- Advertisement -spot_img

CATEGORY

குரு

தவத்திரு பக்தி விரஜேந்திர நந்தன ஸ்வாமியின் நினைவுகள்

தவத்திரு பக்தி விரஜேந்திர நந்தன ஸ்வாமி அவர்கள் மலேசியாவில் 1938ஆம் ஆண்டில் பிறந்தார். உயர்கல்விக்காக இங்கிலாந்து சென்றிருந்த காலத்தில், இஸ்கான் பக்தர்களுடன் தொடர்பு ஏற்பட்டு 1971ஆம் ஆண்டில் பர்மிங்ஹம் கோயிலில் பிரம்மசாரியாக இணைந்தார். அதன் பிறகு, 1972இல் இலண்டனின் பரி ப்லேஸ் என்ற இடத்தில் அமைந்திருந்த கோயிலுக்கு மாறி அங்கே பல்வேறு சேவைகளில் ஈடுபட்டார். கடின சேவைகளை எளிதில் நிறைவேற்றும் பக்குவமான பிரம்மசாரியாக அவர் திகழ்ந்தார். 1972ஆம் ஆண்டின் ஜுலை மாதத்தில் இஸ்கானின் ஸ்தாபக ஆச்சாரியர் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரிடமிருந்து தீக்ஷை பெற்றார். ஸ்ரீல பிரபுபாதர் இவருக்கு விரஜேந்திர குமார தாஸ் என்று பெயரிட்டார்.

ஆன்மீக குருவிற்கான பரிசோதனை (பாகம் இரண்டு)

ஆன்மீக குரு என்பவர் இதயத்திலுள்ள கவலை என்னும் காட்டுத்தீயினை அணைக்கக்கூடியவராக இருக்க வேண்டும் என்றும் அதுவே குருவிற்கான முதல் பரிசோதனை என்றும் சென்ற இதழில் கண்டோம். இதர பரிசோதனைகளை இங்கு காணலாம்.

ஸ்ரீல பக்திவினோத தாகூர்

பக்திவினோத தாகூர் தன் வாழ்நாள் முழுவதையும் முழுமுதற் கடவுளான கிருஷ்ணருக்கு இடைவிடாது தொண்டு செய்வதில் கழித்தார். இவ்வுலகிற்கு நன்மை பயக்க அவர் ஆற்றிய நற்தொண்டானது ஸ்ரீ சைதன்யர் மற்றும் கோஸ்வாமிகளின் அளவற்ற செயலுக்கு ஒப்பானதாகும். இந்த தனி ஒருவரின் ஆன்மீக முயற்சியும் தெய்வீக எழுத்துகளும் பகவான் சைதன்யரின் உபதேசங்களை படித்தவர்களும் அறிவாளிகளும் ஏற்றுக்கொள்ளும்படி செய்தது.

ஸ்ரீபாத மத்வாசாரியர்

வைஷ்ணவ ஆச்சாரியர்களில் தலைசிறந்து விளங்கியோரில் ஒருவர் ஸ்ரீபாத மத்வாசாரியர். 13ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இவர், துவைதம் என்று பிரபலமாக அறியப்படும் தத்துவவாதக் கொள்கையை நிலைநாட்டி பக்தியைப் பரப்பியவர். ஹனுமான், பீமன் ஆகியோரின் வரிசையில் வாயுவின் மூன்றாவது அவதாரமாக இவர் அறியப்படுகிறார்.

சித்தாந்தத்திற்காகப் போராடிய பக்திசித்தாந்தர்

பரந்தாமனின் பேர் பாட பாரெங்கும் பரவியுள்ள அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்திற்கு இந்த பக்திசித்தாந்தரே காரணம், இவரது கட்டளையின்படியே பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் கிருஷ்ண பக்தியை மேல்நாடுகளில் பரப்பினார். சித்தாந்தத்தினை (ஆன்மீக அறிவின் இறுதி நிலையினை) மக்களுக்கு வழங்க அரும்பாடுபட்ட இந்த மஹாத்மாவின் புகழ்பாடி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கருணையைப் பெறுவோமாக.

Latest

- Advertisement -spot_img