AUTHOR NAME
Vanamali Gopala Dasa
99 POSTS
0 COMMENTS
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.
வியாஸரின் குறை தீர்கக நாரதர் தோன்றுதல்
நாம் துன்பங்களை விரும்பாதபோதிலும் காலப்போக்கில் அவற்றை அடைவதைப் போலவே, இன்பங்களையும் காலப்போக்கில் தானாக அடைவோம். எனவே, புத்திசாலி மனிதன் பெறற்கரிய விஷயமான கிருஷ்ண பக்திக்காக தனது வாழ்வைச் செலவிட வேண்டும்.
கிருஷ்ணரே எல்லா அவதாரங்களுக்கும் மூலம்
பகவான் எண்ணற்ற அவதாரங்களை மேற்கொள்கிறார். அவற்றுள் நான்கு குமாரர்கள் முதல் கல்கி வரையிலான இருபத்தி இரண்டு அவதாரங்களை சூத கோஸ்வாமி இங்கு குறிப்பிடுகிறார். அவரது எண்ணற்ற அவதாரங்கள் அனைவரும் வற்றாத நீர்த்தேக்கத்திலிருந்து பாய்ந்தோடும் சிற்றாறுகளைப் போல, அவரது அம்சங்களாக அல்லது அம்சத்தின் அம்சங்களாக உள்ளனர்.
தெய்வீகமும் தெய்வீகத் தொண்டும்
பக்தி யோகமே பக்குவமான, முழுமையான ஆன்மீகச் செயலாகும். இதனால் பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளவர் காரணமற்ற ஞானத்தைப் பெறுவது மட்டுமின்றி, ஜடவுலகப் பற்றுதல்களிலிருந்து எளிதில் விடுதலை பெறுகிறார். இத்தகு பக்தியோகம் எந்தவொரு மற்ற வழிமுறையின் உதவியையும் நாடியிருப்பதில்லை.
கலி யுக மக்களுக்கு நன்மை பயக்கும் ஆறு கேள்விகள்
முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தர்மத்தை நிலைநாட்டுவதற் காகவும் தமது ஆன்மீக உலகின் அன்பான லீலைகளை நமக்கு வெளிப் படுத்துவதற்காகவும், சுமார் 5,000 வருடங்களுக்கு முன்பு இப்பூமியில் அவதரித்தார். அவர் தமது லீலைகளை முடித்து திருநாட்டிற்கு திரும்பிச் சென்ற பின்னர், இவ்வுலகம் அறியாமை மற்றும் அதர்மத்தின் இருளில் மூழ்கியது.

