சற்று நேரத்தில் ஒரு விரஜவாசி பண்டிதர், எங்களுக்கு உதவுவதாக கூறி, குளத்தில் என்ன உள்ளது, என்ன விஷேசம் என்பதை எடுத்துக் கூறினார். பூஜை செய்வோம் என்று கூறி, சில மந்திரங்களை உச்சரிக்கச் செய்து, “ராதே, எனக்கு பக்தி கொடு, எனக்கு பக்தி மார்க்கத்தை காட்டு” என்று எங்களை சொல்ல வைத்தார்–உறைந்து போய் நின்றேன்!
இராமகேலி என்னும் பெயரை இந்த ஊர் பெற்றதற்கு பகவான் இராமரின் வருகை காரணமாகிறது. இராமசந்திரரின் பத்தினியான சீதா தேவியின் ஏரியை வந்தடைந்தோம், இங்கே அவள் தனது தாயிற்கு பிண்டம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு அருகில் உள்ள மரமானது ஐயாயிரம் வருடங்கள் பழமையானதாகக் கூறப்படுகிறது. வருடத்தில் ஒருமுறை பீகாரிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து பிண்டம் கொடுக்கின்றனர். பாலபிக்ஷா என்று அறியப்படும் மரத்தினை வழிபடுகின்றனர். இது நிச்சயமாக நான் பார்த்த மரங்களிலேயே மிகப்பெரியதாகத் தோன்றுகிறது, இதன் மாபெரும் கிளைகள் பூமிவரை இறங்கியுள்ளன.
பக்திவினோத தாகூர் தன் வாழ்நாள் முழுவதையும் முழுமுதற் கடவுளான கிருஷ்ணருக்கு இடைவிடாது தொண்டு செய்வதில் கழித்தார். இவ்வுலகிற்கு நன்மை பயக்க அவர் ஆற்றிய நற்தொண்டானது ஸ்ரீ சைதன்யர் மற்றும் கோஸ்வாமிகளின் அளவற்ற செயலுக்கு ஒப்பானதாகும். இந்த தனி ஒருவரின் ஆன்மீக முயற்சியும் தெய்வீக எழுத்துகளும் பகவான் சைதன்யரின் உபதேசங்களை படித்தவர்களும் அறிவாளிகளும் ஏற்றுக்கொள்ளும்படி செய்தது.
நாம் அரசியலை கிருஷ்ண உணர்வை அடிப்படையாகக் கொண்டு அணுகலாம். மேலும், அந்த உணர்வின் அடிப்படையில் உறவுகள் ஏற்படுத்தப்படலாம். அந்த உறவுகள் ஒவ்வொரு குறிப்பிட்ட நபர்களுக்கு மத்தியிலும், மக்களின் மத்தியிலும், இந்த பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கு மத்தியிலும் ஏற்படுத்தப்பட முடியும். இறுதியாக, அந்த உறவினை கடவுளுக்கும் மக்களுக்குமிடையில் ஏற்படுத்த முடியும்.