- Advertisement -spot_img

TAG

karma

பிரம்மஜோதியில்  கலப்பது  உண்மையான  முக்தியா?

ஸ்ரீல பிரபுபாதர்: தற்போதைய தருணத்தில் பெரும்பாலான மக்கள் இருளில் (அறியாமையில்) மூழ்கியுள்ளனர். ந தே விது: ஸ்வார்த-கதிம் ஹி விஷ்ணும், விஷ்ணு அல்லது கிருஷ்ணரை அறிவதே வாழ்வின் குறிக்கோள் என்பதை அவர்கள் அறிவதில்லை. அறியாமையினால் இந்த பெளதிக வாழ்க்கையே எல்லாம் என்று அவர்கள் ஏற்கின்றனர். பற்பல பிரச்சனைகளைத் தீர்க்க அவர்கள் திட்டமிடுகின்றனர்; ஆயினும், பிறப்பு, இறப்பு முதலிய வாழ்வின் உண்மையான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான திட்டம் அவர்களிடம் இல்லை

தவத்தினால் கடவுளை உணர்தல்

பரம்பொருளின் மூன்று தோற்றங்களை சூரியனை உதாரணமாக வைத்து புரிந்துகொள்ளலாம். சூரியக் கதிர்களைக் கொண்டு சூரியனை எளிதில் உணரலாம், இது முதல் நிலை. சூரிய கிரகத்தை உணர்வது இரண்டாவது நிலை. சூரிய கிரகத்திற்கு நம்மால் செல்ல இயலாது. நவீன விஞ்ஞான கணக்கின்படி சூரியன் பூமியிலிருந்து 930 இலட்சம் மைல்களுக்கு அப்பால் அமைந்துள்ளது. சூரியன் இவ்வளவு தொலைவில் உள்ளபோதிலும், அதன் வெப்பத்தை நம்மால் தாங்க முடிவதில்லை. ஆகவே, சூரிய கிரகத்திற்கு சென்றால் நமது நிலை என்னவாகும் என்பதைச் சற்று சிந்தியுங்கள். சூரிய கிரகத்திலிருந்து பல இலட்சம் மைல்களுக்கு முன்பாகவே நாம் சூரிய வெப்பத்தால் எரிக்கப்பட்டுவிடுவோம்.

தூய பக்தி

தூய ஆத்மாவானது பௌதிக வாழ்வின் இன்ப துன்பம், விருப்பு வெறுப்பு முதலியவற்றிற்கு அப்பாற்பட்டது. எதையும் எதிர்பார்க்காமல் செய்யப்படும் தூய பக்தி நிலையில் மட்டுமே அத்தளத்தை அடைய முடியும். சேவை செய்யும் நிலையை தாமாக முன்வந்து ஏற்க வேண்டும். தூய பக்தி என்பது வெறும் மனதளவில் உள்ள உணர்ச்சி அல்ல; மாறாக, நமது அன்பிற்கு பாத்திரமான பகவான் கிருஷ்ணருக்கு நம்மை முழுமையாக அர்ப்பணித்து சேவை செய்வதாகும். தூய பக்தி பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது.

திருநாமத்தின் மகிமை

இந்த வாரம், திருநாம வாரம். இந்தத் திருநாமம் பகவானிடமிருந்து வேறுபட்டதல்ல என்பதால், விருந்தாவனத்திலுள்ள பக்தர்கள் அனைவரும் கிருஷ்ணரின் திருநாமத்தை எப்போதும் உச்சரிக்கின்றனர். கோபியர்கள் ராஸ நடனத்தின்போது ஹரே கிருஷ்ண மந்திரத்தை உரைக்கின்றனர், அன்னை யசோதை தயிர் கடையும்போது கிருஷ்ணரின் நாமத்தை உச்சரிக்கிறாள், விருந்தாவனவாசிகள் அனைவரும் கிருஷ்ண நாமத்தை எப்போதும் உரைக்கின்றனர். எனவே, இந்த கிருஷ்ண நாம ஸங்கீர்த்தனம், கோலோகேர ப்ரேம தன ஹரி-நாம ஸங்கீர்தன, கோலோக விருந்தாவனத்திலிருந்து கிருஷ்ண பிரேமையைக் கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

வாழ்வில் வெற்றியடைய…

ஒருவன் ஆன்மீக வாழ்வின் முக்கியத்துவத்தைப் பற்றி கேட்டறியாத வரை, அவன் அறியாமையினால் எழும் துன்பங்களுக்கு ஆளாகி வீணாகிறான். பாவமாயினும் புண்ணியமாயினும் எல்லாச் செயல்களுக்கும் (கர்மத்திற்கும்) உரிய விளைவுகள் உண்டு. ஒருவன் கர்மத்தில் ஈடுபட்டிருந்தால், அஃது எத்தகையதாக இருந்தாலும், அவனது மனம் கர்மாத்மக, அதாவது, பலன்நோக்குச் செயல்களால் நிறைந்ததாகும். மனம் களங்கமாக இருக்கும் வரை உணர்வு தெளிவாக இருக்காது. பலன்நோக்குச் செயல்களில் ஒருவன் மூழ்கியிருக்கும் வரை, அவன் பௌதிக உடலை ஏற்றாக வேண்டும்.” (ஸ்ரீமத் பாகவதம் 5.5.5)

Latest news

- Advertisement -spot_img