AUTHOR NAME

Vanamali Gopala Dasa

100 POSTS
0 COMMENTS
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

ஜட பரதரின் வாழ்க்கை

மானின் உடலைத் துறந்த பரத மஹாராஜர் அங்கிரா முனிவரின் குலத்தைச் சேர்ந்த தூய பிராமணரின் குடும்பத்தில் பிறந்தார். பகவானின் கருணையால் அவருக்கு தனது முற்பிறவிகளில் நடந்தவை அனைத்தும் நினைவில் இருந்தன. பக்தரல்லாத தமது உற்றார் உறவினர்களைக் கண்டு எங்கே தான் மீண்டும் வீழ்ந்துவிடுவோமோ என்று அஞ்சினார். அவர்களின் தொடர்பைத் தவிர்ப்பதற்காகவே தன்னை ஓர் உன்மத்தம் பிடித்தவனைப் போன்றும் குருடனைப் போன்றும் செவிடனைப் போன்றும் காட்டிக் கொண்டார். அவர் ஜட பரதர் என்று அழைக்கப்பட்டார். அவரது தந்தை அவருக்கு வேத சாஸ்திரங்களிலும் சடங்குகளிலும் போதிய பயிற்சி அளிக்க விரும்பி அதற்கான முயற்சியில் ஈடுபட்டபோதிலும், அவை அனைத்திலும் அவர் தோல்வியடைந்தார். சிறிது காலத்திற்குப் பின்னர், ஜட பரதரின் தந்தை மரணமடைந்தார். அவரது தாயாரும் மகனை கணவனது முதல் மனைவியிடம் ஒப்படைத்துவிட்டு உடன்கட்டை ஏறி தன் கணவன் சென்ற உலகை அடைந்தாள்.

ரிஷப தேவரின் மறைவும் பரத மன்னர் மானாகப் பிறத்தலும்

பகவான் ரிஷபதேவர் தமது யோக சக்திகளை ஏன் பயன்படுத்தாமல் இருந்தார் என்று மாமன்னர் பரீக்ஷித் சுகதேவ கோஸ்வாமியிடம் வினவினார். அதற்கு சுகதேவ கோஸ்வாமி பின்வருமாறு பதிலளித்தார்: “வேடன் ஒருவன் தான் பிடித்த விலங்குகள் தப்பிச் சென்று விடும் என்பதால், அவற்றிடம் நம்பிக்கை கொள்வதில்லை. அதுபோலவே, ஆன்மீக வாழ்வில் முன்னேற்றம் அடைந்தவர்கள் மனதின் மீது ஒருபோதும் நம்பிக்கை கொள்வதில்லை; ஏனெனில், மனமானது இயற்கையிலேயே மிகவும் அமைதியற்றதாகும். அஃது எந்த நேரத்திலும் ஒருவரை ஏமாற்றி போகத்திற்கு இழுத்துச் செல்லக் கூடியது. இதன் காரணமாக, ஆன்மீகத்தில் முன்னேறியவர்களும்கூட சில சமயங்களில் வீழ்ச்சியுறுகின்றனர்.

ரிஷபதேவரின் உபதேசங்கள்

பகவான் ரிஷபதேவர் தம் மைந்தர்களிடம் கூறினார்: “அன்பு மைந்தர்களே! புலனுகர்ச்சிக்காக இரவும்பகலும் கடினமாக உழைக்கக் கூடாது. இத்தகு புலனுகர்ச்சியானது மலம் உண்ணும் பன்றிகளுக்கும் நாய்களுக்கும்கூட கிடைக்கக்கூடியதே. மனித உடலைப் பெற்ற ஒருவன் பக்தித் தொண்டின் தெய்வீக நிலையை அடைவதற்காக தவம் செய்ய வேண்டும். மனதைத் தூய்மைப்படுத்த தவத்தில் ஈடுபட வேண்டும். இவ்வாறாக, நித்தியமான ஆன்மீக ஆனந்தத்தை அடையலாம்.

பிரியவிரதரின் வம்சத்தில் பகவான் ரிஷபதேவர் தோன்றுதல்

பிரியவிரத மஹாராஜர் ஆன்மீக உணர்விற்காக நாட்டை விட்டு கானகம் சென்றதும் அவரது மகன் ஆக்னீத்ரன், ஜம்புத்வீபத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று குடிமக்களைத் தமது சொந்த குழந்தைகளைப் போல் பாதுகாத்து செவ்வனே ஆட்சி செய்தார். அவர் நன்மக்களைப் பெறும் நோக்கத்துடன் மந்தார மலையின் ஒரு குகையினுள் நுழைந்து, பிரம்மதேவரை நோக்கி கடுந்தவம் புரிந்தார். அவரது தவத்தில் மகிழ்ந்த பிரம்மதேவர், பூர்வசித்தி எனும் தேவ கன்னிகையை அவரிடம் அனுப்பி வைத்தார்.

மன்னர் பிரியவிரதரின் செயல்கள்

பரீக்ஷித் மஹாராஜர் சுகதேவ கோஸ்வாமியிடம் வினவினார்: “மாமுனிவரே! தன்னுணர்வு பெற்றவரான பிரியவிரதர், முக்திபெற்ற நிலையில் இருந்தும், ஏன் இல்லற வாழ்வில் இருந்தார்? பக்தர்கள் நிச்சயம் முக்தி அடைந்தவர்கள் என்பதால் அவர்கள் இல்லறச் செயல்களில் ஈடுபடுவது சாத்தியமில்லை. பரம புருஷரின் தாமரைத் திருவடிகளில் அடைக்கலம் புகுந்த மஹாத்மாக்கள் அத்திருவடி தாமரை நிழலின் குளுமையை அனுபவிக்கின்றனர். அத்தகையோருக்கு குடும்பத்தில் ஆசை என்பது நிச்சயம் தோன்றாது. அவ்வாறிருக்க, மன்னர் பிரியவிரதர் மனைவி, மக்கள், வீடு, வாசல் முதலியவற்றில் பெரும் பற்று கொண்டிருந்ததாகத் தோன்றுகிறது; இருப்பினும், அவர் பகவான் கிருஷ்ணரிடத்தில் உறுதியான பக்தியுடன் இருந்தது எவ்வாறு? இதுவே எனது ஆழ்ந்த ஐயமாகும்.

Latest