- Advertisement -spot_img

CATEGORY

ஸ்ரீல பிரபுபாதர்

நமக்காக பகவான் மேற்கொள்ளும் எண்ணற்ற அவதாரங்கள்

கடல் அலைகளுக்கு எவ்வாறு எல்லை இல்லையோ, அதைப் போலவே பகவானின் அவதாரங்களுக்கும் எல்லை இல்லை. ஸத்த்வ–நிதே. நிதி என்பதன் பொருள் “கடல்,” ஸத்த்வ என்பதன் பொருள் “இருப்பு.” ஸத்த்வ என்பதன் மற்றொரு பொருள் ஸத்வ குணம். இந்த ஜடவுலகில் மூன்று குணங்கள் உள்ளன: ஸத்வ குணம் (நற்குணம்), ரஜோ குணம் (தீவிர குணம்), மற்றும் தமோ குணம் (அறியாமை குணம்). ஆயினும், உண்மையான ஸத்வம் ஆன்மீக லோகத்தில்தான் உள்ளது. ஜடவுலகிலுள்ள ஸத்வ குணம் இங்கே மிகவுயர்ந்த குணமாகக் கருதப்பட்டாலும், ரஜோ மற்றும் தமோ குணங்களால் பாதிக்கப்படக்கூடியதாகும். ரஜோ குணமும் தமோ குணமும் எவ்வாறு கட்டுண்ட வாழ்விற்கு காரணமாக அமைகின்றனவோ, அவ்வாறே ஜட ரீதியிலான ஸத்வ குணமும் கட்டுண்ட வாழ்விற்கு காரணமாக அமைகிறது. எனவே, ஜட ரீதியிலான ஸத்வ குணத்தையும் நாம் கடந்தாக வேண்டும். தூய ஸத்வ குணத்தில் நாம் நிலைபெற்றுவிட்டால், அதுவே ஆன்மீக வாழ்க்கை. தூய பக்தித் தொண்டினால் மட்டுமே தூய ஸத்வ குணத்தில் நிலைத்திருக்க முடியும். இல்லாவிடில், ஸத்வ குணமும் களங்கப்பட்டு விடும்.

புகழை வைத்து சாதுவை எடை போடலாமா?

மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த பிரபல சாதுவான தங்கரி மஹாராஜரைப் பற்றி பிரபுபாதரிடம் வினவினேன். தங்கரி மஹாராஜர் அச்சமயத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பாகவத சொற்பொழிவாளராக இருந்தார். பாகவதத்தை எடுத்துரைக்கும்போது அவரது கண்களில் கண்ணீர் பெருகும், கேட்பவர்களும் கண்ணீர் சிந்துவர்.

புலன்களுக்கு அப்பாற்பட்ட ஆனந்தம்

பௌதிக உலகில் நாம் எப்பொழுதும் துன்பத்தை அனுபவிக்கின்றபோதிலும், சில நேரங்களில் மட்டுமே துன்புறுவதாக நாம் சொல்லிக்கொள்கிறோம்; ஏனெனில், துன்பத்திலிருந்து விடுபடுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சி எதிர்காலத்தில் மகிழ்ச்சியைத் தரும் என நாம் நம்புகிறோம். உண்மையில், பௌதிக உலகில் மகிழ்ச்சி என்பதே கிடையாது. விஞ்ஞானிகள் எதிர்காலத்தில் மரணத்தை வெல்ல முடியும் என்று கனவு காண்கின்றனர். பலரும் இதே கனவில் மிதக்கின்றனர். ஆனால், “எவ்வளவு இனிமையாக இருந்தாலும், எதிர்காலத்தை நம்பாதே” என்பது பண்டிதர்களின் வாக்கு.

மிருகமாகப் பிறக்கப் போகும் பிரபுபாதர்?

ஸ்ரீல பிரபுபாதர் ஆஸ்திரேலியாவிற்கு வந்தபோது, அவரது பிரச்சாரத்தையும் கிருஷ்ண பக்தி இயக்கத்தையும் விரும்பாத சில பத்திரிகைகள் பல்வேறு விதமான கேலி செய்திகளை பிரசுரித்திருந்த சமயம். அந்த கேலி செய்திகளின் உச்சகட்டமாக, சன் (sun) என்ற பத்திரிகையின் நிருபர், “மிருக நிலைக்கு தாழ்ந்து விடுவோம்” என்ற பிரபுபாதரின் எச்சரிக்கையை முற்றிலுமாகத் திரித்து, பின்வருமாறு பிரசுரித்தார்:

ஐக்கிய நாடுகள் சபையின் தோல்வி

ஸ்ரீல பிரபுபாதர்: இந்த உலகம் படைக்கப்பட்டதன் நோக்கத்தை விளக்கும்படி தங்களது ஐக்கிய நாட்டு சபையிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். நான் மனிதனாகப் படைக்கப்பட்டுள்ளேன், அதே போல யானைகளும் எறும்புகளும்கூட படைக்கப்படுகின்றன. இதற்கான காரணம் என்ன? சூரியனும் சந்திரனும் சரியான நேரத்தில் உதிக்கின்றன, பருவ காலங்கள் மாறுகின்றன. இவற்றின் பின்னணியில் இருக்கும் நோக்கம் என்ன?

Latest

- Advertisement -spot_img