பல்வேறு யோக முறைகளுக்கு ஏற்ப பல வகையான யோகிகள் உள்ளனர். யோகம் என்பது செயல் முறையைக் குறிக்கிறது. யோக முறையைப் பயிற்சி செய்பவன் யோகி எனப்படுகிறான். யோகத்தின் நோக்கம் கிருஷ்ணரை அறிவதே என்பதால், கிருஷ்ண உணர்வே மிகவுயர்ந்த யோக முறையாகும். இந்த யோக முறையை பகவான் கிருஷ்ணர் தமது நெருங்கிய நண்பனான அர்ஜுனனுக்கு விளக்குகிறார்.
கிருஷ்ணர் தமது விளக்கத்தின் ஆரம்பத்தில் கூறுகிறார், “என்னிடம் பற்றுதல் கொண்ட நபரால் இந்த யோக முறையைப் பயிற்சி செய்ய முடியும்.” எனவே, கிருஷ்ணரிடம் பற்றில்லாத சாதாரண மனிதனால் இந்த மிகவுயர்ந்த யோக முறையைப் பயில இயலாது என்பது தெளிவாகிறது. கிருஷ்ணரிடம் பற்றுதல் இல்லாத யோகி வேறு விதமான யோக முறையைப் பயில்கிறான்.
விருந்தாவனத்தில் ஒருநாள் யமுனை நதிக்கரை வழியாக நாங்கள் காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த வேளையில், நதியிலிருந்து சிறிது நீரை எடுத்து வருமாறு ஸ்ரீல பிரபுபாதர் கூறினார். சியாமசுந்தர பிரபு தனது கை நிறைய நீர் எடுத்து வந்தார். ஸ்ரீல பிரபுபாதர் தமது தலையில் சில நீர்த்துளிகளைத் தெளித்துக் கொண்டு, எங்கள் அனைவரையும் அவ்வாறு செய்யுமாறு கூறினார்.
“இது யமுனையில் நீராடியதற்கு சமமானது,” என்று அவர் கூறினார்.
ஸ்ரீமத் பாகவதம் வேத இலக்கியங்களின் கனிந்த பழமாகும். வேத இலக்கியம் கற்பக மரத்துடன் (கல்ப–தருவுடன்) ஒப்பிடப்படுகின்றது. கல்ப என்றால் “விருப்பம்” என்றும், தரு என்றால் “மரம்” என்றும் பொருள். பௌதிக உலகில் வாழும் நமக்கு கல்ப–தருவைப் பற்றிய அனுபவம் ஏதும் இல்லை; கல்ப–தருவானது ஆன்மீக உலகமான கிருஷ்ண லோகத்தில் காணப்படக்கூடியதாகும். பௌதிக உலகில் மாமரத்திலிருந்து மாம்பழங்களை மட்டுமே பெற முடியும், இதர பழங்களைப் பெற முடியாது. ஆனால் கல்ப–தருவிடமிருந்து எல்லா வகையான பழங்களையும் பெற முடியும்.
டைக்கப்பட்ட உயிர்வாழிகளில் முதலானவரான பிரம்மதேவரின் மகனான ஸ்ரீ நாரத முனிவர் பன்னிரண்டு மஹாஜனங்களில் (அதிகாரம் பொருந்திய நபர்களில்) ஒருவராவார். அந்த நாரதரின் போதனைகளை குரு சீட பரம்பரையில் பெற்று தம் புத்தகங்களின் மூலமாக இலட்சோப லட்சம் மக்களிடம் கொண்டு சேர்த்தவர் தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர். குரு சீட பரம்பரையில் வரும் ஆன்மீக குருவானவர் நாரத முனிவரின் பிரதிநிதி என்றும், அவருடைய போதனைகளுக்கும் நாரதரின் போதனைகளுக்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது என்றும் ஸ்ரீல பிரபுபாதர் தமது பாகவத விளக்கவுரையில் (6.5.22) கூறியுள்ளார். நாம் எந்த அளவிற்கு நாரத முனிவரைப் பற்றியும் அவரது சேவகரான ஸ்ரீல பிரபுபாதரைப் பற்றியும் கேட்கின்றோமோ, அந்த அளவிற்கு இவர்கள் இருவரின் உபதேசங்களிலும் செயல்களிலும் இருக்கக்கூடிய ஒற்றுமையினைக் காணலாம்.
குருட்டுத்தனம் வேண்டாம்
இறையுணர்வு, கடவுளின் திருநாமம், சாஸ்திரக் கருத்துகள் முதலியவற்றை குருட்டுத்தனமாகப் பின்பற்றக் கூடாது என்றும், வாத விவாதங்களுடன் ஆராய்ந்து அறிய வேண்டும் என்றும் ஸ்ரீல பிரபுபாதர்...