AUTHOR NAME
Vanamali Gopala Dasa
99 POSTS
0 COMMENTS
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.
விருத்ராசுரனின் புகழ் மிக்க மரணம்
விருத்ராசுரன் தமது உபசேனாதிபதிகளுக்கு யுத்த தர்மத்தை உபதேசித்தாலும் அவர்கள் அதை ஏற்க மறுத்து மிகுந்த அச்சத்திற்குள்ளாயினர். இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி தேவர்கள் அசுர சேனைகளைப் பின்புறமாகத் தாக்கி அவர்களை இங்குமங்கும் சிதறியோடச் செய்தனர். அசுரர்களின் பரிதாபமான நிலையைக் கண்ட விருத்ராசுரன் சினம் கொண்டு, தேவர்களைப் பார்த்து பின்வருமாறு பேசினார்:
தேவர்களுக்கும் விருத்ராசுரனுக்கும் இடையிலான போர்
பகவான் விஷ்ணுவின் அறிவுரையைப் பின்பற்றிய தேவர்கள் தயாள குணமுடைய ததீசி முனிவரை அணுகி அவரது உடலை வேண்டினர். தேவர்களின் கோரிக்கையை முனிவர் உடனே ஏற்றுக் கொண்டாலும், அவர்களுடன் சமயக் கோட்பாடுகளைப் பற்றி சிறிதுநேரம் உரையாட விரும்பி பின்வருமாறு பேசினாபகவான் விஷ்ணுவின் அறிவுரையைப் பின்பற்றிய தேவர்கள் தயாள குணமுடைய ததீசி முனிவரை அணுகி அவரது உடலை வேண்டினர். தேவர்களின் கோரிக்கையை முனிவர் உடனே ஏற்றுக் கொண்டாலும், அவர்களுடன் சமயக் கோட்பாடுகளைப் பற்றி சிறிதுநேரம் உரையாட விரும்பி பின்வருமாறு பேசினார்:
விருத்ராசுரனின் பிறப்பு
விஸ்வரூபரின் தந்தைவழி உறவினர்கள் தேவர்கள், தாய்வழி உறவினர்கள் அசுரர்கள். அவர் யாகம் செய்தபோது வெளிப்படையாக தேவர்களுக்காகவும் இரகசியமாக அசுரர்களுக்காகவும் யாகத் தீயில் நிவேதனம் அளித்தார். இதைப் புரிந்து கொண்ட இந்திரன் அசுரர்களால் தோற்கடிக்கப்பட்டு விடுவோமோ என்ற பயத்தில், கோபத்துடன் விஸ்வரூபரின் மூன்று தலைகளையும் வெட்டி வீழ்த்தினார்.
நாராயண கவசம்
விஸ்வரூபர் நாராணய கவசத்தை இந்திரனுக்கு உபதேசிக்கத் துவங்கினார். ஓம் அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோ ’பி வா/ ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பஹ்யாப்யந்தர: சுசி:/ ஸ்ரீ-விஷ்ணு ஸ்ரீ-விஷ்ணு ஸ்ரீ-விஷ்ணு.
தக்ஷன் நாரதரை சபித்தல்
பகவானின் மாயா சக்தியால் தூண்டப்பட்டு பிரஜாபதி தக்ஷன், அஸிக்னி என்ற பாஞ்சஜனீயின் மூலம் பத்தாயிரம் மகன்களைப் பெற்றார். அந்த மகன்கள் ஹர்யஸ்வர்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் குணத்தில் சாந்தமானவர்களாகவும் பணிவுமிக்கவர்களாகவும் இருந்தனர். தந்தையின் கட்டளையை ஏற்று, மேற்கில் சிந்து நதி கடலுடன் சங்கமிக்கும் நாராயண சரஸ் என்னும் புனித தீர்த்தத்திற்குச் சென்றனர்.

