AUTHOR NAME

A.C Bhaktivedanta Swami Prabhupada

226 POSTS
0 COMMENTS
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

பகவத் கீதை

இக்கலி யுகத்தில் மக்கள் குறுகிய காலமே வாழ்கின்றனர். வாழ்நாளின் கால அளவு குறைந்து கொண்டே போகிறது. நமது பாட்டனார்களும் முப்பாட்டனார்களும் நூறு வருடங்கள் வாழ்ந்தனர், தந்தை எண்பது வருடங்கள் வரை வாழ்ந்திருப்பார், நாம் அதை விடக் குறுகிய வருடமே வாழ்வோம் என்பதை அனைவரும் அறிவர். இவ்வாறு காலப்போக்கில் வாழ்நாள் இருபது வருடங்களாகக் குறைந்துவிடும். இது ஸ்ரீமத் பாகவதத்தில் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதன், இருபது அல்லது முப்பது வருடங்கள் வாழ்ந்தாலே மிகவும் வயோதிகனாகக் கருதப்படுவான், அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.

இறைவனைக் காணுதல்

நாம் கடவுளை உணரவில்லை யெனில், நமது வாழ்விற்கும் நாயின் வாழ்விற்கும் என்ன வித்தியாசம்? நான் கொழுத்த வேட்டை நாய் என்று ஒரு நாய் நினைக்கின்றது, நான் மிகப் பணக்கார டச்சுக்காரன் என்று ஒரு மனிதன் நினைக்கிறான். ஆகவே, நாயிற்கும் மனிதனுக்கும் என்ன வேறுபாடு உள்ளது?

வாழ்வின் உண்மையான இலக்கு

இவ்வுலக வாழ்க்கை துயரங்கள் நிறைந்தது என்று கிருஷ்ணர் சொல்கிறார்; மேலும், இவ்விடம் அஷாஸ்வதம், தற்காலிகமானதும்கூட. சரி. துன்பகரமானதாக இருந்துவிட்டுப் போகட்டும். நான் இங்கேயே ஓர் அமெரிக்கனாகவோ இந்தியனாகவோ வாழ்ந்து விடுகிறேன் என்று நீங்கள் சரிகட்ட முடியாது. நீங்கள் எக்காலத்துக்கும் அமெரிக்கனாகவே இருப்பது சாத்தியமில்லை. அந்நிலையிலிருந்து நீங்கள் உதைத்து வெளியேற்றப்படுவது நிச்சயம்.

கடவுளின் அவதார நோக்கம்

பகவத் கீதையில், அர்ஜுனன் நமது நன்மைக்காக ஒரு சாதாரண மனிதனைப் போல நடந்து கொண்டான். கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்றும் அவருக்கு தான் தொண்டு செய்ய வேண்டும் என்றும் அர்ஜுனனுக்குத் தெரியும். அவன் சிறந்த பக்தன், தனது வாழ்நாள் முழுவதையும் கிருஷ்ணரின் தொண்டில் அர்ப்பணித்தவன். பகவத் கீதையின் இறுதியில் கிருஷ்ணரின் அறிவுரைகளை ஏற்றுக் கொண்ட அர்ஜுனன், “சரி, தங்களின் விருப்பப்படி நான் போரிடுகிறேன்” என்று கூறினான். இதுவே உண்மையான பக்தி.

கவனத்துடன் ஹரி நாமத்தை உச்சரித்தல்

ஸ்ரீல பிரபுபாதர்: நாங்கள் கடவுளைப் பற்றி கற்றுத் தருகிறோம். அவர் இந்துவோ, கிருஸ்தவரோ, இஸ்லாமியரோ அல்ல. கடவுள் கடவுளே. அனைவரும் கடவுள் உணர்வுடன் இருக்க வேண்டும். இதுவே எங்கள் இயக்கம். நாங்கள் கடவுளிடம் அன்பு செலுத்தும்படி பிரச்சாரம் செய்து வருகிறோம். ஒருவர் எந்த மதத்தைப் பின்பற்றுகிறார் என்பது பொருட்டல்ல. அவருக்குக் கடவுளின் மீது அன்பு இருக்கிறதா என்பதை மட்டுமே நாங்கள் கவனிக்கின்றோம்.

Latest