- Advertisement -spot_img

CATEGORY

தத்துவம்

புலன்களைப் புனிதப்படுத்தும் விக்ரஹ வழிபாடு

ஆன்மீக உலகில் வீற்றுள்ள புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர், ஜடவுலக வாழ்வில் சிக்கித் தவிக்கும் ஜீவன்களின் மீது கருணை கொண்டு, பல்வேறு ரூபங்களில் இங்குத் தோன்றுகின்றார். மணல், களிமண், மரம், கல், மனம், உலோகம், மணிகள், வரைபடங்கள் ஆகிய எட்டு விதங்களில் அவர் தோற்றமளிக்கும்போது, அவருக்கு விக்ரஹம் என்று பெயர். விக்ரஹத்திற்கும் பகவானுக்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது. இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன: 1) விருந்தாவனத் திலிருந்த கோபால் என்னும் பகவானின் விக்ரஹம் அங்கிருந்து ஒரிசாவிலுள்ள வித்யா நகரம் என்னும் கிராமத்திற்கு சாட்சி சொல் வதற்காக நடந்து வந்தார்; சாட்சி கோபால் என்று பெயரும் பெற்றார். 2) ரெமுணா என்னுமிடத்திலுள்ள கோபிநாதர் விக்ரஹம் மாதவேந்திர பூரி என்னும் ஆச்சாரியருக்காக கீர் எனப்படும் பாலினால் செய்யப்பட்ட இனிப்பு பதார்த் தத்தினை ஒளித்து வைத்தார்; கீர் திருடிய கோபிநாதர் என்ற பெயரையும் பெற்றார்.

Latest

- Advertisement -spot_img