திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில்
விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்;
இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து
வருகிறார்.
“ஜீவராசிகள் மற்றும் பரம புருஷர் பற்றிய உண்மைகள் யாவை? அவர்களுக்குரிய அடையாளங்கள் என்னென்ன? வேத ஞானத்தின் விசேஷ மதிப்பென்ன? மேலும் குரு சீடப் பரம்பரையின் அவசியம் என்ன? தூய பக்தர்களின் (ஆன்மீக குருவின்) உதவியின்றி, பக்தித் தொண்டு, துறவு ஆகியவற்றின் அறிவை ஒருவரால் எப்படிப் பெற முடியும்?
சக்தியை வேண்டிய தேவர்களின் பிரார்த்தனைகளை செவியுற்ற பகவான் படைப்புத் தொழிலுக்கு புத்துயிர் ஊட்ட முடிவு செய்தார். அதற்காக, இருபத்துமூன்று மூலப் பொருட்களுக்குள் தமது புற சக்தியான காளிதேவியுடன் புகுந்தார். அதனால், உறங்கி எழுபவன் மீண்டும் தன் செயல்களில் ஈடுபடுவதைப் போலவே, அனைத்து ஜீவராசிகளும் வெவ்வேறு செயல்களை செய்யும்படி உற்சாகப்படுத்தப்பட்டனர்.
இந்த இதழில்: மூன்றாம் ஸ்கந்தம், ஐந்தாம் அத்தியாயம்
இதுவரை மகாத்மா விதுரர் தூய பக்தரான உத்தவருடன் மேற்கொண்ட தெய்வீக உரையாடலைக் கேட்டோம், இனி மாமுனிவரான மைத்ரேயரிடம் விதுரர் பெறும் உபதேசங்களைக் காண்போம்.
விதுரரின் கேள்விகள்
அமைதியில் பூரணத்துவமும்...
வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்
இந்த இதழில்: மூன்றாம் காண்டம், மூன்றாம் அத்தியாயம்
சென்ற இதழில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பெருமைகளையும் அவரது விருந்தாவன லீலைகளையும் உத்தவர் விதுரரிடம் சுருக்கமாக விவரித்ததைக் கண்டோம். இவ்விதழில் மதுரா...
“பகவான் தனது அந்தரங்க சக்தியான யோக மாயையால் இந்த ஜடவுலகில் தோன்றுகிறார். அவருடைய லீலைகள் அவரது விரிவங்கமான வைகுண்டநாதர் உட்பட அனைவருக்கும் அற்புதமாக இருந்தன. யுதிஷ்டிரரின் ராஜசூய யாகத்தில் கலந்துகொண்ட தேவர்கள் அனைவரும் கிருஷ்ணரின் உன்னத அழகில் மனதைப் பறிகொடுத்து பிரம்மாவை மனமார பாராட்டினர். (கிருஷ்ணர், பிரம்மதேவரின் ஒரு அற்புத படைப்பு என்று அவர்கள் எண்ணினர்.)