- Advertisement -spot_img

CATEGORY

தத்துவம்

ஸ்ரீ ஜெயதேவ கோஸ்வாமி

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு இவ்வுலகில் அவதரிப்பதற்கு சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர், ஜெயதேவர் 12ஆம் நூற்றாண்டில் போஜதேவருக்கும் ரமாதேவிக்கும் நன்மகனாகத் தோன்றினார். இவரது பிறப்பிடம் வங்காளத்தின் பிர்பும் மாவட்டத்திலுள்ள கெந்துபில்வா என்று சிலர் கூறுகின்றனர், வேறு சிலரோ ஒடிஸாவிலுள்ள கெந்துளி சாசன் என்று கூறுகின்றனர். ஜெயதேவரின் பிறப்பிடம் குறித்து ஒடியர்களுக்கும் வங்காளர்களுக்கும் பல நூற்றாண்டுகளாக விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. இன்றும்கூட அறிஞர்களிடையே இதுகுறித்து அபிப்பிராய பேதம் காணப்படுகிறது.

ஸ்வர்கமும் வைகுண்டமும் ஒன்றா?

இறை நம்பிக்கை உள்ளவர்கள் பலரும் ஸ்வர்கம் செல்ல பேரார்வம் காட்டுகின்றனர். இந்துக்கள் மட்டுமல்லாது இதர மதத்தினரும் ஸ்வர்கத்திற்குச் செல்வதை விரும்புகின்றனர். இறை நம்பிக்கை இல்லாதவர்களும்கூட சில சமயங்களில் தங்களுக்கு நெருக்கமானவர்கள் மரணிக்கும்போது, அவர்கள் ஸ்வர்கத்தை அடைந்து விட்டனர் என குறிப்பிடுகின்றனர். பெருமாள் கோயிலில் உள்ள வைகுண்ட வாசல் அல்லது பரமபத வாசலை ஸ்வர்க வாசல்” என்று அழைத்து, ஸ்வர்கத்திற்கு செல்லும் தங்களது ஆர்வத்தை மக்கள் வெளிப்படுத்துகின்றனர். ஸ்வர்கத்தை அடைவதே தங்களது வாழ்வின் இலட்சியமாகக் கருதும் இவர்கள் பௌதிக, ஆன்மீக உலகின் தன்மைகளை சற்றேனும் அறிந்துகொள்வது அவசியம்.

தூய பக்தி

தூய ஆத்மாவானது பௌதிக வாழ்வின் இன்ப துன்பம், விருப்பு வெறுப்பு முதலியவற்றிற்கு அப்பாற்பட்டது. எதையும் எதிர்பார்க்காமல் செய்யப்படும் தூய பக்தி நிலையில் மட்டுமே அத்தளத்தை அடைய முடியும். சேவை செய்யும் நிலையை தாமாக முன்வந்து ஏற்க வேண்டும். தூய பக்தி என்பது வெறும் மனதளவில் உள்ள உணர்ச்சி அல்ல; மாறாக, நமது அன்பிற்கு பாத்திரமான பகவான் கிருஷ்ணருக்கு நம்மை முழுமையாக அர்ப்பணித்து சேவை செய்வதாகும். தூய பக்தி பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது.

தூய பக்தி

பக்தி என்றால் அன்பு அல்லது பற்றுதல் என்று பொருள். பக்தி என்னும் சமஸ்கிருத சொல் இந்தியாவின் பெரும்பாலான மொழிகளில் இன்று இன்று பயன்படுத்தப்படுவதால், 100 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு இச்சொல் பரிச்சயமானதே. ஸ்ரீல பிரபுபாதராலும் இதர சிலராலும் இச்சொல் தற்போது மேற்கத்திய உலகிலும் பிரபலமடைந்து வருகிறது.

ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் லீலைகளை எடுத்துரைக்கும் புகழ்பெற்ற நூலான ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் ஆசிரியருடைய வாழ்க்கை வரலாற்றைக் காண்போம். வழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ் ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ...

Latest

- Advertisement -spot_img