AUTHOR NAME

Vanamali Gopala Dasa

100 POSTS
0 COMMENTS
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

கடவுளை அறிவதன் முதல்படி

பரீக்ஷித் மஹாராஜர் சுகதேவரிடம் தொடர்ந்து விசாரணை செய்தார்: “மனதை எங்கு, எப்படி, எத்தகைய எண்ணத்தில் பதிவு செய்து அதன் அழுக்குகளை அகற்றிக் கொள்ள முடியும

சுகதேவ கோஸ்வாமியின் வருகை

மன்னர் கேள்வியெழுப்பிய அச்சமயத்தில், ஆத்ம திருப்தி யுடையவரும் சக்தி வாய்ந்தவருமான ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி அங்கு தோன்றினார். வியாஸதேவரின் புதல்வரான அவர் பதினாறு வயதே நிரம்பியவராக இருந்தார். அவரது பாதங்கள், கைகள், தொடைகள், கரங்கள், தோள்கள், நெற்றி, மற்றும் உடலின் எல்லா பகுதிகளும் நேர்த்தியாக அமைந்திருந்தன. அவரது கண்கள் அகன்றும், மூக்கு எடுப்பாகவும், கழுத்து சங்கு போலவும், முகம் மிகவும் கவர்ச்சியாகவும் விளங்கியது.

கலி பெற்ற பரிசும் தண்டனையும்

ஓர் ஆதரவாளராக அல்லது விஷமியாக இருப்பதற்கு யாரும் நேரடியான பொறுப்பாளியல்ல என்பது பக்தர்களின் முடிவாகும். எனவே, தீங்கு செய்பவர் அல்லது விஷமியை அடையாளம் காண்பவரும் அந்த விஷமிக்குச் சமமான பாவம் செய்தவராகவே தெரிகிறார். பகவானின் கருணையால் பக்தர் எல்லா தீமைகளையும் பொறுத்துக் கொள்கிறார். பக்தனுக்குத் துன்பமே இல்லை; ஏனெனில், அனைத்திலும் பகவானையே காணும் பக்தருக்கு பெயரளவேயான அத்துன்பமும் கூட பகவானின் கருணையே. பிறரால் துன்புறுத்தப்படும்போது பொதுவாக மக்கள் அரசாங்க அதிகாரிகளிடம் புகார் செய்வார்கள். ஆனால் கலி புருஷனால் சித்ரவதை செய்யப்பட்டதைக் குறித்து பசுவும் எருதும் அரசரிடம் எந்த புகாரும் செய்யவில்லை. எருதின் அசாதாரணமான நடத்தையைக் கொண்டு அது நிச்சயமாக தர்ம தேவனாக இருக்க வேண்டும் என்று அரசர் முடிவு செய்தார். ஏனெனில், மதக் கோட்பாடுகளின் மென்மையான நுட்பங்களை வேறு யாராலும் புரிந்துகொள்ள முடியாது.

பரீக்ஷித் கலியை வரவேற்ற விதம்

பரீக்ஷித் கலியை தண்டித்ததைப் பற்றி கேள்விப்பட்ட சௌனக ரிஷி, அவ்விஷயம் கிருஷ்ணரோடு தொடர்புடையதாக இருப்பின் விரிவாக விளக்குமாறு வேண்டினார். பகவத் பக்தர்கள் பகவானின் தாமரைப் பாதங்களிலிருந்து கிடைக்கும் தேனைச் சுவைப்பதில் பழக்கப்பட்டவர்கள். பகவானின் புனித நாமம் மற்றும் லீலைகளை கேட்பதும் பாடுவதும் மரணத்தின் பிடியிலிருந்து தப்புவதற்குரிய ஒரே வழியாகும். எமராஜன் பகவானின் மிகச்சிறந்த பக்தர் என்பதால், பகவானின் பக்தித் தொண்டில் இடைவிடாமல் ஈடுபட்டுள்ள தூய பக்தர்களின் கீர்த்தனங்களுக்கும் யக்ஞங்களுக்கும் அழைக்கப்படுவதை அவர் பெரிதும் விரும்புகிறார். எனவே, சௌனகரைத் தலைமையாகக் கொண்ட பெரும் முனிவர்கள் நைமிஷாரண்யத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட யாகத்திற்கு எமராஜரையும் அழைத்திருந்தனர். மரணமடைய விரும்பாத வர்களுக்கு அது நல்ல பலனை அளித்தது.

பாண்டவர்களின் துறவு

பகவான் தம் இருப்பிடத்திற்குச் சென்று விட்டதையும் யது குலத்தின் முடிவையும் கேள்விப்பட்ட யுதிஷ்டிரர் தாமும் பகவானின் நித்ய வாசஸ்தலத்திற்குத் திரும்பி விட முடிவு செய்தார். அதைக் கேட்ட குந்திதேவியும் பரம புருஷரின் பக்தித் தொண்டில் முழு கவனத்துடன் ஈடுபட்டு பௌதிக வாழ்வின் சுழற்சியிலிருந்து விடுபட்டாள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தம் சுய உருவத்துடன் இம்மண்ணுலகை விட்டுச் சென்ற அந்த நாளிலிருந்து, ஏற்கனவே ஒரு பகுதி மட்டும் தோன்றியிருந்த கலி முழுமையாக வெளிப்பட்டது. அதனால் பூமியின் எல்லாப் பகுதிகளிலும் பலவிதமான அமங்களமான சூழ்நிலைகள் உருவாயின. புத்திசாலியான யுதிஷ்டிர மஹாராஜர், பேராசை, பொய்மை, நேர்மையின்மை, மூர்க்கத்தனம் போன்றவை கலி யுகத்தின் ஆதிக்கத்தால் மேலோங்குவதைப் புரிந்து கொண்டார். அவர் தனக்கு நிகரான தகுதியைப் பெற்றிருந்த பேரன் பரீக்ஷித்தை அரியாசனத்தில் அமர்த்தினார். பின்னர், அநிருத்தனின் மகனான வஜ்ரனை சூரசேன நாட்டின் அரசனாக அமர்த்தினார்.

Latest