- Advertisement -spot_img

CATEGORY

ஸ்ரீமத் பாகவதம்

எம தூதர்களுக்கு எமராஜர் வழங்கிய அறிவுரை

விஷ்ணு தூதர்களால் தோற்கடிக்கப்பட்ட எம தூதர்கள், ஸம்யமனீ புரியின் தலைவரும் தங்களின் எஜமானருமான எமராஜரிடம் சென்று, நிகழ்ந்ததை எடுத்துரைத்து சில வினாக்களை எழுப்பினர்: “எஜமானரே! அஜாமிளன் ‘நாராயண’ என அழைத்ததும், ‘பயப்படாதே’ எனக் கூறியபடி, அங்கே வந்து அவனை விடுவித்த அந்த நான்கு அழகிய நபர்கள் யார் என்பதை அறிய விரும்புகிறோம். அஃது உகந்ததாக இருக்குமெனில், தயவுசெய்து கூறுங்கள்.

ஹரி நாமத்தின் மகிமை

அஜாமிளனின் குற்றத்தை விளக்கிக் கூறிய எம தூதர்களிடம் விஷ்ணு தூதர்கள் பின்வருமாறு கூறினர்: “பொதுவாக பாமர மக்கள் எது தர்மம், எது அதர்மம் என்பதை அறியாதவர்களாக உள்ளனர். பொதுமக்கள் சமூகத்திலுள்ள தலைவனின் உதாரணத்தைப் பின்பற்றி நடப்பர். எனவே, தலைவனின் நடத்தை மிகவும் பொறுப்புமிக்கதாகும். “ஒரு தலைவன் இரக்க மனம் உடையவனாக, மக்களின் நம்பிக்கைக்குத் தகுதியானவனாக இருக்க வேண்டும். வாழ்வின் இறுதிக் குறிக்கோள் தன்னுணர்வைப் பெற்று—முழுமுதற் கடவுளுடனான தனது நித்திய உறவை அறிந்து—அதனை மீண்டும் புதுப்பித்துக் கொண்டு, அவரது நித்திய உலகைச் சென்றடைவதாகும். எனவே, தலைவனானவன் இந்த உண்மையான இலட்சியத்தை அடைவதற்கு மக்களுக்கு வழிகாட்டுபவனாக இருக்க வேண்டும்.”

அஜாமிளனின் வாழ்க்கை வரலாறு

ஐந்தாம் ஸ்கந்தத்தின் இறுதியில், பல்வேறு நரக லோகங்களின் வர்ணனைகளைப் பற்றி சுகதேவரிடமிருந்து கேட்டறிந்த பரீக்ஷித் மஹாராஜர் மக்கள் நரக வாழ்விலிருந்து விடுபட்டு முக்தி அடைவதற்கான வழிகளை அவரிடம் வினவினார். அதற்கு சுகதேவர் பின்வருமாறு பதிலளித்தார், “அரசே ஒருவன் இவ்வாழ்வில் உடலாலும் மனதாலும் செய்துள்ள பாவ விளைவுகளிலிருந்து விடுபடுவதற்கு சாஸ்திரங்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ள பிராயச்சித்தங்களைச் செய்ய வேண்டும். மருத்துவர்கள் நோயின் கடுமைக்கு ஏற்ப சிகிக்சை அளிப்பதுபோல, பாவங்களின் கடுமைக்கு ஏற்ப அவரவர் செய்ய வேண்டிய பிராயச்சித்தங்களை விரைவில் அவசியம் மேற்கொள்ள வேண்டும்; ஏனெனில், மரணம் வரும் நேரம் எதுவென்று யாரால் அறிய இயலும்?”

நரக லோகங்களின் வர்ணனை

உயிர்வாழிகள் பல்வேறு பெளதிக நிலைகளில் வைக்கப்படுவதற்கான காரணம் குறித்து சுகதேவ கோஸ்வாமியிடம் மன்னர் பரீக்ஷித் வினவினார். அதற்கு சுகதேவ கோஸ்வாமி பின்வருமாறு பதிலளித்தார். மக்கள் அனைவரும் பௌதிக இயற்கையின் முக்குணங்களால் பாதிக்கப்படுகின்றனர். ஸத்வ குணத்தில் செயலாற்றுபவன் சமயச் சார்புடையவனாகவும் மகிழ்ச்சி உடையவனாகவும் இருக்கிறான். ரஜோ குணத்தில் செயல்படுபவன் பல்வேறு இன்ப துன்பங்களைக் கலந்து பெறுகிறான். தமோ குணத்தில் செயல்படுபவனோ பாவச் செயல்களில் ஈடுபட்டு, அறியாமையின் அளவிற்கு ஏற்ப பல்வேறு நரக லோகங்களுக்கு இழுத்துச் செல்லப்படுகிறான்.

கீழுலக ஸ்வர்கங்கள்

சூரியனுக்கு கீழே 80,000 மைல் தொலைவில் இராகு கிரகம் உள்ளது. சிம்ஹிகா என்பவரின் மைந்தன் தேவராக இருப்பதற்கும் கிரகத்தின் அதிபதியாக இருப்பதற்கும் முற்றிலும் தகுதியற்றவன் என்றபோதிலும், முழுமுதற் கடவுளின் அருளால் அவன் இராகு கிரகத்திற்கு அதிபதியாக விளங்குகிறான். பகவான் மோஹினி ரூபம் ஏற்று தேவர்களுக்கு அமிர்தத்தை வழங்கியபோது, இராகு சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே தொந்தரவு செய்து அவர்களுக்கு அமிர்தம் கிடைக்காமல் தடுத்தான்.சூரியன் மற்றும் சந்திரனுக்கு இராகு இடையூறு செய்யும் காலமே கிரகண காலம் என்று அழைக்கப்படுகிறது.

Latest

- Advertisement -spot_img