AUTHOR NAME

Vanamali Gopala Dasa

99 POSTS
0 COMMENTS
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

கர்தம முனிவரின் துறவு

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்குத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

தேவஹூதியின் வருத்தம்

நல்லுணர்வுடன் அயராது உழைத்து இச்சை, கர்வம், பொறாமை, பேராசை, பாவச் செயல்கள், வீண் தற்பெருமை போன்றவற்றை விடுத்து, ஆற்றல்மிக்க தன் கணவரை அவள் மகிழ்வித்தாள். அவரை பகவானைவிடவும் சிறந்தவராகப் பார்த்த தேவஹூதி அவரிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்தாள். நீண்ட காலமாக மதச் சடங்குகளைக் கடைப்பிடித்துப் பணிவிடை செய்ததால் மிகவும் மெலிந்த நிலையில் இருந்த அவளைப் பார்த்த கர்தமர் அன்பு மேலிட தடுமாறும் குரலில் பேசலானார்.

கர்தமருக்கும் தேவஹூதிக்கும் நடந்த திருமணம்

கர்தம முனிவரிடம் மனு பின்வருமாறு பேசலானார், "வேதத்தின் உருவமாகிய பிரம்மதேவர் வேத அறிவை பரப்புவதற்காக தம் முகத்திலிருந்து பிராமணர்களாகிய தங்களைப் படைத்தார், பொதுவாக பிராமணர்கள் தவம், புத்திசாலித்தனம், புலனின்பத்தில் பற்றின்மை, மற்றும் யோக சித்திகள் நிறைந்தவர்கள். பிராமணர்களின் பாதுகாப்பிற்காக, தம் கரங்களிலிருந்து சத்திரியர்களான எங்களைப் படைத்தார். இப்பொழுது உங்களைச் சந்தித்தால் எனது கடமைகளைப் பற்றி சந்தேகமின்றி தெளிவாக நான் புரிந்து கொண்டேன். உங்களைக் காண முடிந்தது எனது நல்லதிர்ஷ்டம். உங்களின் பாததூளி என் தலையில் படுவது என் பெரும்பாக்கியமாகும். உங்களின் நேரடி அறிவுரையை பெறமுடிந்தமைக்காக பகவானுக்கு நன்றி செலுத்துகிறேன்."

மனுவிற்கும் கர்தமருக்கும் இடையிலான உரையாடல்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார்."வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்" என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரபூர்வமான விளக்கமாகும். இதன்

ஹிரண்யாக்ஷனை பகவான் வராஹர் வதம் செய்தல்

பிரம்மதேவரின் பாவ எண்ணமற்ற பிரார்த்தனைக்கு பதிலளிக்கும்போது பகவான் மனமாற சிரித்து அன்பு நிறைந்த பார்வையுடன் அவரது வேண்டுகோளையும் ஏற்றார்

Latest