மக்கள் பொதுவாக எதிர்காலத்தை அறிந்துகொள்வதற்கும் துன்பமயமான குழப்ப சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்கும் ஜோதிடர்களை நாடுவது வழக்கம். எனக்கு நேரம் எப்படி இருக்கிறது” என்று கேட்பவர்களுக்கு தினசரி பலன், வார ராசிபலன், பெயர்ச்சி பலன்கள் என தொடர்ச்சியாக ஜோதிடர்கள் தகவல்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கும் மேலாக கைரேகை, ஜென்ம ஜாதகம், ஓலைச்சுவடிகள், கிளி ஜோதிடம், கம்ப்யூட்டர் ஜோதிடம், குறி சொல்பவர்கள் என மக்கள் ஒவ்வொரு திசையிலும் ஜோதிடர்களை அணுகி ஆலோசிப்பதை கண்கூடாக காண்கிறோம்.
இன்றைய இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில், மதுராவிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அழகான மலையாக அமைந்திருப்பதே கோவர்தனம் என்னும் திருத்தலம். ஆன்மீக உலகமான கோலோக விருந்தாவனத்திலிருந்து தோன்றிய கோவர்தன மலையானது விருந்தாவனத்தின் மணிமகுடம் என்றும் அறியப்படுகிறது.
பலராமர் அன்னை தேவகியின் கருவினுள் ஏழாவது குழந்தையாக தோன்றியபோது, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தன் அந்தரங்க சக்தியான யோக மாயையிடம், பலராமரை ரோகிணியின் கருவிற்கு மாற்றுமாறு கட்டளையிட்டார். இவ்வாறு ரோகிணியின் கருவிலிருந்து பிறந்த பலராமர், கோகுலத்தில் நந்த மகாராஜரின் பாதுகாப்பில் வளர்ந்தார். தெய்வீகக் குழந்தையின் அதீத சக்தியைக் கண்ட குல குருவான கர்கமுனி, அவருக்கு பலராமர் என்னும் திருநாமத்தைச் சூட்டினார்.
வெள்ளை நிற கங்கை நதியும், கருநீல நிற யமுனை நதியும், கண்களுக்குப் புலப்படாமல் பூமிக்கு அடியில் ஓடும் சரஸ்வதி நதியும் ஒன்று கூடுகின்ற இடம் திரிவேணி சங்கமம் என அழைக்கப்படுகின்றது. அமிர்தத் துளிகள் இந்த சங்கமத்தில்தான் சிதறியது என்பதால், இவ்விடத்தில்தான் கும்பமேளாவின் நீராடும் சடங்கு கொண்டாடப்படுகின்றது. காடுகள், இமயமலையின் குகைகள், மற்றும் இந்தியாவின் பல பகுதிகள் மட்டுமின்றி உலகெங்கிலும் இருந்து யாத்ரீகர்கள், யோகிகள், சாதுக்கள் என பலரும் இங்கு வந்து நீராடியுள்ளனர். நாங்கள் மழைக்காலம் முடிந்த தருணத்தில் சென்றதால், கங்கை, யமுனை என இரு நதிகளிலும் நீர்பெருக்கு அதிகமாக இருந்தது. படகில் ஏறி திரிவேணி சங்கமத்தை அடைந்த நாங்கள், அங்கே இரண்டு படகுகளுக்கு இடையில் மூன்றடி ஆழத்தில் மரத்தினால் கட்டப்பட்டிருந்த தளத்தில் நின்றபடி புனித நீராடினோம்.
ஒரே உடலில் அனைத்து ஆசைகளையும் அனுபவிக்க முடியாது என்பதால் வெவ்வேறு ஆசைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக இயற்கை 84 இலட்சம் வகையான உடல்களைப் படைத்திருக்கின்றது. இயற்கையானது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றது. இப்பிறவியில் ஒருவர் செய்யும் செயல்களுக்கும் ஆசைகளுக்கும் தகுந்தவாறு மறுபிறவியில் அவருக்கு உடல் கொடுக்கப்படுகின்றது. இறக்கும் நேரத்தில் யார் எதை நினைக்கின்றாரோ அதை நிச்சயம் அடைவர் (பகவத் கீதை 8.6).