பக்தர்கள் மனம் உருகி பகவானை வழிபட வேண்டும் என்னும் கூற்று பலரும் அறிந்த ஒன்று. இஃது என்ன, பகவானின் மனதை உருக்குதல்? ஆம், இதுவே பக்தி. உண்மையான பக்தியில் பக்தரின் மனம் மட்டுமின்றி பகவானின் மனமும் உருகுகிறது. ஏனெனில், உண்மையான பக்தியில், பக்தன் பகவானின் மீது அன்பு செலுத்துவதைப் போலவே பகவானும் பக்தனின் மீது அன்பு செலுத்துகிறார். அந்த அன்புதான் அவரது மனதையும் உருக வைக்கிறது.
கிருஷ்ணரின் மனதை உருக்கும் பக்தியின் குணங்களில் ஒன்று, பணிவு. சரணாகதியின் ஆறு தன்மைகளில் ஒன்றான பணிவினை பக்தன் உண்மையான முறையில் வெளிப்படுத்தும்போது, அது பகவானைக் கவருகிறது, சில சமயங்களில் அவரது உள்ளத்தை உருக்குகிறது.
அப்பா, நாம் மழைக்காக இந்திரனை வழிபட வேண்டியதி ல்லை. கடல் இந்திரனை வழிபடுவதில்லை, ஆயினும் அங்கும் மழை பொழிகிறது. அதனால், நம் மாடுகளுக்கு புல்லும் நமக்கு பலவிதமான பழங்களையும் வழங்கும் கோவர்தன மலையை நாம் வழிபடலாமே. சரி அவ்வாறே செய்யலாம். நந்த மஹாராஐர் ஒப்புக் கொண்டார்
கிருஷ்ணரே தலைசிறந்த கலைஞர் என்று வேதங்கள் கூறுகின்றன: ந தஸ்ய கார்யம் கரணம் ச வித்யதே ந தத் ஸமஷ் சாப்யதிகஷ் ச த்ருஷ்யதே. பரம புருஷரைவிட உயர்ந்தவரோ அவருக்கு சமமானவரோ எவரும் இல்லை. மேலும், அவரே மிகச்சிறந்த கலைஞர் என்பதால், அவர் செய்ய வேண்டிய செயல் என்று எதுவும் இல்லை.
பீஷ்மர் பரத குலத்தோரில் மாபெரும் வீரர். தன் வாழ்நாள் முழுவதும் பிரம்மசரியத்தைக் கடைபிடித்த வைராக்கிய சீலர், எட்டு வசுக்களில் சிறந்தவர். ஹஸ்தினாபுர அரசவையில் சிறப்பான முறையில் நிர்வாகம் செய்தவர். மஹாபாரதம் கேட்ட படித்த அனைவருக்கும் இவை தெரிந்த விஷயங்களே. ஆனால் அவர் பன்னிரண்டு மகாஜனங்களில் (மிகவுயர்ந்த பக்தர்களில்) ஒருவர் என்பதும், வியாசர் போன்ற மாமுனிவரிலும் மேன்மையானவர் என்பதும் பலர் அறியாத உண்மை. அவருக்கும் பகவானுக்கும் உள்ள உறவைப் பற்றி விவரமாகக் காணலாம்.