ஆதாரமற்றதும் நடைமுறைக்கு ஒத்துவராததுமான அத்தகு கூற்றுகளை எடுத்துரைக்கும் நபர்களுக்கு பதிலளிக்கும் வகையில், சாஸ்திரங்களின் முக்கியத்துவத்தை பகவத் தரிசனத்தின் சென்ற இதழில் வெளியிட்டிருந் தோம். ஆன்மீகத் தன்னுணர்வைப் பெறுவதில் குருவின் அவசியத்தை இந்த இதழில் காணலாம்.
சில மாதங்களுக்கு முன்னர் எமது கோயிலுக்கு வருகை தந்த நபர் ஒருவர், "நீங்கள் ஏன் பகவத் கீதை போன்ற சாஸ்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? தன்னுணர்வு, இறையுணர்வு என்பவை தானாக உணர்வதுதானே? இதற்கு புத்தகங்கள் தேவையா? புத்தகங்களால் தன்னுணர்வை எவ்வாறு வழங்க இயலும்?" என்று கேள்வி கேட்டார். மேலும், "நாம் நமக்குள்ளே உணர்வதுதான் தன்னுணர்வு" என்று பிரபல சாமியார் ஒருவர் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார். அவருக்கு சாஸ்திரங்களின் முக்கியத்துவத்தை யாம் பக்குவமாக எடுத்துரைக்க அவரும் உண்மையை உணர்ந்தார். அத்தகவல்கள் பகவத் தரிசன வாசகர்களுக்கும் உதவும் என்பதால், இதோ இங்கே இந்தக் கட்டுரை.
தெய்வீக ரிஷியான நாரதர் யார் என்பதையும் அவரது பெருமைகள் யாவை என்பதையும் தெரிந்து கொள்ளாமல், மக்கள் அறியாமையில் இருப்பதே இத்தகைய மூடத்தனத்திற்கு வழிவகுக்கின்றது. அதனால், அவரைப் பற்றி அறிந்துகொள்ளுதல் எல்லா குழப்பங்களையும் மக்கள் மனதிலிருந்து விலக்கும் என்னும் நோக்கத்துடன், இக்கட்டுரை வாசகர்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது
டார்வினின் பரிணாமக் கொள்கை உயிர்களின் வாழ்விற்கு இயற்கையை மட்டும் காரணமாகக் காட்டுகிறது. இதனைக் கட்டுப்படுத்துபவர் யாருமில்லை என்றும், உயிர்களின் பரிணாமம் தானாக நிகழ்ந்தது என்றும் கூறியதன் மூலமாக, டார்வின் கொள்கை உலக அளவில் நாத்திகம் வளர்வதற்கு அடிப்படையாக அமைந்தது. மேலும், மக்களிடையே படிப்படியாக நற்பண்புகள் குறைந்து, புலனின்ப வேட்கையும் லௌகீகவாதமும் அதிகரிப்பதற்கு டார்வின் கொள்கை அடிப்படையாக உள்ளது.
கர்ம யோகத்தை நிறைவேற்றுவதற்கு, கடமை என்றால் என்ன என்பதை ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளுதல் அவசியம். இவ்வுலகில் பெரும்பாலான மக்கள் கடமைகுறித்து தத்தமது சொந்த அபிப்பிராயங்களைக் கொண்டுள்ளனர். உதாரணமாக, கசாப்புக் கடை வைத்திருப்பவன்கூட, மிருகங்களை வெட்டுவது தன்னுடைய கடமை என்றும் அதன் மூலமாகவே தான் முக்தியடையலாம் என்றும் ஏமாற்றப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளான்.