AUTHOR NAME

A.C Bhaktivedanta Swami Prabhupada

226 POSTS
0 COMMENTS
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

முழுமுதற் கடவுள் கிருஷ்ணர்

இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் மிக உயர்ந்த உன்னதமான நன்மை பயக்கும் செயல்களை ஊக்குவிப்பதால் இஃது ஒரு மிகச்சிறந்த பக்தி இயக்கமாகும். இந்த இயக்கத்திற்காக உலகம் முழுவதும் நாங்கள் பிரச்சாரம் செய்கிறோம். கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக அறிவிப்பதே எங்களின் ஒரே குறிக்கோள். நாங்கள் கிருஷ்ணராக விரும்பவில்லை, அவரது சிறந்த சேவகராக விரும்புகிறோம். இதுவே எங்களின் கூற்று.

பக்தனுக்கும் பக்தனல்லாதவனுக்கும் உள்ள வேற்றுமை

சீடர்: ஆசைப்படக் கூடாது என்று பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்லும்போது, அவர் எதனைக் குறிப்பிடுகிறார்? ஸ்ரீல பிரபுபாதர்: அவருக்குத் தொண்டு செய்வதற்கு மட்டுமே நாம் ஆசைப்பட வேண்டும் என்பதையே அவர் அங்கு குறிப்பிடுகிறார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, ந தனம் ந ஜனம் ந ஸுந்தரீம் கவிதாம் வா ஜகத்-ஈஷ காமயே, "தனம் வேண்டேன், ஜனம் வேண்டேன், அழகிய பெண்களும் வேண்டேன்" என்று கூறினார். அப்படியெனில், அவர் வேண்டுவது என்ன? "நான் வேண்டுவதெல்லாம் கிருஷ்ண சேவை மட்டுமே" என்கிறாரே தவிர, "எனக்கு இது வேண்டாம், அது வேண்டாம். நான் சூன்யமாகிவிடுகிறேன்," என்று அவர் கூறவில்லை.

வலையில் சிக்கிய பறவைகள்

ஒருமுறை வேடன் ஒருவன் சில பறவைகளைப் பிடிப்பதற்காக காட்டில் வலையினை விரித்து வைத்தான். வேடன் தனது வலையை விரித்திருந்த இடத்திற்கு அருகில் அமைந்திருந்த மரத்தில் இரு சின்னஞ்சிறு பறவைகள் குடியிருந்தன. உணவிற்காக வெளியே சென்றிருந்த அவற்றின் பெற்றோர், அக்குஞ்சுகளை கூட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என அறிவுறுத்தியிருந்தன.

கிருஷ்ண உணர்வில் உறுதியடைதல்

ஒருவன் பௌதிக செல்வத்தின் மிகவுயர்ந்த நிலையை அடையும்போது, துறவிற்கான மனோபாவம் இயற்கையானதாகும். பௌதிக உலகில் இரண்டு விதமான மனோபாவங்கள் உள்ளன--போக (புலனின்பம்), மற்றும் த்யாக (பௌதிக உலகைத் துறத்தல்). இருப்பினும், வழிகாட்டுதல் இல்லாவிடில், துறவினை எவ்வாறு மேற்கொள்வது என்பதை ஒருவரால் அறிய இயலாது. ஒருவன் முதலில் இன்பமடைய விரும்புகிறான்; இன்பத்தில் அவன் விரக்தியடையும்போது, அவன் அதனை துறக்க முயல்கிறான். மீண்டும், துறவில் களைப்படையும்போது, அவன் அனுபவிக்க விரும்புகிறான்; சுவர் கடிகாரத்தின் ஊசலைப் போல அங்குமிங்கும் ஆடிக் கொண்டிருக்கிறான். இவ்வாறாக, புலனின்பத்தின் தளத்திற்கும் துறவின் தளத்திற்கும் இடையே நாம் அனைவரும் மீண்டும் மீண்டும் ஆடிக் கொண்டிருக்கிறோம்.

எல்லா கிரகங்களிலும் உயிர்வாழிகள்

ஸ்ரீல பிரபுபாதர்: வருங்காலத்தைப் பற்றிப் பேசுவதால் அவர்கள் “பெரிய மனிதர்கள்" என்று கருதப்படுகிறார்கள். டாக்டர் சிங்: இன்னும் பத்து ஆண்டுகளில் அது நடக்கும் என்கிறார்கள்.

Latest