AUTHOR NAME

wadminw

185 POSTS
0 COMMENTS

ஸ்ரீ கிருஷ்ண பிரசாதம்

ஒருவனது ஆகாரம் சுத்தமானதாக இருந்தால் அவனது உள்ளமும் உடலும் தூய்மையாக இருக்கும் என்று வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே, உண்ணும் உணவு குறித்து நாம் எப்போதுமே கவனத்துடனும் கண்டிப்புடனும் இருத்தல் வேண்டும். உணவை சமைப்பவரின் அல்லது பரிமாறுபவரின், மனநிலையும் உணர்வு களும் உணவைப் பாதிக்கும். தீய உணர்வுடையோரால் வழங்கப்படும் உணவை உண்பதால், உண்பவரின் மனநிலை பாதிக்கப்படுகிறது. அதுமட்டு மின்றி, உணவு வழங்குபவரின் பாவகர மான கர்மாக்களிலும் (தீவினைகளிலும்) உண்பவர் பங்கெடுத்துக்கொள்ள நேரிடும்.

மக்கள்தொகைப் பெருக்கமும் உண்மையான பற்றாக்குறையும்

இயற்கையின் நோக்கத்தையும், அதன் சட்டங்களையும் நாம் புரிந்து கொண்டால், அமைதியும் முன்னேற்றமும் கொண்ட உலகத்தில் இயற்கையோடு இணைந்து சுலபமான முறையில் நம்மால் வாழ இயலும். ஆனால் இயற்கையின் சட்டங்களையும் நோக்கத்தையும் அறிந்துகொள்ளாத மூடர்களாக நாம் இருந்தால், வெறும் குழப்பங்களைத்தான் நாம் உண்டாக்குவோம். நவீன நாகரிகம் உலகம் முழுவதிலும் குழப்பங்களை உண்டாக்கியிருப்பதற்கு, இயற்கையின் சட்டங்கள் அல்லது கடவுளின் சட்டங்களைப் பற்றிய அறியாமையே காரணம். அச்சட்டங்கள் மிகவும் எளிமையானவை என்றாலும், முறையான ஆன்மீக மூலத்திடமிருந்து நியாயமான விதத்தில் விவேகத்துடன் புரிந்துகொள்ளப்பட வேண்டியவை. கடவுள் உன்னதமானவர், நாம் அனைவரும் அவரின் தொண்டர்கள், இயற்கை வளங்கள் அனைத்தும் அவருக்குச் சொந்தமானவை–இக்கருத்துகள் எல்லா மதப்பிரிவினராலும் ஒப்புக்கொள்ளப்படுபவை. மிகவும் எளிமையான இக்கருத்துகள் மிகவும் தெளிவானவையுமாகும்.

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் வாழ்க்கையும் கொள்கைகளும்

நித்யானந்த பிரபுவிற்கும் ஹரிதாஸ தாகூருக்கும் அவரளித்த முதல் கட்டளை: “நண்பர்களே, செல்லுங்கள்! நகரத்தின் வீதிகளுக்குச் செல்லுங்கள், வீடுவீடாகச் சென்று ஒவ்வொரு மனிதனையும் சந்தியுங்கள், அவனை தூய வாழ்வுடன் ஹரியின் திருநாமத்தைப் பாடச் சொல்லுங்கள், பின்னர் தினசரி மாலை நேரத்தில் உங்களது பிரச்சாரப் பணியின் பலன்களை எனக்குத் தெரிவிப்பீராக.” இக்கட்டளையைப் பெற்ற இரண்டு பிரச்சாரகர்களும் அதனை தினமும் நிறைவேற்றினர். ஒருமுறை ஜகாய், மதாய் என்னும் இரண்டு வெறுக்கத்தக்க நபர்களை அவர்கள் சந்திக்க நேர்ந்தது. மஹாபிரபுவின் கட்டளையைக் கேட்ட அவர்கள் இரண்டு பிரச்சாரகர்களையும் அவமதித்தனர், இருப்பினும் பகவான் அளித்த பக்தியின் போதனைகளால் கவரப்பட்டு விரைவிலேயே மாற்றப்பட்டனர். இதனால் ஆச்சரியமுற்ற நாதியாவின் மக்கள், “நிமாய் பண்டிதர் ஒரு மிகச்சிறந்த பண்டிதர் மட்டுமல்ல, அவர் நிச்சயமாக வல்லமை பொருந்திய கடவுளால் அனுப்பப்பட்ட தூதரே,” என்று கூறினர். அத்தருணத்திலிருந்து தனது இருபத்திமூன்று வயது வரை அவர் தனது கொள்கைகளை நாதியாவில் மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள இதர கிராமங்களிலும் நகரங்களிலும் பிரச்சாரம் செய்தார். தன்னைப் பின்பற்றுவோரின் இல்லங்களில் அவர் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார், பக்தியின் அந்தரங்க கொள்கைகளைக் கற்றுக் கொடுத்தார், மேலும், இதர பக்தர்களுடன் சங்கீர்த்தனத்தில் ஈடுபட்டார். நாதியா நகரத்திலிருந்த அவரது தொண்டர்கள் ஹரியின் திருநாமத்தை கடைவீதிகளிலும் இதர வீதிகளிலும் பாடத் தொடங்கினர்.

ஸ்ரீ ஜகந்நாதர் ஜகத்தில் தோன்றிய வரலாறு

உள்ளே சிற்பியைக் காணவில்லை, ஜகந்நாதர், பலதேவர், மற்றும் சுபத்ரையின் விக்ரஹங்கள் முற்றுப் பெறாத நிலையில் இருந்தன. கொடுத்த வாக்கை மீறி ஏழு நாள்கள் முன்னதாகவே கதவை திறந்தமையால், விக்ரஹங்கள் முழுமையாக இல்லை என்பதை உணர்ந்த அரசர், தன்னை பெரும் குற்றவாளியாக எண்ணி உயிரை விட்டுவிட தீர்மானித்தார். தர்ப்பை புல்லை பரப்பி, உண்ணாவிரதத்தை தொடங்கிய மன்னரின் கனவில், ஜகந்நாதர் தோன்றி, “வருத்தப்படாதே, இவையனைத்தும் எனது ஏற்பாடுகளே. நான் தோன்றும்போது எனது விருப்பத் தின்படியே தோன்றுகிறேன். எனக்கு புற உலகத்தின் கைகளோ, கால்களோ இல்லை, ஆயினும் எனது தெய்வீகப் புலன்களால் எனது பக்தர்களின் சேவைகளை ஏற்பேன்,” என்று கூறினார்.

கீதைக்காக ஒரு குடும்பம்

ஒரு பிரபலமான குரு தனது சீடனிடம் பகவத் கீதையின் பிரதி ஒன்றை கொடுத்தார். இந்த பகவத் கீதையை தினமும் படித்து, வாழ்வை பக்குவப்படுத்திக் கொள். அப்படியே செய்வேன் குருவே!

Latest