Back to Godhead பத்திரிகையின் (பகவத் தரிசனத்தின் ஆங்கில மூலம்) நவம்பர் 20, 1958 இதழில் வெளியான இந்த சிந்திக்கத் தூண்டும் சுவாரஸ்யமான கட்டுரையில், ‘திரவ அழகு’ என்ற அற்புதமான கதையை ஸ்ரீல பிரபுபாதர் கூறுகிறார். உண்மையின் இயல்பையும் அழகின் இயல்பையும் அவர் தெளிவாக விளக்குகிறார். இந்த விளக்கம் எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில், உள்ளுறையும் ஆத்மாவை அறிய முற்படுபவர்களுக்கு வியக்கத்தக்க வகையில் பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது.
கிருஷ்ணரே அனைவரையும் ஒருங்கிணைப்பவர்
உலகிலுள்ள பல்வேறு சமயங்களுக்கு மத்தியில் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஆன்மீக இயக்கத்திற்கான தேவைகுறித்து வினவிய கவிஞர் ஆலன் கின்ஸ்பெர்க்கிற்கு தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அளித்த ஆர்வத்தைத் தூண்டும் பதில்கள்
ஆலன் கின்ஸ்பெர்க்: கிருஷ்ண பக்தி இயக்கமோ வேறு எந்த சமய இயக்கமோ, ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே பயன்படும் விதமாக உள்ளது. ஆனால், அனைவரையும் ஒன்று சேர்க்கக்கூடிய ஒரு மிகப்பெரிய ஆன்மீக இயக்கத்திற்கான தேவை அமெரிக்காவில் உள்ளது.
ரத யாத்திரை திருவிழாவின் வெற்றியை எண்ணி ஸ்ரீல பிரபுபாதர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அவர் அம்மகிழ்ச்சியை அனைவரிடமும் இடைவிடாமல் பகிர்ந்து கொண்டிருந்தார். அவர் வினவினார், “நாம் எதற்காக இவ்வெல்லா ஏற்பாடுகளையும் செய்கிறோம்? நம்முடைய எல்லா சக்தியையும் இத்திருவிழாவினை நடத்துவதற்காக ஏன் செலவிடுகிறோம்?” அதுவே வைஷ்ணவரின் கருணை என்று கூறி, அக்கருணையினைப் பற்றி பேசத் தொடங்கினார்.
சந்தன மரம் எங்கு வேண்டுமானாலும் வளரலாம், ஆனால் முன்பு மலேசியாவில் அதிக அளவில் சந்தன மரம் வளர்ந்தமையால் அது மலய சந்தனம் என்று அறியப்பட்டது. அதுபோல, பகவான் கிருஷ்ணரால் எங்கு வேண்டுமானாலும் அவதரிக்க இயலும் என்றபோதிலும், அவர் விருஷ்ணி குலத்தில் அவதரித்தார். முதலில் பலராமரும், பின்னர் கிருஷ்ணரும் தோன்றினர். விருஷ்ணி குலத்தில் தோன்றியதால் கிருஷ்ணருக்கு வார்ஷ்ணேய என்ற நாமமும் வழங்கப்படுகிறது.
நமது ஜன்னலுக்கு வெளிப்புறத்தில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களின் ஒலியினை நாம் செவியுறுகின்றோம். ஆனால், இந்த வாகனங்கள் ஒரு குறிப்பிட்ட தடத்தின் எல்லைக்குள் கவனமாகச் செல்கின்றன, தடம் மாறிச் சென்றால் அவை ஒன்றுக்கொன்று மோதி விபத்து ஏற்படும். அதுபோலவே, கிரகங்கள் ஒவ்வொன்றிற்கும் வரையறுக்கப்பட்ட வேகம் உண்டு. கோடிக்கணக்கான கிரகங்கள் சுற்றிக் கொண்டுள்ளன. ஆனால், அவை மோதிக்கொள்வதில்லை. இந்த ஒழுங்குமுறை எவ்வாறு வடிவமைக்கப்பட்டது? யார் இந்த திறந்தவெளியில் கிரகங்கள் பயணிப்பதற்கான தடத்தினை அமைத்தது?