- Advertisement -spot_img

CATEGORY

ஸ்ரீமத் பாகவதம்

ரிஷபதேவரின் உபதேசங்கள்

பகவான் ரிஷபதேவர் தம் மைந்தர்களிடம் கூறினார்: “அன்பு மைந்தர்களே! புலனுகர்ச்சிக்காக இரவும்பகலும் கடினமாக உழைக்கக் கூடாது. இத்தகு புலனுகர்ச்சியானது மலம் உண்ணும் பன்றிகளுக்கும் நாய்களுக்கும்கூட கிடைக்கக்கூடியதே. மனித உடலைப் பெற்ற ஒருவன் பக்தித் தொண்டின் தெய்வீக நிலையை அடைவதற்காக தவம் செய்ய வேண்டும். மனதைத் தூய்மைப்படுத்த தவத்தில் ஈடுபட வேண்டும். இவ்வாறாக, நித்தியமான ஆன்மீக ஆனந்தத்தை அடையலாம்.

பிரியவிரதரின் வம்சத்தில் பகவான் ரிஷபதேவர் தோன்றுதல்

பிரியவிரத மஹாராஜர் ஆன்மீக உணர்விற்காக நாட்டை விட்டு கானகம் சென்றதும் அவரது மகன் ஆக்னீத்ரன், ஜம்புத்வீபத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று குடிமக்களைத் தமது சொந்த குழந்தைகளைப் போல் பாதுகாத்து செவ்வனே ஆட்சி செய்தார். அவர் நன்மக்களைப் பெறும் நோக்கத்துடன் மந்தார மலையின் ஒரு குகையினுள் நுழைந்து, பிரம்மதேவரை நோக்கி கடுந்தவம் புரிந்தார். அவரது தவத்தில் மகிழ்ந்த பிரம்மதேவர், பூர்வசித்தி எனும் தேவ கன்னிகையை அவரிடம் அனுப்பி வைத்தார்.

மன்னர் பிரியவிரதரின் செயல்கள்

பரீக்ஷித் மஹாராஜர் சுகதேவ கோஸ்வாமியிடம் வினவினார்: “மாமுனிவரே! தன்னுணர்வு பெற்றவரான பிரியவிரதர், முக்திபெற்ற நிலையில் இருந்தும், ஏன் இல்லற வாழ்வில் இருந்தார்? பக்தர்கள் நிச்சயம் முக்தி அடைந்தவர்கள் என்பதால் அவர்கள் இல்லறச் செயல்களில் ஈடுபடுவது சாத்தியமில்லை. பரம புருஷரின் தாமரைத் திருவடிகளில் அடைக்கலம் புகுந்த மஹாத்மாக்கள் அத்திருவடி தாமரை நிழலின் குளுமையை அனுபவிக்கின்றனர். அத்தகையோருக்கு குடும்பத்தில் ஆசை என்பது நிச்சயம் தோன்றாது. அவ்வாறிருக்க, மன்னர் பிரியவிரதர் மனைவி, மக்கள், வீடு, வாசல் முதலியவற்றில் பெரும் பற்று கொண்டிருந்ததாகத் தோன்றுகிறது; இருப்பினும், அவர் பகவான் கிருஷ்ணரிடத்தில் உறுதியான பக்தியுடன் இருந்தது எவ்வாறு? இதுவே எனது ஆழ்ந்த ஐயமாகும்.

பிரசேதர்களுக்கான நாரதரின் அறிவுரை

முழுமுதற் கடவுளின் ஆசியால் பல்லாயிரம் வருடங்கள் இல்லற வாழ்வில் இருந்த பிரசேதர்கள் ஆன்மீக உணர்வில் பக்குவமடைந்த பின் தம் மனைவியையும் நிர்வாகப் பொறுப்பையும் மைந்தர்களிடம் ஒப்படைத்து விட்டு நாட்டைத் துறந்தனர். பின் ஜாஜலி முனிவர் வாழ்ந்து வந்த மேற்குக் கடற்கரைக்குச் சென்றனர்.

பிரசேதர்கள் பகவானை தரிசித்தல்

பிரசேதர்கள் சிவபெருமானின் உபதேசத்தின்படி கடல் நீரினுள் பகவான் விஷ்ணுவை நோக்கி கடுந்தவம் புரிந்தனர். அவர்களிடம் திருப்தியடைந்த பகவான் விஷ்ணு தமது இனிமையான ரூபத்துடன் அவர்களுக்கு காட்சியளித்தார். பகவான் ஆயுதங்களை ஏந்திய எட்டு கரங்களுடன் மஞ்சள் பட்டாடை உடுத்தி, கெளஸ்துப மாலை மற்றும் கண்ணைப் பறிக்கும் கிரீடம் அணிந்து, தேவர்களாலும் முனிவர்களாலும் போற்றி துதிக்கப்பட்டவராக கருடன் மீது தோன்றினார். கருட தேவர் தம் இறக்கைகளை அசைத்தபடி வேத மந்திரங்களால் பகவானின் புகழ் பாடினார்

Latest

- Advertisement -spot_img