ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காசியிலிருந்து புரிக்குத் திரும்ப ஆவல் கொண்டார். ஸநாதன கோஸ்வாமியிடம் விருந்தாவனத்திலுள்ள ரூபர் மற்றும் அனுபமருடன் இணையும்படியும், வைஷ்ணவ நடத்தையைப் பற்றி ஒரு நூலினை எழுதும்படியும், விருந்தாவனப் பகுதிகளில் கிருஷ்ணரின் லீலைகள் நடைபெற்ற இடங்களைக் கண்டுபிடித்துப் புதுப்பிக்கும்படியும், கிருஷ்ண உணர்வைப் பரப்புவதற்கு வாழ்வை அர்ப்பணிக்கும்படியும், விருந்தாவனத்திற்கு வருகைதரும் பக்தர்களுக்கு அடைக்கலம் கொடுத்து பார்த்துக்கொள்ளும்படியும் மஹாபிரபு அறிவுறுத்தினார்.