- Advertisement -spot_img

TAG

srimad bhagavatam

நாரதருக்கும் பிராசீனபர்ஹிக்கும் இடையிலான உரையாடல்

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ் அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12...

புரஞ்ஜனன் மறுபிறவியில் பெண்ணாகப் பிறத்தல்

மன்னன் புரஞ்ஜனன் மிகுந்த கர்வத்துடன் தனது வில்லையும் அம்பையும் ஏந்தி, ஐந்து குதிரைகள் பூட்டிய தேரில் “பஞ்ச பிரஸ்தம்” எனும் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அசுர மனப்பான்மையுடன் அங்கிருந்த விலங்குகளை இரக்கமின்றி கொன்று குவித்தான். இதைக் கண்டு கருணை மனம் படைத்தவர்கள் மிகுந்த துக்கத்தில் ஆழ்ந்தனர்.

மன்னன் புரஞ்ஜனனைப் பற்றிய வர்ணனை

அரச குமாரர்களால் துதிக்கப்பட்ட சிவபெருமான் அங்கிருந்து மறைந்தார். சிவபெருமானால் உபதேசிக்கப்பட்ட ஸ்தோத்திரத்தை பிரசேதர்கள் நீருக்குள் நின்றபடி பத்தாயிரம் வருடங்கள் ஜபித்து தவம் இயற்றினர். அவர்களின் தந்தையான மன்னர் பிராசீனபர்ஹிஷத் பற்பல யாகங்களைச் செய்து கொண்டிருந்தார். அச்சமயத்தில் நாரத முனிவர் மன்னருக்கு தூய பக்தியை உபதேசிக்கும் பொருட்டு கருணையோடு அங்கு எழுந்தருளினார்.

சிவபெருமானின் பாடல்

பிருது மஹாராஜருக்கு பிறகு அவரது மகன் விஜிதாஸ்வன் தன் தந்தையைப் போலவே பெரும் புகழ்பெற்ற மன்னனாக விளங்கினான், தனது அன்பிற்குரிய சகோதரர்களிடம் பூமியின் நான்கு திசைகளை நிர்வகிக்கும் பொறுப்பினை வழங்கினான்.

பிருது மஹாராஜர் வைகுண்டம் திரும்புதல்

பிருது மஹாராஜர் தம் வாழ்வின் இறுதிக் காலத்தில், எல்லாருக்கும் ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்தார். தம் மைந்தர்கள் ஐவரையும், தம் மகளாக பாவித்த இப்பூமிக்கு அர்ப்பணித்தார். அவர் தமது கடமைகளைச் சரிவர நிறைவேற்றிய பிறகு, தவம் செய்வதற்காக மனைவியுடன் வனத்திற்குச் சென்றார். வனத்தில் வானபிரஸ்த வாழ்விற்குரிய விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றி, மிகுந்த கவனத்துடன் தவ வாழ்வை மேற்கொண்டார். அவர் ஆரம்பத்தில் கிழங்குகளையும் கனிகளையும் உட்கொண்டார், வாரக்கணக்கில் தண்ணீர் மட்டுமே அருந்தி வாழ்ந்தார், இறுதியாக காற்றை மட்டுமே சுவாசித்து வாழ்ந்தார்.

Latest news

- Advertisement -spot_img