AUTHOR NAME

Vanamali Gopala Dasa

99 POSTS
0 COMMENTS
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

குமாரர்கள் மற்றும் இதர மக்களின் படைப்பு

ஜீவன்கள், தங்களது உண்மையான அடையாளத்தை மறந்தாலொழிய அவர்களால் இந்த ஜடவுலகில் வாழ முடியாது. ஆகவே, பிரம்மா முதலில் ஒருவரது உண்மை அடையாளத்தைப் பற்றிய மறதி அல்லது தேக அபிமானம், மரண உணர்ச்சி, சுய வஞ்சனை, விரக்தி, பொய்யான உரிமை உணர்வு ஆகியவற்றை படைத்ததன் மூலமாக, உயிர்கள் இந்த பௌதிக உலகில் வாழ்வதற்குத் தகுந்த சூழ்நிலைகளை உருவாக்கினார்.இவை போன்ற ஐவகை அஞ்ஞானங்களைப் படைத்ததால் பிரம்மா மகிழ்ச்சியடையவில்லை.

அணுவிலிருந்து அண்டம் வரை

காலத்தைப் பற்றிய விதுரரின் கேள்விக்கு மைத்ரேயர் பின்வருமாறு தொடர்ந்து விளக்கமளித்தார்–இப்பிரபஞ்சம் முழுவதும் அணுவிலிருந்து அண்டம் வரை உயிர்களின் பல்வகைத் தோற்றங்களைக் கொண்டதாகும். உலகப் பொருட்களின் இறுதி மூலக்கூறு, பிரிக்க முடியாத துகளான அணு என்று அழைக்கப் படுகிறது. இவ்வணுக்களின் கூட்டினாலேயே ஜடவுடலும் ஜடவுலகமும் கட்டப்பட்டுள்ளன. அனைத்து வடிவங்கள் அழிக்கப்பட்ட பிறகும் அணுவானது எப்பொழுதும் கண்களுக்குப் புலனாகாத தனித்தன்மை உடையதாக இருக்கிறது.

படைப்பின் பிரிவுகள்

முழுமுதற் கடவுளின் அறிவுரைக்கேற்ப பிரம்மதேவர் நூறு தேவ வருடங்களுக்கு பகவானின் பக்தித் தொண்டெனும் உயர்ந்த தவத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். அதன் பிறகு அவர், தான் அமர்ந்திருந்த தாமரை மலரும், அம்மலருக்கு ஆதாரமாக விளங்கிய நீரும் வலிமையான சூறைக் காற்றினால் ஆடுவதைக் கண்டார். பக்தித் தொண்டால், நடைமுறை அறிவில் முதிர்ச்சியடைந்திருந்த பிரம்மதேவர் அச்சூறைக் காற்றை நீருடன் சேர்த்துப் பருகினார். பின்னர், அவர் தான் அமர்ந்திருந்த தாமரையானது பிரபஞ்சம் முழுவதும் பரந்து விரிந்திருந்ததைக் கண்டார். அதை முதலில் மூன்று பிரிவுகளாகவும் பின்னர் பல்வேறு வகையான உயிரினங்கள் வசிப்பதற்காக பதினான்கு கிரக அமைப்புகளைப் படைத்தார். உயிர்வாழிகள் தங்களின் குணங்களுக்கேற்ப ஒரு குறிப்பிட்ட கிரகத்தில் குடியமர்த்தப்படுகின்றனர்.

படைப்பு சக்திக்கான பிரம்மாவின் பிரார்த்தனைகள்

பிரம்மா தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்தார்: “பகவானே, உமது பக்தர்கள் உம்மைப் பற்றி முறையாகக் கேட்கும்போதே உம்மைக் காண்கின்றனர். இதனால் அவர்களது இதயம் தூய்மையடைகிறது. அதில் தாங்கள் கருணையுடன் வந்தமர்ந்து தங்களது நித்ய வடிவத்தில் தரிசனம் தருகிறீர்கள். ஆனால் லௌகீகப் பேராசைகளில் ஆட்பட்டு ஆடம்பரமாக உம்மை வழிபடும் தேவர்களிடம் தாங்கள் மனநிறைவு அடைவதில்லை. மேலும், பக்தரல்லாதோர்க்கு தாங்கள் கானல் நீர்போன்று அவர்கள் காண இயலாத வண்ணம் ஒதுங்கி விடுகிறீர்கள்.

கர்போதகஷாயி விஷ்ணுவிடமிருந்து பிரம்மா தோன்றுதல்

இப்பிரபஞ்சத்தின் ஒரு பகுதி பிரளய நீரில் மூழ்கியிருந்த சமயத்தில் கர்போதகஷாயி விஷ்ணு மட்டும் தனியாக, தமது பாம்புப் படுக்கையான அனந்தரின் மேல் சயனித்திருந்தார். அவருடைய உடலில் எல்லா ஜீவராசிகளும் தங்களது சூட்சும உடல்களுடன் ஓய்வெடுத்தன. கால சக்தியால் இயக்கப்படும் ஜீவராசிகள் அவர்களது பலன்நோக்குக் கருமங்களைத் தொடர்ந்து விருத்தி செய்து கொள்வதற்காக வெளியில் வந்தபொழுது, பகவான் தமது உன்னத உடல் நீலநிறமாக இருப்பதைக் கண்டார்.

Latest