- Advertisement -spot_img

CATEGORY

பல்வேறு தலைப்புகள்

பாரதப் பண்பாட்டில் பெண்களின் பங்கு

பாரம்பரியக் கொள்கைகள் அனைத்தும் பாழாகி வரும் இத்தருணத்தில், பெண்களுடைய கடமைகள் குறித்து யாரும் பேசுவதில்லை, யாரும் கேட்பதில்லை, யாரும் நினைத்துப் பார்ப்பதும் இல்லை. “பெண் விடுதலை,” “பெண் உரிமை,” “பெண் புரட்சி,” “பெண் கல்வி” என பல்வேறு விஷயங்கள் சமுதாயத்தில் நிறைந்துள்ளன. இவையனைத்தும் உண்மையில் பெண்மைக்கு நன்மை செய்துள்ளனவா என்றால், சற்று யோசிக்கக்கூடியவர்களின் பதில் நிச்சயம் “இல்லை” என்பதே.

தீவிரவாதச் செயல்கள்

தீவிரவாதம் மோசமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும், அந்த தீவிரவாதத்தை ஒரு நாடே முன்னின்று அரங்கேற்றும்போது, அத்தகு தீவிரவாதம் மற்றெல்லாவற்றையும்விட மிகவும் மோசமானது என்று அமெரிக்கா கருதுகிறது. அதன்படி, பாகிஸ்தான் தீவிரவாதத்தைத் தூண்டுகின்றது என்று இந்தியாவும், ஈரான் தீவிரவாதத்தைத் தூண்டுகின்றது என்று அமெரிக்காவும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவதைப் பார்க்கிறோம். தீவிரவாதம் என்று சொல்லும்போது, நம் மனதில் வருவது மனிதர்களைக் கொல்வது மட்டுமே. மனிதர்களைக் கொல்வது தீவிரவாதமே, ஆனால் கோடிக்கணக்கான மிருகங்களும் பறவைகளும் தினமும் கசாப்புக் கூடங்களில் கொல்லப்படுகின்றனவே, அவற்றிற்கு என்ன பதில்? அதுவும் தீவிரவாதச் செயலாகவே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

நவீன கல்வியின் குறைபாடுகள் யாவை?

நல்லொழுக்கத்தையும் நற்பண்புகளையும் கற்றுக் கொடுக்கும் கல்வியே சிறந்த கல்வி வழங்கியவர்:  திரு. சைதன்ய சரண தாஸ் “கட்டுப்படும் இயந்திரங்களும் கட்டுப்படாத மனிதர்களும் நம்மிடம் உள்ளன" என்னும் இந்த புதுமொழி...

மின் தட்டுப்பாடு, தீர்வு உண்டா?

உலகளவில் எரிசக்தியின் பயன்பாடு ஒவ்வொரு வருடமும் இரண்டு சதவிகித அளவில் அதிகரித்து வருகிறது. கடைசி இருபது ஆண்டுகளில் எரிசக்தியில் பாதி அளவினை தொழிற்சாலைகள் பயன்படுத்தியுள்ளன என்பது அதிர்ச்சிதரும் தகவல். உலக மக்கள் தொகையில் ஐந்து சதவிகிதம் உள்ள அமெரிக்கர்கள், உலகின் எரிசக்தியில் 25 சதவிகிதத்தை பயன்படுத்துகின்றனர்.

மசோதாக்களால் ஊழலை ஒழிக்க முடியுமா?

ஊழலை ஒழிக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். வெறும் சட்டத்தின் மூலம் ஊழலை ஒழித்துவிட முடியுமா? அது சாத்தியமா? நிச்சயம் இல்லை. ஏற்கனவே இயற்றப்பட்டு வழக்கில் இருக்கும் பல்வேறு சட்டங்கள் அதன் கடமையைச் செய்ய இயலாமல் உள்ளன என்பதை நாம் அன்றாட வாழ்வில் காண்கிறோம். உதாரணமாக, பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடைச்சட்டம் போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், இன்றும் நம்முடைய வீதிகளும் பேருந்து நிலையங்களும் புற்றுநோயைப் பரப்பும் இடங்களாகத்தான் உள்ளன. ஊழலை ஒழிப்பதற்கு ஏற்கனவே இருக்கும் சட்டங்கள் செயல்படுவதாகத் தெரியவில்லை, புதிய சட்டம் மட்டும் செயல்படப் போகிறதா என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர்.

Latest

- Advertisement -spot_img