- Advertisement -spot_img

CATEGORY

தெரிந்த கதை தெரியாத துணுக்கு

இலக்ஷ்மணரின் உயர்ந்த நெறி

இலக்ஷ்மணரின் உயர்ந்த நிலையைப் பாருங்கள். பன்னிரண்டு வருடங்கள் வேறு யாருமின்றி தனியாக சீதா-இராமருடன் இருந்தபோதிலும், மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய பிராட்டியாரை கவனமாக ஏறெடுத்தும் பார்த்ததில்லை; மாறாக, என்றென்றும் அவளது தாமரைத் திருவடிகளை தமது தியானத்தில் அமர்த்தியிருந்தார். அவருடைய பக்தியையும் பணிவையும் ஒழுக்கத்தையும் என்னவென்று சொல்வது! நினைத்துப் பூரித்தலே ஆனந்தமளிப்பதாக உள்ளது.

தேவகியின் குழந்தைகள் கம்சனால் கொல்லப்பட்டது ஏன்?

கிருஷ்ணர் தேவகியின் எட்டாவது மகனாகப் பிறந்து கம்சனை வதம் செய்தார் என்பதும், தேவகிக்கு முதலில் பிறந்த ஆறு குழந்தைகள் கம்சனால் கொல்லப்பட்டனர் என்பதும் தெரிந்த கதை. அக்குழந்தைகள் யார் அவர்கள் ஏன் கம்சனால் கொல்லப்பட்டனர் என்பது தெரியாத துணுக்கு.

இராவணன் சீதையைத் தீண்டாமல் இருந்ததற்கான காரணம்

அன்னை சீதையைக் கடத்திச் சென்ற இராவணன், சீதைக்கு ஒரு வருட கால அவகாசம் கொடுத்தான் என்பதும், தன்னை ஏற்காவிடில் கண்டம் துண்டமாக வெட்டி காலை சிற்றுண்டி தயாரித்து விடுவேன் என்று மிரட்டினான் என்பதும் உலகம் அறிந்த உண்மை. இராவணன் சீதையை பலவந்தமாக அனுபவிக்க எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. இதனால் சில முட்டாள்கள் இராவணனை உத்தமன் என்றுகூட போற்றுகின்றனர். இராவணனுக்கு ஏதோ சாபம் இருந்தது என்பதை சிலர் கேட்டிருக்கலாம். அஃது என்ன சாபம், எவ்வாறு யாரிடமிருந்து வந்தது என்பதே இங்குள்ள தெரியாத துணுக்கு.

குசேலருக்கு மறைமுகமாக செல்வம் வழங்கியது ஏன்?

கிருஷ்ணரின் பால்ய நண்பர் குசேலர் தனது ஏழ்மையை போக்குவதற்காக, கிருஷ்ணர் துவாரகையிலிருந்தபோது அவரைச் சந்திக்கச் சென்றார் என்பதையும், கிருஷ்ணரைச் சந்தித்த மகிழ்ச்சியில் எதையும் கேட்காமல் திரும்பி வந்தார் என்பதையும், கிருஷ்ணர் அவருக்கு இந்திர லோகத்து செல்வத்தைக் காட்டிலும் அதிக செல்வத்தை வழங்கினார் என்பதையும் பெரும்பாலான மக்கள் அறிவர். குசேலர் எதற்காக வந்தார் என்பதை நன்கு அறிந்திருந்த கிருஷ்ணர் தான் கொடுக்க விரும்பியதை அவர் வந்த சமயத்தில் நேரில் கொடுத்திருக்கலாமே? ஏன் முதுகிற்கு பின்னால் கொடுக்க வேண்டும்?

Latest

- Advertisement -spot_img