பசுக் கொலையை ஆதரிப்பவர்களின் மற்றொரு வாதம், பசுக்களுக்கு ஆத்மா இருப்பதை நம்பாத இதர மதத்தினரின் சுதந்திரத்தை பசு வதை தடுப்புச் சட்டம் மறுக்கின்றது என்பதாகும். உண்மையில் இவ்வாறு பசுக் கொலையை ஆதரிப்பவர்கள், எந்த மதத்தையும் பின்பற்றாமல், மிருகங்களைப் போல வாழும் நாத்திகர்களாவர்.
எனக்குப் பிடித்த நாயகன் என்று ஒவ்வொரு ரசிகனும் யாரேனும் ஒருவரை நம்பியிருந்தான், ஆனால் தனது நாயகனின் தோல்வியினால் நம்பிக்கை இழந்தான். இந்திய அணியினை தோல்வியிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று இறைவனை வேண்டி, வேலூரில் ஓர் இளைஞன் தனது நாவினை வெட்டிக் கொண்ட கொடூரமும் நிகழ்ந்தது. சிலர் யாகங்கள் நடத்தினர், சிலர் சிறப்பு வழிபாடுகளைச் செய்தனர்; ஆனால் தோல்வியே அவர்களைத் தழுவியது.
சைதன்ய மஹாபிரபுவின் முக்கியமான உபதேசம், அனைவரும் கிருஷ்ண உணர்வை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்பதும், ஹரியின் நாமத்தில் அனைத்து மங்களங்களும் அடங்கி உள்ளது என்பதுமாகும். சைதன்ய மஹா பிரபுவின் போதனைகளை உலக மக்களுக்கு பாகுபாடின்றி எடுத்துரைத்தவர் தெய்வத்திரு. அ.ச. பக்திவேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதர். தனது திருநாமம் உலகின் ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் பரவும் என்று சைதன்ய மஹாபிரபு முன்னரே கூறியிருந்தார்; அக்கூற்றினை ஸ்ரீல பிரபுபாதர் நிறைவேற்றினார்.
பாரதம் பல்வேறு வசதிகளுடனும் விஞ்ஞான ஆற்றலுடனும் வாழ்ந்து வந்த நாடாகும். அதனால்தான் முகலாயர்களும் ஐரோப்பியர்களும் இந்தியாவின் மீது படையெடுத்தனர், இந்தியாவின் சொத்துக்களை சூறையாடினர். அவ்வாறு இருப்பினும், ஆங்கிலேயர்கள் இந்தியர்களிடம், இந்தியர்கள் விஞ்ஞான அறிவுடையவர்கள் அல்ல, "இந்திய பாரம்பரியமும் பண்பாடும் பழமைவாதம்," போன்ற கருத்துகளை ஆழமாக பரப்பியுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் இரண்டாம் நாளன்று, பகவத் கீதை பேசப்பட்டதன் 5,151வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் ஒன்றில், இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சரான திருமதி. சுஷ்மா சுவராஜ் அவர்கள், பகவத் கீதையில் அனைவரின் வாழ்வின் எல்லா பிரச்சனைகளுக்கும் உரிய பதில் உள்ளது என்றும், இதனை பிரதமர் மோடி பாரதத்தின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.