கருத்து
புத்திர் யஸ்ய பலம் தஸ்ய
நிர்புதேஸ் து குதோ பலம்
பஷ்ய ஸிம்ஹோ மதோன்மத்த:
ஷஷ கேன நிபாதித:
முயல் தனது புத்தியின் பலத்தினால் சிங்கத்தைக் கொன்று விட்டது. புத்தியின் பலம் உடல் பலத்தைக் காட்டிலும் உயர்ந்தது, புத்தி இல்லாவிடில் உடல் பலத்திற்கு மதிப்பில்லை. புத்தியுடையவன் பலசாலியைக் காட்டிலும் வலிமையானவன்.
இவ்வுலகில் அனைவரும் ஏதேனும் ஒரு செயலைச் செய்தாக வேண்டும். காட்டில் விலங்குகளின் ராஜாவாக இருந்தாலும், ஒரே இடத்தில் வசித்துக் கொண்டு, உணவு தானாகக் கிடைக்கும் என்று உறங்குதல் நல்லதல்ல. ந ஹி ஸுப்தஸ்ய ஸிம்ஹஸ்ய ப்ரவிஷந்தி முகே ம்ருகா:. சிங்கம் வலிமையானதாக இருந்தாலும், அனைத்தும் அதன் விருப்பத்தின்படி நடந்து விடாது.