ஸ்ரீ முஷ்ணம்

Must read

Jivana Gaurahari Dasa
திரு. ஜீவன கௌர ஹரி தாஸ் அவர்கள், சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வண்ணம் கிருஷ்ண பக்தியை பயிற்சி செய்து வருகிறார்.

ஆதி வராஹ பெருமானின் சுயும்ப  க்ஷேத்திரம்,

-ஜீவன கௌர ஹரி தாஸ்,

இன்றைய இந்தியாவின் தமிழக மாநிலத்தில் விருத்தகாசி என்றழைக்கப்படுகிற விருத்தாசலத்திலிருந்து 20 கிமீ தொலைவில் தெற்கு திசையில் அமைந்திருப்பதே ஸ்ரீ முஷ்ணம் என்னும் திருத்தலம். ஆதி வராஹ பெருமாள் திவ்யமான பன்றி ரூபத்தில் தோன்றியதால் இவ்விடம் வராஹ க்ஷேத்திரம் என்று போற்றப்படுகிறது. சைதன்ய மஹாபிரபு தென்னிந்திய பயணத்தின் போது தரிசித்த இவ்விடத்தை விருத்தகோலா என்றும் அறியப்படுகிறது, வராஹ பெருமாள் சுயம்புவாக தோன்றியதால் சுயம்வ்யக்த க்ஷேத்திரம் என்றும் இவ்விடம் புகழப்படுகிறது. இத்திருக்கோயிலின் வரலாற்றை அறிவதற்கு முன் வராஹ அவதாரத்தின் பின்னணியை சற்றேனும் தெரிந்து கொள்வது அவசியம்.

வராஹ அவதாரம்

முந்தைய யுகத்தில் ஒரு நாள் மாலை வேளையில் மரீச்சியின் புதல்வனான கஷ்யப முனிவர், பகவான் விஷ்ணுவை வழிபட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் தக்ஷணின் மகளான திதி தன் கணவரான கஷ்யபரை அணுகி தன் காம இச்சைகளை உடனடியாக தணிக்கும் படி மன்றாடினாள். அந்த அமங்களகரமான மாலை வேளையில் கஷ்யப முனிவரும், திதியும் ஒன்று கூடினர். தவறான நேரத்தில் ஒன்று கூடியதை நினைத்து திதி வருத்தப்பட்டு அழுதாள். அப்போது காஷ்யப முனிவர் திதியிடம் கவலை கொள்ள வேண்டாம், உனக்கு பிறக்க இருக்கும் இரு புதல்வர்கள் உலகையே அச்சுறுத்தும் அசுரர்களாக இருந்தாலும், உன் பேரன் பிரஹ்லாதன் சிறந்த ஹரி பக்தனாக திகழ்வான் என தேற்றினார்.

பிரஹ்லாதனின் திவ்யமான குணங்களையும், புகழையும் கேட்ட திதி மிகவும் மகிழ்வுற்றாள். அதே சமயம் திதி தன் இரு அசுர குழந்தைகளான ஶிஶிஹிரண்யாக்ஷன்ன் மற்றும் ஹிரண்யகசிபுவை தன் கருவில் 100 வருடம் சுமந்தாள். இந்த இரு அசுர குழந்தைகளும் பூமியில் பிறப்பதற்கு காரணமாக வைகுண்டத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவமும் நடைபெற்றது.

நான்கு குமாரர்களின் சாபம்

அதன்படி நான்கு குமாரர்களான ஸனக, ஸனாதன, ஸனந்தா, ஸனத் குமரர் ஒரு நாள் நாராயணரை தரிசிப்பதற்கு வைகுண்டம் சென்றனர். அந்த நான்கு குமாரர்கள் வைகுண்டத்திற்கு உள்ளே செல்ல முனைந்த போது வாயிற் பாதுகாவலர்களான ஜெயன் மற்றும் விஜயன் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் கோபம் அடைந்த நான்கு குமாரர்கள் ஜெயன், விஜயனை கீழான பௌதிக உலகில் பிறக்கும் படி சபித்தனர். இச்செய்தியை அறிந்த நாராயணர் வைகுண்டத்தின் நுழைவாயிலுக்கு விரைந்தார். ஜெயன், விஜயனின் எஜமானர் என்கிற முறையில் தன் சேவகர்களின் தவறுக்காக நாராயணர் நான்கு குமாரர்களிடம் முதலில் மன்னிப்பு கேட்டார். பிராமணர்களின் சாபத்தை தன்னால் போக்க முடியாது என தெரிவித்த நாராயணர் பின் ஜெயன், விஜயனிடம் பௌதிக உலகில் மூன்று பிறவிகளுக்கு எனக்கு எதிரியாக பிறக்க விருப்பப்படுகிறீர்களா அல்லது ஏழு பிறவிகளுக்கு எனக்கு நண்பராக இருக்க விருப்பப்படுகிறீர்களா என கேட்டார்.

வைகுண்டத்தில் இருக்கும் நாராயணரை ஏழு பிறவிகளுக்கு பிரிந்திருப்பதை விட மூன்று பிறவியில் எதிரியாக செயல்பட்டு விரைவாக வைகுண்டத்திற்கே வந்து விடும் நோக்கத்தில் அவர்கள் இருவரும் அசுரர்களாக செயல் பட முன் வந்தனர். அப்போது நாராயணர் நான்கு குமாரர்களின் சாபம் தன்னால் அங்கீகரிக்கப்பட்டது என்றும் தன்னுடைய விருப்பமும் அதுவே என தெரிவித்தார். பகவான் நாராயணரின் திட்டத்தை தங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என தெரிவித்த நான்கு குமாரர்கள் , தாங்கள் நுழைவாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டதும் பகவானின் விருப்பமே என உணர்ந்தனர்.

மூன்று பிறவி அசுரர்கள்

வைகுண்டத்தின் வாயிற் காப்பாளர்களான ஜெயன், விஜயன் முதற் பிறவியில் ஹிரண்யாக்ஷன்ன் மற்றும் ஹிரண்யகசிபுவாகவும் இரண்டாவது பிறவியில் இராவணன் மற்றும் கும்பகர்ணனாகவும், மூன்றாவது பிறவியில் சிசுபாலன் மற்றும் தண்டவக்ரனாகவும் பிறப்பெடுத்தனர். வைகுண்டத்தில் இருப்பவர்கள் அனைவருமே பக்தர்கள் என்பதால் நாராயணர் அங்கு யாரிடமும் சண்டை போட முடியாது. அதே சமயம் பகவான் நாராயணர் யாரிடமாவது சண்டை போட வேண்டும் என விருப்பப்பட்டால் , அவர் பௌதிக உலகில் அவதரிக்கும் போது அந்த விருப்பம் நிறைவேறுகிறது.

அதாவது தன்னிடம் கடுமையாக சண்டை போடுவதற்கும் பகவான் நாராயணர் தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்கிறார். பகவான் நாராயணர் தன் அனைத்து விருப்பங்களையும் லீலைகள் மூலமாக பக்தர்களுடனேயே நிறைவேற்றுகிறார். பௌதிக உலகில் பகவான் நாராயணரின் திவ்யமான சண்டை போட்டிக்கு பக்தர்களையே அந்த கதாபாத்திரத்திற்குள் நுழைக்கிறார். வைகுண்டத்தின் வாயிற் காப்பாளர்களான ஜெயன், விஜயன் பௌதிக உலகில் மூன்று பிறவிகளுக்கு அசுரர்களாக செயல்பட்டது பிரம்மாவின் கல்பத்தில் (நாள்) ஒரு முறை மட்டுமே நடைபெற்றது என ஆச்சாரியர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது வராஹரும், நரசிம்மரும் பௌதிக உலகில் அவதரிக்கும் போது ஒவ்வொரு முறையும் ஜெயன், விஜயன் என இவர்கள் இருவரும் ஹிரண்யாக்ஷன் மற்றும் ஹிரண்யகசிபுவாக தோன்றுவதில்லை என ஆச்சாரியர்கள குறிப்பிடுகின்றனர். தகுதி வாய்ந்த அசுரர்கள் பகவானால் தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு எதிரிகளாக பொதுவாக செயல்படுகின்றனர். ஜெயன், விஜயன் நாராயணரின் தூய பக்தர்கள். பிரம்மாவின் ஒரு கல்பத்தில் மட்டும் அவர்கள் அசுரர்களாக செயல்பட்டனர் என புரிந்து கொள்ள வேண்டும்.

கஷ்யபர் முதலில் பிறந்த ஜெயனை ஹிரண்யாக்ஷன் எனவும், விஜயனை ஹிரண்யகசிபு எனவும் பெயரிட்டார். இந்த இரு அசுர சகோதரர்களும் பௌதிக உலகில் பிறந்த போது இயற்கையின் சீற்றங்களாக பூகம்பம், பலத்த காற்று, அசுப கிரகங்கள் பலம் பெறுதல், சூரிய சந்திர கிரகணங்கள் மாறி மாறி தோன்றுதல் போன்ற அறிகுறிகள் வெளிப்பட்டுக் கொண்டே இருந்தன. நரி ஊளையிடுதல், பயத்தில் மாடுகள் உறைந்து போன அபசகுண அறிகுறிகளும் தென்பட்டன.

பிரம்மாவிடம் வரம் பெறுதல்

ஹிரண்யாக்ஷன்ன் மற்றும் ஹிரண்ய கசிபு பிரம்மாவிடம் கடுந்தவம் மேற்கொண்டு கிட்டத்தட்ட சாகாத வரத்தை போன்றே பெற்றுக் கொண்டு கர்வத்தினால் மூன்று உலகையும் ஆட்டுவித்துக் கொண்டிருந்தனர். ஹிரண்யாக்ஷனின் வருகையை கண்ட இந்திரன் உட்பட அனைத்து தேவர்களும் தங்கள் லோகத்தை கைவிட்டு வெவ்வேறு இடங்களுக்கு சென்று ஒளிந்து கொண்டனர். இந்திர லோகமும் காலியாக இருப்பதை கண்ட ஹிரண்யாக்ஷன்ன் தேவர்கள் சண்டை போடாமலேயே தோற்றுவிட்டதை ஒப்புக் கொண்டுவிட்டனர் என எண்ணி பெருமிதம் கொண்டான். சுவர்க்க லோகத்தை விட்டு ஹிரண்யாக்ஷன்ன் சமுத்திர கடலுக்குள் சென்ற போது அனைத்து கடல்வாழ் உயிரினங்களும் பயத்தில் நீரை விட்டு வெளியே சென்றன.

பின் வருண தேவரின் தலைநகரான விபாவரிக்கு சென்ற ஹிரண்யாக்ஷன்ன் வருண தேவரை தன்னுடன் சண்டை போடும் படி கேட்டுக் கொண்டான். ஹிரண்யாக்ஷன்னின் கர்வத்தை கண்ட வருண தேவர், தனக்கு வயதாகி விட்டது என்றும் விஷ்ணுவே சண்டை போடுவதற்கு தகுதியான நபர் என அவனிடம் தெரிவித்தார். பகவான் விஷ்ணு இருக்கக் கூடிய இடத்தை வழியில் கண்ட நாரதர் மூலமாக அறிந்து கொண்ட ஹிரண்யாக்ஷன் அவரைத் தேடி புறப்பட்டான்.

 

பூமியை மீட்ட வராஹர்

ஹிரண்யாக்ஷன் பூலோகத்தை கர்போதகா கடலுக்குள் தன் வலிமையால் மூழ்கடித்தான். இதனைக் கண்ட தேவர்கள் அச்சமடைந்து பிரம்மாவை நாடினர். பிரம்மா பூலோகத்தை எவ்வாறு மீட்க முடியும் என தியானித்தபோது அவருடைய வலது நாசியில் இருந்து கட்டை விரல் அளவிலான பன்றி ரூபம் வெளிப்பட்டது. அந்த திவ்யமான பன்றி அவதாரம் தன் உருவத்தை அதிகரித்து கொண்டே செல்வதை பார்த்த தேவர்கள் அதிசயித்து போனர். பகவான் விஷ்ணுவே பன்றி ரூபத்தில் அவதரித்திருக்கிறார் என உணர்ந்த தேவர்கள் அச்சத்தை கைவிட்டு, உறுமிக் கொண்டிருந்த வராஹரை பார்த்து துதி பாடினர்.

பொதுவாக பன்றிகளுக்கு மோப்பம் மற்றும் நுகரும் சக்தி அதிகமாக இருப்பதால், கர்போதகா கடலுக்குள் இருக்கும் பூமியை மீட்கும் பொருட்டு நுகர்ந்து கொண்டே வராஹர் நீருக்கடியில் சென்றார். பூலோகத்தையே தன் சிறு தந்தத்தினால் தாங்கிக் கொள்கிற அளவிற்கு வராஹரின் உடல் பெரிதாக இருந்தது. ஏழு தீவுகள் கொண்ட பூலோகத்திற்கு எவ்வித சிறு பாதிப்பும் ஏற்படாமல் மிகவும் சாதுர்யமாக வராஹர் அதனை தன் தந்தத்தினால் சுமந்து நீருக்கு வெளியில் எடுத்து வந்து தன் அசிந்திய சக்தியினால் மிதக்க வைத்தார்.

கடுமையான யுத்தம்

கடலுக்குள் மூழ்கடித்த பூமியை ஒரு பன்றி சுமந்து கொண்டு நீருக்கு வெளியே வருவதை கண்ட ஹிரண்யாக்ஷன்ன் பாம்பை போல சீறினான். தன் கையில் இருந்த கதத்தினால் வராஹரை தாக்க ஹிரண்யாக்ஷன் முன் சென்றான். அப்போது வராஹருக்கும், ஹிரண்யாக்ஷனுக்கும் கடுமையான போர் மூண்டது. சில சமயம் ஹிரண்யாக்ஷன்னின் கை ஓங்குவதை கண்ட தேவர்கள் அச்சத்தில் உறைந்து போயினர். ஒரு கட்டத்தில் வராஹரின் கையில் இருந்த கதத்தை கீழே தள்ளிய ஹிரண்யாக்ஷன்ன் வராஹரை நிராயுதபாணியாக ஆக்கிவிட்டான்.

அதனால் கடுங்கோபம் அடைந்த வராஹர் உடனடியாக சுதர்சன சக்கரத்தை வரவழைத்தார். அதைக் கண்ட ஹிரண்யாக்ஷன்ன் உடனடியாக ஆகாயத்திற்கு பறந்த வண்ணம் கதத்தினால் வராஹரை தாக்க முன் வந்தான். அப்போது வராஹர் தன் இடது காலால் ஹிரண்யாக்ஷன்னின் கதத்தை விளையாட்டாக தட்டிய போது அது கீழே விழுந்தது. ஹிரண்யாக்ஷன்ன் கீழே விழுந்த கதத்தை மீண்டும் தூக்கிக் கொண்டு கர்ஜித்தவாறு வராஹரை அணுகிய போது, வராஹர் அந்த கதத்தை பிடுங்கிக் கொண்டார். இதனால் கடுங்கோபம் அடைந்த ஹ›ிரண்யாக்ஷன்ய் எரியும் சூலத்தை வராஹர் மீது தூக்கியெறிந்தான். சுதர்சன சக்கரத்தின் மூலமாக சூலத்தை தவிடு பொடியாக்கிய வராஹரை கண்ட போது ஹிரண்யாக்ஷனின் கோபம் இன்னும் அதிகரித்தது.

பின் தன் பலமான மேல் கைகளால் ஹிரண்யாக்ஷன்ன், பகவான் வராஹரின் நெஞ்சில் பலமாக குத்து விட்டான். அந்த பலமான குத்து வராஹருக்கு மலர்மாலை அணிவித்ததை போன்று இருந்தது. யோகேஷ்வர வராஹரிடம் ஹிரண்யாக்ஷன்ன் பல மாயஜால வித்தைகளை அரங்கேற்றினான். சுதர்சன சக்கரத்தை ஏவிய வராஹ பகவான் அனைத்து மாயஜால சித்துகளையும் நொடிப் பொழதில் அழித்தார். அப்போது அன்னை திதியின் இதயம் பயத்தால் சூழப்பட்டு அவளுடைய மார்பில் இருந்து இரத்தம் வழிந்தோட தொடங்கியது. தன் மாயஜால வேலைகள் பலிக்கவில்லை என உணர்ந்த ஹிரண்யாக்ஷன்ன் பகவான் முன் தோன்றி தன் இரு பலமான கைகளால் பகவானை தழுவி நசுக்க முன் வந்தான். வராஹ பகவான் அவன் காதில் பலமாக அறைவிட்டபோது ஹிரண்யாக்ஷன்ன் விழி பிதுங்கி , கை உடைந்து, வேரோடு பெயர்த்தெடுத்த மரத்தை போன்று கீழே விழுந்தான்.

தூய பக்தர்களின் பார்வை

அந்த சமயத்தில் பிரம்மாவும், மற்ற தேவர்களும் அந்த இடத்திற்கு விரைந்து பூமழை பொழிந்தனர். ஹிரண்யாக்ஷன்னின் உயிர் பிரியாத நிலையில் பகவான் வராஹரின் திருப்பாதம் அவன் நெஞ்சில் வைக்கப்பட்டிருந்ததை கண்ட பிரம்மா, யாருக்கு இம்மாதிரியான அதிர்ஷ்டமான மரணம் கிட்டும் என எண்ணி வியந்தார். யோகிகளும், ஞானிகளும் பகவானின் திருப்பாதத்தை தியானித்து ஆயிரக்கணக்கான வருடங்கள் தவம் இருக்கின்றனர். ஆனால் இந்த அசுரனுக்கோ பகவான் வராஹரின் திருப்பாதங்கள் உடலில் தொட்ட வண்ணம் உடலை நீக்கும் பாக்கியம் கிடைத்தது. பகவானின் திவ்யமான வதத்தினால் அசுரனுக்கே உன்னத நிலை கிடைக்கும் போது பக்தர்களுக்கு சொல்லவும் வேண்டுமா?

பக்தர்களின் தைரியம் பகவானை வெகுவாக ஈர்க்கின்றது. திதியின் பேரக் குழந்தையான பிரஹலாதன், தந்தை ஹிரண்யகசிபுவினால் பல துன்பங்களுக்கு ஆளானான். மலை உச்சியில் இருந்து தூக்கி வீசுதல், கடலில் வீசுதல், நெருப்பு, பாம்பு, விஷம் என பல சித்ரவதைகளுக்கு பிரஹ்லாதன் ஆளானான். இறுதியாக பிரஹ்லாதனிடம் நெருப்பை கண்டு பயந்தாயா என கேட்ட போது, விஷ்ணு பகவான் அக்னியின் மூலமாகவே யாக குண்டத்தில் அனைத்தையும் உட்கொள்கிறார். அதனால் நான் ஏன் என் தந்தையின் திருவாயை கண்டு பயப்பட வேண்டும் என வினவினான். பாம்பை கண்டு பயந்தாயா என பிரஹலாதனிடம் கேட்டபோது, சேஷன் மீது என் தந்தை படுத்து உறங்குவதால் நான் ஏன் என் தந்தையின் படுக்கையை கண்டு பயப்பட வேண்டும் என வினவினான். விஷத்தை கண்டு பயந்தாயா என பிரஹலாதனிடம் கேட்ட போது, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது அதிலிருந்து என் அன்னை லஷ்மி தேவி தோன்றினாள். அவள் தோன்றுவதற்கு முன் பாற்கடலில் ஹால ஹால என்னும் கொடிய விஷ அரசனும் தோன்றினான். அதனால் நான் ஏன் என மாமாவை கண்டு பயப்பட வேண்டும் என வினவினான்.

இது தான் தூய பக்தர்களின் பார்வை. உலகில் இருக்கும் அனைத்தையும் பகவானுடன் தொடர்பு படுத்தி பார்ப்பதால் அவர்களுக்கு பயம் என்பது சிறிதளவு இருப்பதில்லை.

கோயிலின் அமைப்பு

பூவராக சுவாமி திருக்கோயிலின் முகப்பானது கம்பீரமான எழில் மிகு ராஜகோபுரத்தின் அமைப்பை கொண்டது. கோயிலில் இருக்கும் மூல விக்ரஹத்தை தரிசிக்கும் முன் ஶஶஸ்ரீ நிவாச பெருமாளையும் அடிவாரத்தில் அவர் திருவடிகளையும் தரிசித்து செல்ல வேண்டும். கோயிலின் தென் கிழக்கு திசையில் அசுவத்த மரமும், நித்ய புஷ்கரிணியும் அமைந்துள்ளது. மிகவும் முக்கியமான எட்டு சுயம்பு ஷேத்திரத்தில் ஸ்ரீ முஷ்ணமும் ஒன்றாகும். அவை ஸ்ரீரங்கம், ஸ்ரீ முஷ்ணம், திருப்பதி, வானமாமலை, சாளக்கிராமம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிகாஷ்ரமம் ஆகும்.

இக் கோயிலில் முதன்மையான விக்ரஹத்திற்கு மேல் பாவன விமானம் அமையப் பெற்றுள்ளது. வராஹ பெருமாள் ஸ்ரீஶமுஷ்ணத்தில் ஓய்வெடுத்த போது அவர் உடல் வியர்வையே நித்ய புஷ்கரிணி என்னும் புனித தீர்த்தமாக மாறிவிட்டது. ஹிரண்யாக்ஷன்னை வதம் செய்த பின்னர், பகவான் வராஹரின் கண்களில் இருந்து விழுந்த ஒரு துளி ஆனந்த கண்ணீரானது அசுவத்த மரமாக உருவெடுத்தது. இக் கோயிலில் சக்ர தீர்த்தம், அக்னி தீர்த்தம்,வேணு தீர்த்தம், மிருத்யுஞ்சய தீர்த்தம் என பல தீர்த்தங்கள் விசேஷமாக காணப்படுகின்றன.

பூவாராக சுவாமி

பூவாராக சுவாமி முதன்மையான விக்ரஹமாக நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். தன் இடுப்பில் இருக்கும் சங்கு மற்றும் சக்கரத்தை தன் இரு கைகளால் மறைத்த வண்ணம், உடல் மேற்கு திசையை நோக்கியும், முகம் தெற்கு திசையை நோக்கியும், பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இங்கு யக்ஞ வராஹர் உற்சவ மூர்த்தியாகவும், தாயார் அம்புஜ வல்லியாகவும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

கடலில் இருந்து பூமியே வெளியே கொண்டு வந்து தேவர்களின் துயரை துடைத்து மீண்டும் வைகுண்டத்திற்கு திரும்பிச் செல்ல வராஹர் எண்ணியதாகவும், பூதேவி தன்னுடன் தங்கியிருக்கும்படி பகவானை வேண்டிக் கொண்டதாக நாரத புராணம் கூறுகின்றது. பூதேவியுடன் கூடி வசிப்பதால் வராஹப் பெருமாளுக்கு பூவாராகன் என்று பெயர். நான்கு தலை கொண்ட பிரம்மா இங்கு தினந்தோறும் பூவாராக சுவாமியை தரிசிக்கிறார் என்பது கோயில் ஐதிகம். தினந்தோறும் இக்கோயிலில் கஜேந்திர மோஷம் மற்றும் ஸ்ரீ முஷ்ணம் புராணத்தை பாராயணம் செய்கின்றனர்.

நித்ய புஷ்கரிணியில் ஸ்நானம் செய்த பின்னர் அசுவத்த மரத்தின் கீழ் அல்லது புறக்கரையில் இருக்கும் ஶஸ்ரீ லஷ்மி நாராயணன் சன்னதி அருகே ஹரி நாமத்தை உச்சரிப்பது விசேஷமானதாகும். இக்கோயிலில் வருடத்தில் இரண்டு பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். பகவான் திவ்யமான பன்றி ரூபத்தில் வீற்றிருப்பதால் பெருமாளுக்கு கோரை கிழங்கு பிரசாதம் இங்கு விசேஷமாக நைவேத்யம் செய்யப்படுகிறது. ஹிரண்யாக்ஷனுக்கு ஜில்லிகா என்பவள் புதல்வி, அவள் விஷ்ணு பக்தி கொண்டவள் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய பயணம்

சைதன்ய மஹாபிரபு 500 வருடங்களுக்கு முன் தென்னிந்திய பயணத்தை மேற் கொண்டபோது ஆந்திர மாநிலத்தை கடந்த பின்னர் தமிழ் நாட்டில் காஞ்சிபுரம், திருக்கழக்குன்றம், விருத்தாசலம், ஸ்ரீ முஷ்ணம், கும்பகோணம் ஶஸ்ரீ ரங்கம் , மதுரை , ராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருவட்டாறு, திருவனந்தபுரம் வழியாக பயணத்தை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நவதீபத்தில் இருக்கும் ஒரு தீவான கோலதீபத்தில் வராஹர் தன் பக்தனான வாசுதேவ விப்ரரிடம் நீ எனது பக்தன், உன் பக்தியினால் என்னை மகிழ வைத்துள்ளாய், நான் கலியுகத்தில் கௌரங்கராக நவதீபத்தில் தோன்றி நாம சங்கீர்த்தன லீலையில் ஈடுபடும் போது நீயும் பங்கெடுத்து கொள்வாய் என வரமளித்தார்.

அதே போல நவதீபத்தில் , சைதன்ய மஹாபிரபு தன் நெருங்கிய பக்தரான முராரி குப்தரின் இல்லத்தில் வராஹ அவதாரத்தின் பரவச நிலையை உணர்ந்தவாறு அவருடைய தோளில் ஏறிக் கொண்டு தோட்டத்தில் நடனமாடினார். அப்போது சைதன்ய மஹாபிரபு உடனடியாக வராஹ ரூபத்தை எடுத்து கொண்டு முராரி குப்தரின் பூஜை அறையில் இருந்த ஒரு நீர் பானையை தன் மூக்கில் சுமந்தவாறு, பூலோகத்தை கடலில் இருந்து சுமந்ததை நினைவு கொண்டார்.

ஸ்ரீ முஷ்ண மஹாத்மியம்

சைதன்ய மஹாபிரபு தரிசித்த கோயில்களையும், அவர் சில நொடிப் பொழுது எவ்விடத்தில் லீலைகளை அரங்கேற்றினாரோ அவ்விடங்களை கௌடீய வைஷ்ணவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டும் என ஸ்ரீல பக்தி வினோத தாகூர் வலியுறுத்துகின்றார். சைதன்ய மஹாபிரபு ஸ்ரீமுஷ்ணம் வந்த இடத்தை விருத்தகோலா என சைதன்ய சரிதாம்ருதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது,

எல்லா தீர்த்தங்களும் ஶஸ்ரீஶ முஷ்ணத்தில் சேருவதால் அந்த புனித ஷேத்திரத்திற்கு செல்பவர்கள்

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே, \ஹரே ராம \ஹரே ராம , ராம ராம ஹரே ஹரே” என்னும் மஹாமந்திரத்தினை உச்சரிப்பதால் யாத்திரை முழுமைப் பெறும் என ஆச்சாரியர்கள் தெரிவிக்கின்றனர்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives