- Advertisement -spot_img

CATEGORY

சமுதாய பார்வை

பழிக்குப் பழி

மனிதர்களிடையே தங்களுக்கு தீங்கு இழைத்தவர்களை பழி வாங்கும் குணம் இருக்கிறது. ஒரு சிறிய நிகழ்வு தொடர் நிகழ்வுகளாகி பேரழிவை ஏற்படுத்தியதை வரலாற்றில் கேள்விப்பட்டுள்ளோம். யாராவது நம்மை அவதூறாகப் பேசினாலோ தவறாக நடத்தினாலோ அவர்களை எப்படி பழி வாங்கலாம் என்பதிலேயே மனம் குறியாக இருக்கிறது. ஆனால் இதிகாச வரலாற்றில் பக்தர்கள் எதிர்மறையான நிகழ்வுகளை எவ்வாறு சந்தித்தனர், தங்களுக்கு தீங்கு செய்தவர்களிடம் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

இஸ்கான் இயக்கம் சாமியார்களுக்கா?

கிருஷ்ண பக்தியைப் பயிலுதல், பகவத் கீதையைப் படித்தல், இஸ்கான் இயக்கத்தில் தீவிரமாக பங்குகொள்ளுதல் முதலிய ஆன்மீகச் செயல்கள் அனைத்தும் சமுதாய நிலைகளுக்கு அப்பாற்பட்டவை. உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, படித்தவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன், இந்து, முஸ்லீம், கிறிஸ்துவன் முதலியவை மட்டுமின்றி, இல்லறத்தில் இருப்பவர்கள், துறவியாக இருப்பவர்கள் என எவ்வித பாகுபாடும் இல்லாமல், அனைவரும் கிருஷ்ண பக்தியில் பங்கேற்கலாம். பகவத் கீதை அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்டது. அர்ஜுனன் ஒரு துறவியா என்ன! உண்மையைச் சொல்லப்போனால், பகவத் கீதையைக் கேட்பதற்கு முன்பாக அர்ஜுனன் துறவறம் பூண்டு கானகம் செல்ல விரும்பினான். ஆனால் கீதையைக் கேட்ட பின்னர், கிருஷ்ணரது அறிவுரையின்படி போரிட ஒப்புக் கொண்டான். அவ்வாறு இருக்கையில் கீதையைப் படித்தால் சந்நியாசியாகி விடுவார்கள் என்று சிலர் கூறுவதில் ஏதேனும் அர்த்தம் உள்ளதா?

தீதும் நன்றும் பிறர்தர வாரா

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் பல அசம்பாவிதங்களையும் துயரங்களையும் ஏமாற்றங்களையும் ஆபத்துகளையும் அநீதிகளையும் சந்திக்கின்றான். நேர்மையாக வாழ்ந்தும் பலனில்லாமல் போய்விட்டதே? இத்தகு கஷ்டங்கள் எனக்கு மட்டும் ஏன் நிகழ்கின்றன? துயரங்களுக்கான காரணம் என்ன? அநியாயங்களை தட்டிக்கேட்பார் யாரும் இல்லையா? என பல வினாக்கள் மனதில் எழுகின்றன.

பாலியல் தொந்தரவுகள் என்ன செய்யலாம்?

பணிபுரியும் இடத்தில் பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றனர். இதை தைரியமாக வெளியில் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக #MeToo என்ற பெயரில் பல தகவல்கள் சமீப காலத்தில் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன்பு உருவெடுத்த இந்தக் கருத்து புரட்சி இந்தியாவிலும் ஓரளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது. பாலியல் தொந்தரவுகள் அங்கங்கே இருப்பதை அனைவரும் அறிவர். இதனை ஊரறியத் தெரிவிப்பது குற்றத்தைக் குறைக்குமா, வேறு தீர்வுகள் உண்டா, சற்று ஆராய்வோம்.

உறவுகள் கசந்ததால் கனவுகள் கலைந்ததா?

ஆண்டி முதல் அரசன் வரை அனைவரும் துன்பத்தைத் தவிர்த்து இன்பமாக வாழவே விரும்புகின்றனர். நமது இன்பதுன்பங்களை பிறரிடம் பகிர்ந்துகொள்ளும்போது. இன்பம் இரட்டிப்பாகும் என்றும், துன்பம் பாதியாகக் குறையும் என்றும் மக்கள் கூறுவது வழக்கம். எனவே, மனித சமுதாயத்தில் கணவன், மனைவி, தாய், தந்தை, குழந்தை, சகோதரன், சகோதரி, தாத்தா, பாட்டி, நண்பன், அக்கம்பக்கத்தினர், உடன் பணிபுரிவோர் என உறவுமுறைகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. உறவுகளை அடிப்படையாகக் கொண்டே குடும்பமும் சமுதாயமும் இயங்குகின்றன. பலர் குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சியே தமது மகிழ்ச்சி என வாழ்கின்றனர். குடும்ப உறுப்பினர்களிடம் ஒருவர் பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தினாலும், குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக எந்தவொரு தியாகத்தையும் ஏற்கின்றார். இவற்றிலிருந்து உறவுகளில் கிடைக்கும் அன்பு, பாசம், நேசத்திற்கு மனிதன் இயற்கையாகக் கட்டுப்படுகிறான் என்பதை அறிய முடிகிறது.

Latest

- Advertisement -spot_img