மஞ்சள் மற்றும் இதர நிற உடைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள விட்டலர் வைஜெயந்தி மாலையையும் துளசியையும் கழுத்தில் அணிந்து தரிசனமளிக்கின்றார். வலது கரத்தில் தாமரையும் இடது கரத்தில் சங்கும் வைத்துள்ளார். அவரது மார்பில் பிருகு முனிவரின் திருப்பாதங்கள் பதிந்துள்ளன. அவரது காதுகள் மகர குண்டலத்தினாலும் நெற்றி திலகத்தினாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மிக அருகில் செல்லும் யாத்திரிகர்கள் அவரது புன்சிரிப்பினால் கவரப்பட்டு அதனை வாழ்வின் பக்குவமாக கருதுகின்றனர்.
கலியின் இன்றைய நடப்பைக் கண்ணில் கண்டும், ஸ்ரீமத் பாகவதம், திருவாய்மொழி இவற்றில் கண்டுள்ள கருத்துக்களை வைத்தும், கலியை எதிர்கொள்வோம் என்ற தலைப்பில் 12 பாடல்களைக் கொண்ட வெண்பா தொகுப்பினையும், அவற்றிற்கான பொருளையும் பின்வருமாரு காண்போம்.
“பூமியைப் போல பொறுமையாகவும், தாய் தந்தையரைப் போல சகிப்புத்தன்மையுடனும், யுதிஷ்டிரர் அல்லது பிரம்மாவைப் போல சமத்துவ மனநிலையுடனும் திகழ்வார். சிவபெருமானைப் போன்ற உதார குணம் கொண்டிருப்பார். லக்ஷ்மிதேவிக்கே புகலிடம் வழங்கும் பரம புருஷரான நாராயணரைப் போல அனைவருக்கும் புகலிடமாக இருப்பார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அடிச்சுவடுகளை எப்போதும் பின்பற்றுபவர் என்பதால் கிட்டதட்ட அவருக்கு நிகரானவராக இருப்பார்.
இஸ்கான் பக்தர்கள் தங்களது சீரிய பழக்கங்களுக்காக மக்களால் பரவலாக மதிக்கப்படுகின்றனர். கௌடீய வைஷ்ணவ திலகத்துடன் நாம் வெளியே சென்றால், நிறைய மக்கள் “ஹரே கிருஷ்ண" என்று கூறி நமக்கு வணக்கம் செலுத்துகின்றனர். இதற்கான அடிப்படை காரணம், இஸ்கான் பக்தர்கள் பொதுவாக தவறான செயல்கள் எதிலும் ஈடுபடுவதில்லை என்பதே.