- Advertisement -spot_img

TAG

sword of knowledge

பகவத் கீதையை வீட்டில் வைத்து படிக்கலாமா?

வேத ஞானத்தின் சாரமான பகவத் கீதை எல்லா ஆச்சாரியர்களாலும் போற்றப்பட்டு வந்துள்ளது. நான் யார், கடவுள் யார், கடவுளுக்கும் எனக்கும் என்ன தொடர்பு, நான் ஏன் இந்த உலகில் துன்பப்படுகிறேன், எனது துன்பத்திற்கு நிரந்தர தீர்வு உண்டா, மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது போன்றவற்றை அறிய விரும்புவோர் கீதையைப் படிக்கலாம். கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் குருக்ஷேத்திர போர்க்களத்தில் நிகழ்ந்த இந்த உரையாடல், உலக வாழ்க்கை என்னும் நிரந்தர போர்க்களத்தில் சிக்கித் தவிக்கும் எல்லா ஜீவன்களுக்கும் உரியதாகும். இதைப் படிப்பதால், உலக வாழ்வின் எல்லா பிரச்சனைகளிலிருந்தும் நிரந்தர விடுதலையைப் பெற முடியும்.

மஹாபாரதம், நம்பக்கூடியதா?

அன்றும் இன்றும் என்றும் மஹாபாரதம் மக்களைக் கவரும் ஒரு காவியம், இதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. மஹாபாரதக் கதைகள் தொன்றுதொட்டு பாரதத்தின் பட்டிதொட்டி எங்கும் பேசப்பட்டு வந்தன, ஒவ்வொரு மாலையிலும் மஹாபாரதம் கேட்பது என்பது எல்லா ஊர்களிலும் இருந்துவந்த சராசரி பழக்கம். தொலைக்காட்சியின் வருகையினாலும் நவீன வாழ்க்கை முறையினாலும் அத்தகைய பழக்கம் இன்று ஏறக்குறைய அழிந்துவிட்டது என்று கூறலாம். இருப்பினும், அதே தொலைக்காட்சியில் மஹாபாரதம் ஒளிபரப்பப்படும்போது, அஃது இன்றும் மக்களால் விரும்பி பார்க்கப்படுகிறது.

யோகப் பயிற்சியும் உடற்பயிற்சியும்

சர்க்கரை நோயைத் தீர்க்கும் யோகம், இரத்த அழுத்தத்தை சீரமைக்கும் யோகம், மூட்டு வலியை நீக்கும் யோகம், முதுகு வலியிலிருந்து விடுபடுவதற்கான யோகம், வயிற்று உபாதைகளை தீர்க்கும் யோகம் என பல்வேறு யோகப் பயிற்சிகள்; எல்லாவற்றையும் விட உடல் பருமனை குறைக்கும் யோகம் தற்போதைய நவீன உலகில் மிகவும் பிரபலமாக (குறிப்பாக, அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில்) உள்ளது. இவையெல்லாம் யோகப் பயிற்சி அல்ல, வெறும் உடற்பயிற்சியே என்பதை இங்கே ஆசிரியர் தெளிவாக விளக்குகிறார்.

ஹரியும் சிவனும் ஒன்றா? அறியாதவன் வாயில் மண்ணா?

சைவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் இடையிலான அபிப்பிராய பேதங்களும் சண்டை சச்சரவுகளும் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. சிலர் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்றும், வேறு சிலர் விஷ்ணுவே முழுமுதற் கடவுள் என்றும் கூறி, சிவனையும் விஷ்ணுவையும் வெவ்வேறு துருவங்களாக வழிபடுகின்றனர். இவர்களுக்கு மத்தியில், ஹரியும் சிவனும் ஒன்று, அறியாதவன் வாயில் மண்ணு” என்று கூறி, இருவரையும் சமாதானப்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். இவர்களின் வாதங்கள் ஒருபுறம் இருக்க, சாஸ்திரங்களின் அடிப்படையில் மக்களிடம் உள்ள தவறான கருத்துகளை தெளிவுபடுத்தும் இந்த ஞானவாள் பகுதியில், இதனைச் சற்று ஆராய்ந்து பார்ப்போம்.

கோபியர்களுடனான கிருஷ்ணரின் நடனம்

கிருஷ்ணர் ஏன் கோபியர்களுடன் நடனமாடினார்? அவர் ஏன் எப்போதும் கோபியர்களுடன் காட்சியளிக்கிறார்? போன்ற கேள்விகள் பல்வேறு கோணங்களில் நேற்று, இன்று, நாளை என்று என்றென்றும் எழும் கேள்விகள். சாஸ்திரங்களும் பல்வேறு ஆச்சாரியர்களும் இதற்கு வழங்கியுள்ள பதில்கள் புத்திக்கூர்மையுள்ள அனைவரையும் திருப்திப்படுத்துபவை.

Latest news

- Advertisement -spot_img