கடன் அன்பை முறிக்கும், கடன் வாங்கிக் கடன் கொடுத்தார் கெட்டார், பெற்ற பிள்ளையையும் வாங்கிய கடனையும் இல்லை எனக் கூற முடியாது என்று மக்கள் அடிக்கடி கூறுவதைக் கேட்டிருக்கின்றோம். கடன் தொல்லையினால், தூக்குப் போட்டுத் தற்கொலை, விஷம் குடித்துத் தற்கொலை. ரயில் முன் பாய்ந்து தற்கொலை போன்ற விரும்பத்தகாத சம்பவங்களும் அடிக்கடி வரும் செய்திகளாகும். மக்கள் கடன் தொல்லையினால் அவதிப்படும்போது நரக வேதனையின் உச்சத்திற்கே சென்று விடுகின்றனர்.
இன்றைய இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்திலுள்ள மித்னாபுர் மாவட்டத்தில் அமைந்திருப்பதே கோபி வல்லபபுர் என்னும் திருத்தலம். வெளியுலக மக்களுக்கு பரவலாக அறியப்படாதபோதிலும், கௌடீய வைஷ்ணவர்களுக்கு மத்தியில் கோபி வல்லபபுர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திருத்தலமாகும். கரக்புரிலிருந்து சுமார்200 கி.மீ. தொலைவில், ஒடிசா மாநிலத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த திருத்தலத்தை வைஷ்ணவர்கள் "குப்த விருந்தாவனம்" என்றும் அழைப்பதுண்டு.
இன்றைய இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்திலுள்ள மாயாபுரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்திருப்பதே சாந்திபுரம் என்னும் திருத்தலம். சைதன்ய மஹாபிரபு இவ்வுலகில் தோன்றுவதற்கு முதன்மை காரணமாகத் திகழ்ந்த அத்வைத ஆச்சாரியர் இவ்விடத்தில் வசித்ததால்,
சென்னையிலும் தமிழகத்தின் பிறபகுதிகளிலும் சமீபத்தில் வரலாறு காணாத கனமழை பெய்தது. கன மழை படிப்படியாக வெள்ளக்காடாக மாறியபோது பொருள் சேதத்தையும், உயிர் சேதத்தையும் கண்முன் கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்தனர். குடியிருப்புகள் ஆழமான நீச்சல்குளம் போல் திடீரென உருவானதை கண்ட மக்கள் மனபிரம்மைக்கு உள்ளாகி செய்வதறியாது தவித்தனர். இயற்கை சீற்றத்தின் கோர தாண்டவத்தால் அத்தியாவசியப் பொருட்களுக்கே பரிதவித்தனர்.