- Advertisement -spot_img

TAG

hare krishna japa

திருநாமத்தின் மகிமை

இந்த வாரம், திருநாம வாரம். இந்தத் திருநாமம் பகவானிடமிருந்து வேறுபட்டதல்ல என்பதால், விருந்தாவனத்திலுள்ள பக்தர்கள் அனைவரும் கிருஷ்ணரின் திருநாமத்தை எப்போதும் உச்சரிக்கின்றனர். கோபியர்கள் ராஸ நடனத்தின்போது ஹரே கிருஷ்ண மந்திரத்தை உரைக்கின்றனர், அன்னை யசோதை தயிர் கடையும்போது கிருஷ்ணரின் நாமத்தை உச்சரிக்கிறாள், விருந்தாவனவாசிகள் அனைவரும் கிருஷ்ண நாமத்தை எப்போதும் உரைக்கின்றனர். எனவே, இந்த கிருஷ்ண நாம ஸங்கீர்த்தனம், கோலோகேர ப்ரேம தன ஹரி-நாம ஸங்கீர்தன, கோலோக விருந்தாவனத்திலிருந்து கிருஷ்ண பிரேமையைக் கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

ஜபம் செய்வது எப்படி?

க்ருஷ்ண-நாம-மஹா-மந்த்ரேர ஏஇத ஸ்வபாவ ஜே ஜபே-தார க்ருஷ்ணே உபஜயே பாவ ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தின் இயல்பு யாதெனில், இதை யார் ஜபித்தாலும், உடனடியாக கிருஷ்ணரின் மீதான பேரன்பு வளரும்." (சைதன்ய சரிதாம்ருதம், ஆதி லீலை 7.83) ஒவ்வோர் உண்மையான கிருஷ்ண பக்தரும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபித்தல் அவசியம். நாம் பல பணிகளில் மும்முரமாக இருந்தாலும், ஹரே கிருஷ்ண ஜபம் செய்வதற்காக தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குதல் அவசியம்.

எளிமையாக வாழ்வீர்! ஹரே கிருஷ்ண சொல்வீர்!

ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் மகிழலாம், ஆனால் மகிழ்ச்சி யினால் உங்களது வாழ்க்கையின் குறிக்கோளை மறந்துவிடுகிறீர்களே! அது புத்திசாலித்தனமா? உயர்ந்த பிறவியை அடைவதற்காக மனித உடல் வழங்கப் பட்டுள்ளது. ஒருவேளை அடுத்த பிறவியில் நீங்கள் நாயாகப் பிறக்க நேரிட்டால், அது வெற்றியாகுமா? கிருஷ்ண உணர்வு விஞ்ஞானத்தை கட்டாயம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதால் நீங்கள் நாயாவதற்கு பதில் தெய்வீக நபராகலாம்.

உணர்வோம் நாமத்தின் மகிமைகளை

அவ்வளவு எளிமையான, உயர்ந்த இந்த ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தினை உச்சரிக்கும் கலையை நாமும் பயின்று மற்றவர்களுக்கும் எடுத்துரைப்பது மிகவும் அவசியம். பிரகலாத மஹாராஜர் இதற்கு சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தார். பகவானின் திருநாமத்தை அவர் எச்சூழ்நிலையிலும் தவறாது உரைத்ததோடு மட்டுமல்லாது தனது சக நண்பர்களுக்கும் இதனைப் பழக்கிக் கொடுத்து இன்புறச் செய்தார்.

இறையன்பை வழங்கும் திருநாம உச்சாடனம்

புனித நாமங்கள் இரு வகைப்படும். ஒன்று, முக்கிய நாமங்கள் என்றும், மற்றொன்று, கௌன்ய நாமம், அதாவது இரண்டாம் நிலை நாமங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இனிமையான ஆன்மீக உலகுடன் தொடர்புடைய திருநாமங்கள் (கிருஷ்ண, ராதா ரமண, கோபிஜன வல்லப, ராம, நரசிம்ம, வாசுதேவ போன்றவை) அவரது முக்கிய நாமங்களாகும். ஜடவுலகத்துடன் தொடர்பு கொண்டுள்ள திருநாமங்கள் (பிரம்மன், பரமாத்மா, ஜெகத்பதி, ஸ்ருஸ்டி கர்த்தா போன்றவை) இரண்டாம் நிலை நாமங்களாகும். இரண்டாம் நிலை நாமங்கள் முழுமுதற் கடவுளின் சக்தியில் ஒரு பகுதியை மட்டுமே பிரதிநிதிக்கின்றன. அவை பூரணமற்றவை. ஆனால் பகவானின் முக்கிய நாமங்களோ அவரிலிருந்து வேறுபட்டவையல்ல, மேலும் அவருடைய எல்லா சக்திகளையும் உள்ளடக்கியவை. ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மஹாமந்திரத்தை “மாதுர்ய நாமம்” என்னும் பிரத்யேகமான வகையைச் சார்ந்ததாக ஸ்ரீல பக்திவினோத தாகூர் கூறுகிறார்.

Latest news

- Advertisement -spot_img