AUTHOR NAME

wadminw

185 POSTS
0 COMMENTS

புரியில் பக்தர்களுடன் மஹாபிரபு

புரியில் வாழ்ந்த மஹாபிரபுவின் பக்தர்களில் ஒருவரான பகவானாசாரியர் மிகவும் பரந்த மனப்பான்மையுடன் இருந்தார். ஆனால் கண்டிப்புடன் திகழ்ந்த ஸ்வரூப தாமோதரர் தூய பக்தித் தொண்டின் கொள்கைகளுக்கு எதிரான எதையும் சகித்துக்கொள்ள மாட்டார், சில நேரங்களில் பகவானாசாரியரின் முடிவுகளை சந்தேகிப்பார்.

தமிழில் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் பிரம்மாண்ட வெளியீட்டு விழா

காலையில் ஸ்ரீல பிரபுபாதருக்கு குரு பூஜை முடிந்தவுடன், ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் பிரதிகள் முதலில் ஸ்ரீல பிரபுபாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டன. தவத்திரு பானு ஸ்வாமி, தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி, திரு முரளி பட்டர், திரு ராதே ஷ்யாம் தாஸ், திரு சுமித்ர கிருஷ்ண தாஸ், திரு ருக்மிஹா தாஸ், திரு ஸ்ரீ கிரிதாரி தாஸ், திரு ஸத்ய நாராயண தாஸ் ஆகியோர் நூலை ஸ்ரீல பிரபுபாதருக்கு முதலில் அர்ப்பணித்தனர். அதனைத் தொடர்ந்து, கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீஸ்ரீ கௌர நிதாய், ஸ்ரீஸ்ரீ ராதா-கிருஷ்ணர், ஸ்ரீஸ்ரீ ஜகந்நாத-பலதேவ-சுபத்திரை ஆகியோருக்கும் நூல் அர்ப்பணிக்கப்பட்டது.

மஹாபாரதம் வழங்கிய உலக வரைபடம்

மஹாபாரதம் ஒரு கட்டுக்கதை என்று ஆதாரமின்றி சிலர் அபத்தமாகக் கூறுகின்றனர். ஆனால் மஹாபாரதம் என்பது உண்மை சம்பவங்களை விவரிக்கும் ஓர் இதிகாசம். இதில் நாம் வாழும் உலக வரைபடம் உட்பட மிகவுயர்ந்த ஸநாதன தர்மத்தின் தத்துவங்கள் விஞ்ஞானபூர்வமாக துல்லிய விவரங்களுடன் வழங்கப்பட்டுள்ளது. ஐரோப்பா, அமெரிக்கா முதலிய தேசங்களில் வாழ்பவர்களே நாகரிகம் மற்றும் விஞ்ஞானத்தின் உச்ச நிலையில் உள்ளனர், மற்ற நாடுகளில் வசிப்பவர்கள் பின்தங்கியவர்கள்,” என்று நினைப்பவர்களுக்கு இந்தக் கட்டுரை ஒரு மாற்று கருத்தைத் தரவல்லது.

மாமனிதர் பீஷ்மர்

பீஷ்மருடைய விருப்பத்தின்படி, சாந்தனுவிற்கும் சத்தியவதிக்கும் திருமணம் நிகழ்ந்தது. சித்ராங்கதர், விசித்ரவீர்யர் என்ற இரண்டு மகன்கள் பிறந்தனர். சித்ராங்கதர் ஒரு கந்தர்வனால் கொல்லப்பட்டார். விசித்ரவீர்யர் அரியணையை ஏற்றார். ஹஸ்தினாபுரத்தை அடைந்த பின்னர், அம்பை சால்வன் என்ற இளவரசனின் மீதான தனது காதலை பீஷ்மரிடம் வெளிப்படுத்தி, தம்மை விசித்ரவீர்யரை மணக்கும்படி கட்டாயப்படுத்த வேண்டாம் என்றாள்.

ரகுநாத தாஸரின் சரணாகதியும் நாய்க்குக் கிடைத்த முக்தியும்

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காசியிலிருந்து புரிக்குத் திரும்ப ஆவல் கொண்டார். ஸநாதன கோஸ்வாமியிடம் விருந்தாவனத்திலுள்ள ரூபர் மற்றும் அனுபமருடன் இணையும்படியும், வைஷ்ணவ நடத்தையைப் பற்றி ஒரு நூலினை எழுதும்படியும், விருந்தாவனப் பகுதிகளில் கிருஷ்ணரின் லீலைகள் நடைபெற்ற இடங்களைக் கண்டுபிடித்துப் புதுப்பிக்கும்படியும், கிருஷ்ண உணர்வைப் பரப்புவதற்கு வாழ்வை அர்ப்பணிக்கும்படியும், விருந்தாவனத்திற்கு வருகைதரும் பக்தர்களுக்கு அடைக்கலம் கொடுத்து பார்த்துக்கொள்ளும்படியும் மஹாபிரபு அறிவுறுத்தினார்.

Latest