TAG
tamil culture
தமிழன்: கடவுள் கொள்கை அற்றவனா?
வழங்கியவர்: ஸந்தான கிருஷ்ண தாஸ் தமிழ் ஆர்வலர்கள் என்ற போர்வையில் உள்ள பெயரளவிலான தமிழ் அரசியல்வாதிகள், இனவாதிகள், நாத்திகவாதிகள் முதலானவர்கள் “தமிழன்: கடவுள் கொள்கை அற்றவன்” என்று கூறி வருகின்றனர். ஆனால், வேத இலக்கியங்களைப்...
தமிழ் மொழியும் தமிழ் பண்பாடும்
தொன்றுதொட்டு சீரும் சிறப்புமாகத் திகழும் நம் தமிழ் மொழி, செம்மொழி என்னும் சிறப்பைப் பெற்று அதனைத் தற்போது கொண்டாடி வருகிறோம். கலைஞர்கள், அறிஞர்கள், புலவர்கள் என பற்பல சான்றோர்களைப் பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் போற்றிப் புகழும் இத்தருணத்தில், செம்மொழியான தமிழ் மொழி மெல்லமெல்ல கரைந்து வருவது எவராலும் மறுக்க முடியாத கசப்பான உண்மை. கடையேழு வள்ளல்களைக் கண்ட தமிழ்த்தாய், தற்போது ஈகைத் தன்மையே இல்லாதவர்களைக் காண்கிறாள். கண்ணகியையும் கோப்பெருந்தேவியையும் கண்ட தமிழ்த்தாய், தற்போது கற்பற்ற மங்கையர்கள் பாராட்டப்படுவதைக் கேட்கிறாள். இனிமையான பக்திப் பாடல்களால் அலங்கரிக்கப்பட்ட தமிழ்த்தாய், தற்போது கொச்சையான ஆபாசமான பாடல்களால் சிதறடிக்கப்படுகிறாள். ஏன் இந்த சீர்கேடு? இந்த சீர்கெட்ட நிலை குறித்து சற்று அலசிப் பார்ப்போம்.

