- Advertisement -spot_img

CATEGORY

ஸ்ரீமத் பாகவதம்

புரஞ்ஜனன் மறுபிறவியில் பெண்ணாகப் பிறத்தல்

மன்னன் புரஞ்ஜனன் மிகுந்த கர்வத்துடன் தனது வில்லையும் அம்பையும் ஏந்தி, ஐந்து குதிரைகள் பூட்டிய தேரில் “பஞ்ச பிரஸ்தம்” எனும் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அசுர மனப்பான்மையுடன் அங்கிருந்த விலங்குகளை இரக்கமின்றி கொன்று குவித்தான். இதைக் கண்டு கருணை மனம் படைத்தவர்கள் மிகுந்த துக்கத்தில் ஆழ்ந்தனர்.

மன்னன் புரஞ்ஜனனைப் பற்றிய வர்ணனை

அரச குமாரர்களால் துதிக்கப்பட்ட சிவபெருமான் அங்கிருந்து மறைந்தார். சிவபெருமானால் உபதேசிக்கப்பட்ட ஸ்தோத்திரத்தை பிரசேதர்கள் நீருக்குள் நின்றபடி பத்தாயிரம் வருடங்கள் ஜபித்து தவம் இயற்றினர். அவர்களின் தந்தையான மன்னர் பிராசீனபர்ஹிஷத் பற்பல யாகங்களைச் செய்து கொண்டிருந்தார். அச்சமயத்தில் நாரத முனிவர் மன்னருக்கு தூய பக்தியை உபதேசிக்கும் பொருட்டு கருணையோடு அங்கு எழுந்தருளினார்.

சிவபெருமானின் பாடல்

பிருது மஹாராஜருக்கு பிறகு அவரது மகன் விஜிதாஸ்வன் தன் தந்தையைப் போலவே பெரும் புகழ்பெற்ற மன்னனாக விளங்கினான், தனது அன்பிற்குரிய சகோதரர்களிடம் பூமியின் நான்கு திசைகளை நிர்வகிக்கும் பொறுப்பினை வழங்கினான்.

பிருது மஹாராஜர் வைகுண்டம் திரும்புதல்

பிருது மஹாராஜர் தம் வாழ்வின் இறுதிக் காலத்தில், எல்லாருக்கும் ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்தார். தம் மைந்தர்கள் ஐவரையும், தம் மகளாக பாவித்த இப்பூமிக்கு அர்ப்பணித்தார். அவர் தமது கடமைகளைச் சரிவர நிறைவேற்றிய பிறகு, தவம் செய்வதற்காக மனைவியுடன் வனத்திற்குச் சென்றார். வனத்தில் வானபிரஸ்த வாழ்விற்குரிய விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றி, மிகுந்த கவனத்துடன் தவ வாழ்வை மேற்கொண்டார். அவர் ஆரம்பத்தில் கிழங்குகளையும் கனிகளையும் உட்கொண்டார், வாரக்கணக்கில் தண்ணீர் மட்டுமே அருந்தி வாழ்ந்தார், இறுதியாக காற்றை மட்டுமே சுவாசித்து வாழ்ந்தார்.

பிருது மஹாராஜர் குமாரர்களைச் சந்தித்தல்

குடிமக்கள் பிருது மஹாராஜருக்கு பிரார்த்தனைகளை அர்ப்பணித்துக் கொண்டிருந்த போது, ஸனகரின் தலைமையிலான நான்கு குமாரர்கள் அங்கு வருகை புரிந்தனர். யோக சித்திகளின் தலைவர்களும் சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்டவர்களுமான அம்முனிவர்களைக் கண்டவுடன் மன்னரும் மக்களும் எழுந்து நின்று அவர்களை வரவேற்றனர். மன்னர் அவர்கள் அமருவதற்கு ஆசனமளித்தார், அவர்களது பாதங்களைக் கழுவி அத்தீர்த்தத்தினை தம் தலையில் மகிழ்வுடன் தெளித்துக் கொண்டார், பக்தியும் மரியாதையும் மேலிட அவர்களிடம் உரையாடத் தொடங்கினார்.

Latest

- Advertisement -spot_img