- Advertisement -spot_img

TAG

memories

இந்தியாவில் பண்பாடு இன்னும் எஞ்சியுள்ளது

டிசம்பர் 18, 1972, மும்பை: தினசரி காலை நானும் சியாமசுந்தர தாஸும் ஸ்ரீல பிரபுபாதருடன் இணைந்து, கார்த்திகேயனின் அம்பாசிடர் காரை எடுத்துக் கொண்டு கடற்கரைக்குச் சென்று, அங்கே சிறிது நேரம் நடைப்பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். ஒருநாள் காலை, நடைப்பயிற்சியை முடித்து விட்டு அனைவரும் காருக்கு வந்தோம்; சியாமசுந்தர் சாவியை உள்ளிட்டு காரை ஸ்டார்ட் செய்கிறார், ஆனால் எவ்வளவோ முயன்றும் அது ஸ்டார்ட் ஆகவில்லை.

எல்லாவற்றிலும் வீற்றுள்ள கிருஷ்ணர்

ஒருநாள் ஸ்ரீல பிரபுபாதர் பூங்கா ஒன்றில் இருந்தபோது, ஆகாயத்தைப் பார்த்த வண்ணம் வினவினார், “கிருஷ்ணர் ஆகாயத்தின் நிறத்தைக் கொண்டுள்ளாரா?” “மழை மேகத்தைப் போல கிருஷ்ணர் கருநீல வண்ணமுடையவர் என்று கிருஷ்ணர் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது,” என்று சீடர் ஒருவர் பதிலளித்தார். “கிருஷ்ணர் ஆகாயத்தின் நிறத்தைக் கொண்டுள்ளார். அவருடைய திருமேனியின் தேஜஸிலிருந்து வரும் ஒளியே ஆகாயத்திற்கு நீல நிறத்தை அளிக்கிறது,” என்று ஸ்ரீல பிரபுபாதர் விளக்கமளித்தார்.

என்றும் எங்கள் நலனை விரும்பியவர்

விருந்தாவனத்தில் ஒருநாள் யமுனை நதிக்கரை வழியாக நாங்கள் காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த வேளையில், நதியிலிருந்து சிறிது நீரை எடுத்து வருமாறு ஸ்ரீல பிரபுபாதர் கூறினார். சியாமசுந்தர பிரபு தனது கை நிறைய நீர் எடுத்து வந்தார். ஸ்ரீல பிரபுபாதர் தமது தலையில் சில நீர்த்துளிகளைத் தெளித்துக் கொண்டு, எங்கள் அனைவரையும் அவ்வாறு செய்யுமாறு கூறினார். “இது யமுனையில் நீராடியதற்கு சமமானது,” என்று அவர் கூறினார்.

குரங்கின் சாமர்த்தியம்

விருந்தாவனத்திற்கு ஸ்ரீல பிரபுபாதர் விஜயம் செய்தபோது, ஒருநாள் மாலை வேளையில், தமது வரவேற்பு அறையில் உபன்யாசம் வழங்கிக் கொண்டிருந்தார். அச்சமயம், குரங்கு ஒன்று அங்கு வைக்கப்பட்டிருந்த வாழைப்பழங்களை நோக்கி பாய்ந்தது. உடனே, விஷாகா தாஸி ஒரு துணியை வீசி பெரும்பாலான வாழைப்பழங்களை குரங்கிடமிருந்து மீட்டாள். இருப்பினும், குரங்கு சில பழங்களை எடுத்துச் சென்று விட்டது.

உடல் நலனுக்கு அப்பாற்பட்ட கிருஷ்ண சேவை

இரவு மணி 9:30. விருந்தாவனத்தில் கோடை கால இரவு வேளையில், ஸ்ரீல பிரபுபாதர் என்னை அவரது அறைக்கு அழைத்து சில சேவைகளை வழங்கிய பின்னர் கூறினார், “நீங்கள் இப்போது ஓய்வெடுக்கச் செல்லலாம்.” அதனைத் தொடர்ந்து, ஸ்ரீல பிரபுபாதரின் அறைக்கு முன்பாக நான் எனது பாய், கொசு வலை முதலியவற்றை தயார் செய்ய பதினைந்து நிமிடம் ஆயிற்று. சுமார் பத்து மணி இருக்கும். பிரபுபாதருடைய அறையிலிருந்து சப்தம் கேட்டது.

Latest news

- Advertisement -spot_img