- Advertisement -spot_img

CATEGORY

ஸ்ரீல பிரபுபாதர்

புலனின்பத்திற்கான இசை

1966ல் நியூயார்க் நகரில், இளைஞன் ஒருவன் இந்தியாவின் புகழ்பெற்ற இசையான சிதார் இசை அடங்கிய ஓர் இசைத்தட்டை எடுத்து வந்தான். அதனை இசைக்கத் தொடங்கியவுடனே ஸ்ரீல பிரபுபாதர் புன்னகைத்தார். அந்த இளைஞன், “இந்த இசை உங்களுக்குப் பிடிக்குமா?” என்றான். அதற்கு ஸ்ரீல பிரபுபாதர், “இது புலனின்பத்திற்கான இசை” என்றார்.

தலைசிறந்த கலைஞர் யார்?

கிருஷ்ணரே தலைசிறந்த கலைஞர் என்று வேதங்கள் கூறுகின்றன: ந தஸ்ய கார்யம் கரணம் ச வித்யதே ந தத் ஸமஷ் சாப்யதிகஷ் ச த்ருஷ்யதே. பரம புருஷரைவிட உயர்ந்தவரோ அவருக்கு சமமானவரோ எவரும் இல்லை. மேலும், அவரே மிகச்சிறந்த கலைஞர் என்பதால், அவர் செய்ய வேண்டிய செயல் என்று எதுவும் இல்லை.

பிரம்மஜோதியில்  கலப்பது  உண்மையான  முக்தியா?

ஸ்ரீல பிரபுபாதர்: தற்போதைய தருணத்தில் பெரும்பாலான மக்கள் இருளில் (அறியாமையில்) மூழ்கியுள்ளனர். ந தே விது: ஸ்வார்த-கதிம் ஹி விஷ்ணும், விஷ்ணு அல்லது கிருஷ்ணரை அறிவதே வாழ்வின் குறிக்கோள் என்பதை அவர்கள் அறிவதில்லை. அறியாமையினால் இந்த பெளதிக வாழ்க்கையே எல்லாம் என்று அவர்கள் ஏற்கின்றனர். பற்பல பிரச்சனைகளைத் தீர்க்க அவர்கள் திட்டமிடுகின்றனர்; ஆயினும், பிறப்பு, இறப்பு முதலிய வாழ்வின் உண்மையான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான திட்டம் அவர்களிடம் இல்லை

மொட்டைத் தலையும் வெறும் காலும்

ஒரு மாலை வேளையில், இலண்டனில் உள்ள பக்திவேதாந்த பண்ணையில், ஸ்ரீல பிரபுபாதர் சீடர்கள் சிலருடனும் விருந்தினர்களுடனும் தமது அறையில் அமர்ந்திருந்தார். ஸ்ரீல பிரபுபாதரை பேட்டி காண வந்த ஒரு பெண் நிருபரும் அங்கே இருந்தார். மிதமான கோடைகாலமாக இருந்தபோதிலும், அந்த பெண் நிருபர் குட்டைப் பாவாடையே அணிந்திருந்தார். ஹரே கிருஷ்ண இயக்கத்தைப் பற்றி அவள் எழுப்பிய சில வினாக்களிலிருந்து, அவளுடைய சந்தேகமும் குறை காணும் மனோபாவமும் வெளிப்பட்டன.

மனிதன் மனிதனாக வாழ

ஜடவுலகிலுள்ள அனைவரும் அறியாமை என்னும் இருளில் பிறக்கின்றனர். இருள் சூழ்ந்த இந்த ஜடவுலகானது சில நேரங்களில் சூரியன், நிலா, நெருப்பு அல்லது மின்சாரத்தால் ஒளியூட்டப்படுகிறது. ஆனால், அதன் இயற்கை தன்மை இருளே. மிகவுயர்ந்த நபரான பிரம்மாவிலிருந்து கடைநிலையிலுள்ள எறும்பு வரை ஜடவுலகிலுள்ள அனைவரும் அறியாமை என்னும் இருளில்தான் பிறக்கின்றனர்.

Latest

- Advertisement -spot_img