- Advertisement -spot_img

TAG

conversation

அறிவற்ற சமுதாயம்

சமுதாயத்தில் மூளை இல்லாவிடில், அதன் செயல்பாடுகள் அனைத்தும் பயனற்றதாக மாறிவிடும் என்பதை அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தைச் சார்ந்த சார்லஸ் ஹென்னிஸ் என்பவரிடையே எடுத்துரைக்கும் உரையாடல்.

சமூகப் புரட்சி

தற்போதைய நவீன சமுதாயத்திற்கு மாற்று வழியாக, எளிய வாழ்வையும் உயர்ந்த சிந்தனையையும் கொண்ட சமுதாயத்தை அமைப்பது குறித்து, தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதர், ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார...

வல்லான் வகுத்ததே வழியாகுமா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். நம்பிக்கை அவசியமாக இருக்க வேண்டும். எனவேதான், கிருஷ்ணர் பகவத் கீதையில், தானே பரம்பொருள் என்பதை முதலில் நிரூபிக்கின்றார்; அதன் பிறகே தன்னிடம் சரணடையும்படி கூறுகிறார்.

கடவுளும் குருட்டு விஞ்ஞானிகளும்

ஸ்ரீல பிரபுபாதர்: அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது: “ஆம், நீங்கள் கடவுளைப் பார்க்க முடியும், ஆனால் உங்களுக்கு அதற்குரிய பார்வை இல்லை. கண்புரை நோய் ஏற்பட்டுள்ளதுபோல் இருக்கிறீர்கள். என்னிடம் வாருங்கள், நான் அறுவை சிகிச்சை செய்கிறேன். பின்னர், நீங்கள் கடவுளைப் பார்க்கலாம்.” இதனால்தான் வேத நூல்கள், தத் விக்ஞானார்தம் ஸ குரும் ஏவாபிகச்சேத், “கடவுளைக் காண தகுதி வாய்ந்த ஆன்மீக குருவை அணுக வேண்டும்” என்கின்றன. அப்படியிருக்க, அவர்களால் தற்போதைய குருட்டுப் பார்வையுடன் கடவுளை எவ்வாறு காண முடியும்?

பெண்விடுதலை

ஸ்ரீல பிரபுபாதர்: ஒவ்வொரு வருடமும் ஆதரவற்ற குழந்தைகளுக்காக அரசாங்கம் பல கோடி டாலர்களை செலவழிக்க வேண்டியுள்ளது. கணவன் தனது மனைவியை விட்டுச் செல்வதால் இந்த சுமை ஏற்படுகிறது. அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் ஏற்படும் இந்த சுமை நல்லதா?

Latest news

- Advertisement -spot_img