- Advertisement -spot_img

TAG

srimad bhagavatam

பக்தித் தொண்டின் விரிவான விளக்கம்

பக்தன் எப்போதும் தனது நேரத்தை பகவானின் புனித நாமங்களை உச்சரிப்பதிலும் பகவானின் பெருமைகளைக் கேட்பதிலும் பயன்படுத்த வேண்டும். தன் நடத்தையில் ஒளிவுமறைவின்றி எளிமையாக புலனடக்கத்துடன் இருக்க வேண்டும். அனைவரிடமும் நட்பு பாராட்டும் அதே சமயத்தில் பக்தரல்லாதோரிடம் நட்பைத் தவிர்க்க வேண்டும்.

பக்தித் தொண்டின் மீதான கபிலரின் அறிவுரைகள்

பகவான் கபிலர் தனது அன்னையிடம் தொடர்ந்து விளக்கினார். மனதை ஒருமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட யோகப் பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் ஒருவர் மகிழ்ச்சியடைய முடியும், பரம புருஷ பகவானைப் புரிந்துகொள்ளும் வழியில் முன்னேற முடியும். ஒருவர் தனக்கென்று விதிக்கப்பட்டுள்ள கடமைகளை தனது முழுத் திறனையும் பயன்படுத்தி நிறைவேற்ற வேண்டும்.

தேவகியின் குழந்தைகள் கம்சனால் கொல்லப்பட்டது ஏன்?

கிருஷ்ணர் தேவகியின் எட்டாவது மகனாகப் பிறந்து கம்சனை வதம் செய்தார் என்பதும், தேவகிக்கு முதலில் பிறந்த ஆறு குழந்தைகள் கம்சனால் கொல்லப்பட்டனர் என்பதும் தெரிந்த கதை. அக்குழந்தைகள் யார் அவர்கள் ஏன் கம்சனால் கொல்லப்பட்டனர் என்பது தெரியாத துணுக்கு.

ஜட இயற்கையைப் புரிந்துகொள்ளுதல்

தன்னையுணர்ந்த ஆத்மா தான் பகவானின் நித்திய தொண்டன் என்று நினைக்கும்பொழுது, ஸத்வ, ரஜோ, தமோ குணங்களிலிருந்து விடுபட்டு, சுத்த-ஸத்வ நிலையை அடைகிறது. மேலும், உடல் மற்றும் மனமே தான் என்னும் தவறான எண்ணத்திலிருந்து விடுதலை அடைகிறது. தூய பக்தர் பௌதிக இன்பத்திற்கான பொருட்களுடன் தொடர்புடையவராக தோன்றினாலும் அவர் பொய் அஹங்காரத்திலிருந்து விடுபட்டவர் என்பதை அறிய வேண்டும்.

ஜட இயற்கையின் அடிப்படை தத்துவங்கள்

மொத்த மூலப்பொருளான பிரதானம் இருபத்து நான்கு மூலப்பொருட்களை சூட்சும நிலையில் கொண்டுள்ளது, அவையாவன: நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் (பஞ்ச பூதங்கள்) மணம், சுவை, உருவம், தொடுவுணர்ச்சி, சப்தம் (புலனுகர்ச்சி பொருட்கள்), மூக்கு, நாக்கு, கண், தோல், காது (ஐந்து ஞான இந்திரியங்கள்), கை, கால், வாய், ஆசனவாய், பாலுறுப்பு (ஐந்து செயல்புலன்கள் எனப்படும் கர்ம இந்திரியங்கள்) மனம், புத்தி, அஹங்காரம், மற்றும் மாசடைந்த உணர்வு.

Latest news

- Advertisement -spot_img