மன்னராக இருந்த பரதர் அனைத்தையும் துறந்து காட்டிற்குச் சென்று பகவத் பக்தியில் ஈடுபட்டார். இருப்பினும், ஒரு மானின் மீதான பற்றுதலினால் தமது நிலையிலிருந்து வீழ்ச்சியுற்று ஒரு மானாகப் பிறந்தார்.
விதர்ப நாட்டு மன்னர் பீஷ்மகரின் ஒரே மகளான ருக்மிணி பேரழகு வாய்ந்தவள். நாரதரிடமிருந்து பகவான் கிருஷ்ணரின் லீலைகளையும் ஐஸ்வர்யங்களையும் கேட்டறிந்த ருக்மிணி தன்னை அவரது பாத கமலங்களில் அர்ப்பணித்தாள், அவரது மனைவியாகி அவருக்கு சேவை செய்ய விருப்பம் கொண்டாள்.
மருத்துவம், கல்வி, இராணுவம், பொருளாதாரம் என பல்வேறு துறைகளின் வளர்ச்சியினை நவீன நாகரிகம் பெருமையுடன் காணும் சூழலில், ஒரு சாதாரண காய்ச்சல் அனைவரையும் பீதியில் உறைய வைத்துள்ளது என்பதைப் பார்க்கும்பொழுது, ஒரு மருத்துவரான எனக்கு தர்ம சங்கடமாகவும் சற்று வேடிக்கையாகவும் இருக்கிறது. சற்றுப் பொறுங்கள், நீங்கள் இதை எவ்வாறு சாதாரண காய்ச்சல் என்று கூறலாம்? இது கொசுவினால் உருவாகி உயிரையே பறிக்கும் டெங்கு காய்ச்சல் அல்லவா!” என்று பலர் கூறலாம்.
மஹாபிரபு (நிமாய்) காலமுற்ற தமது தந்தைக்கு ஸ்ரார்த்தம் செய்வதற்காக, தமது மாணவர்கள் சிலருடன் கயாவிற்குச் சென்றார். நவத்வீபத்தில் ஏற்கனவே சந்தித்திருந்த ஈஸ்வர புரியை அச்சமயத்தில் நிமாய் அங்கே சந்திக்க நேர்ந்தது. அப்போது நிமாய் பண்டிதருக்கு தீக்ஷையளித்த ஈஸ்வர புரி, எப்பொழுதும் கிருஷ்ணரின் திருநாமத்தை உச்சரிக்கும்படி அறிவுரை வழங்கினார். அனைத்து ஞானத்தின் குறிக்கோளாகவும் ஆதியாகவும் திகழும் முழுமுதற் கடவுளான பகவான் சைதன்யர், வெளிப்புறப் பார்வையிலும் சிறந்த பண்டிதராக இருந்தவர். இருப்பினும், ஆன்மீக குருவை ஏற்றுக்கொள்வதன் பூரணத் தேவையை மெய்ப்பிப்பதற்காக, அவரும் ஒரு குருவை ஏற்றுக் கொண்டார்.
மஹாபாரதத்தில் பாண்டவர்கள் வன வாசத்தில் இருந்தபோது, துரியோதனன் அவர்களுக்கு பலவிதமான தொல்லைகளைக் கொடுத்தான் என்பது தெரிந்த கதை. அந்த தொல்லைகளில் ஒன்றாக, துர்வாச முனிவரை அவன் அனுப்பி வைத்ததும் அவர் கிருஷ்ணருடைய கருணையினால் எவ்வாறு திருப்தியுற்றார் என்பதும் தெரியாத துணுக்கு.