையே அர்ப்பணித்துள்ளனர்.”

பக்தியை விஞ்ஞானபூர்வமாக அணுகலாமே!

விஞ்ஞானம் என்றால் அனுபவபூர்வமான அறிவு என்று பொருள். கிருஷ்ண உணர்வென்பது அனுமானமோ கற்பனையோ அல்ல, இது கணிதத்தைப் போல, அனுபவபூர்வமான அறிவு. கணிதத்தில் இரண்டும்இரண்டும் கூட்டினால், நான்கு. இரண்டையும்இரண்டையும் கூட்டி நான்கிற்கு பதிலாக ஐந்து என்று கூறவியலாது. அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா என எங்குச் சென்றாலும் இரண்டும் இரண்டும்–நான்குதான். இதை அனைவரும் ஒப்புக்கொள்வர்; ஏனெனில், இஃது ஒரு விஞ்ஞானம்.

Latest