இந்தியாவில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் கொடிகட்டி பறந்த தருணம்; இஸ்லாமிய பிரச்சார அழுத்தம், தவறாக ஊக்குவிக்கப்பட்ட இந்து உயர் ஜாதியினரின் கொடுமை முதலிய சமூக சூழ்நிலைக்கு மத்தியில், பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு மக்களிடையே பக்தி உணர்வை போதிப்பதற்காக அவதரித்தார்.
பல்வேறு சிறப்பான அஸ்திரங்களைப் பெற விரும்பிய அர்ஜுனன் அதற்காக தேவலோகம் சென்று தனது தந்தை இந்திரனுடன் வசித்து வந்த காலம். ஒருநாள் இந்திரனின் சபையில் தேவலோக மங்கையான ஊர்வசி நாட்டியம் புரிய, அர்ஜுனன் அவளை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். அதனை இந்திரனும் கவனித்தார். அர்ஜுனன் ஊர்வசியை விரும்புகிறான் என்று தவறாக நினைத்த இந்திரன், அர்ஜுனனுக்கு நாட்டியம் கற்றுக் கொடுத்த சித்திரசேனனை அழைத்து, அர்ஜுனனுக்காக ஊர்வசியை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டார்.
முன்னொரு காலத்தில் பரதர் என்ற மன்னர் உலகம் முழுவதையும் தர்ம நெறி தவறாது ஆட்சி புரிந்தார். அவரது நல்லாட்சியினால், முன்பு அஜநாபம் என்று அறியப்பட்ட இவ்வுலகம், பாரத வர்ஷம் என்று மாற்றப்பட்டு இன்றும் அவ்வாறே அறியப்படுகிறது.
ஒருநாள், யசோதை கண்ணனின் லீலைகளைப் பாடியபடி தயிர் கடைந்து கொண்டிருந்தாள். அங்கு வந்த கண்ணன் யசோதையின் முந்தானையைப் பிடித்து இழுத்து, அம்மா பசிக்கிறது," என்றார்.
பிரகலாதரின் பேரனான பலி மஹாராஜர், தேவர்களை வெற்றிகொள்ள விரும்பி பெரிய வேள்வி ஒன்றை நிகழ்த்தினார். இதனால் திருப்தியுற்ற அக்னி தேவர் சிறந்த போர் ஆயுதங்களை பலி சக்ரவர்த்திக்கு வழங்கினார்.