மனம் பலன்நோக்குச் செயல்களால் மாசுபடும்போது, உயிர்வாழி ஒரு பௌதிக நிலையிலிருந்து மற்றொன்றிற்கு உயர விருப்பப்படுகிறான். பொதுவாக ஒவ்வொருவரும் தத்தமது பொருளாதார நிலையை முன்னேற்றுவதற்காக அல்லும்பகலும் அரும்பாடுபட்டு உழைக்கிறார்கள். ஒருவன் வேதச் சடங்குகளைப் புரிந்து கொண்டால்கூட, ஸ்வர்க லோகத்திற்குச் செல்லவே ஆசைப்படுகிறான்
கல்கத்தா, ஆகஸ்ட் 13, 1965: வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கல்கத்தாவிலிருந்து நியூயார்க் நோக்கி புறப்படவிருந்த ஸிந்தியா நேவிகேஷன் கம்பெனிக்கு சொந்தமான ஜலதூதா சரக்குக் கப்பலின் ஒரே பயணியர் அறையில் நியூயார்க் செல்வதற்கான இலவச டிக்கெட்டுடன் பயணத்திற்கு ஆயத்தமாக இருந்தார் 69 வயது நிரம்பிய பக்திவேதாந்த சுவாமி. கப்பல் துறைமுகத்தை விட்டு புறப்பட்ட சமயத்தில், தனது பயணத்திற்கெல்லாம் சுமதி மொரார்ஜியை உதவி செய்யத் தூண்டிய கிருஷ்ணருக்கு நன்றி என்று அவர் தனது டைரியில் எழுதினார்.
கடவுளைப் பற்றி நவீன நாகரிக மனிதனிடம் பலதரப்பட்ட கருத்துகள் இருக்கலாம். குழந்தைகள் ஒரு வயதான மனிதரை தாடியுடன் இருப்பதாகக் கற்பனை செய்கின்றனர், பல இளைஞர்கள் கடவுளை கண்களுக்குப் புலப்படாத சக்தி என்றோ மனக் கற்பனை என்றோ நினைக்கலாம். இந்த உரையில், ஸ்ரீல பிரபுபாதர் கிருஷ்ண உணர்வைப் பற்றிய தத்துவத்தை மிகவும் விளக்கமாக ஆச்சரியப்படத்தக்க வகையில் விளக்குகிறார்.
உணர்வு பரிணாமம், உடல் பரிணாமம்
ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்
டாக்டர் சிங்க்: ஸ்ரீல பிரபுபாதரே, 84 இலட்சம் உயிரின வகைகளும் ஒரே சமயத்தில் சிருஷ்டிக்கப்பட்டன என்று நான் பகவத் கீதையில் படித்தேன். அது சரியா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம்.
டாக்டர் சிங்க்:...