வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
விஷ்ணு-ஷக்தி: பரா ப்ரோக்தா
க்ஷேத்ரஜ்ஞாக்யா ததா பரா
அவித்யா-கர்ம-ஸ்ம்ஜ்ஞான்யா
த்ருதீயா ஷக்திர் இஷ்யதே
“ஆன்மீக சக்தி, ஜீவன்கள், மாயை என்னும் மூன்று பிரிவுகளில் பகவான்...
ஸ்ரீ பகவான் உவாச
இதம் ஷரீரம் கெளந்தேய க்ஷேத்ரம் இத்யபிதீயதே
ஏதத் யோவேத்தி தம் ப்ராஹு: க்ஷேத்ரஜ்ஞ இதி தத்-வித:
“புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: குந்தியின் மகனே! இந்த உடல், களம் (க்ஷேத்ர) என்று அழைக்கப்படுகின்றது. இவ்வுடலை அறிபவன், களத்தை அறிபவன் (க்ஷேத்ரஜ்ஞ) என்று அழைக்கப்படுகின்றான்.” (பகவத் கீதை 13.2)
எங்கெல்லாம் தர்மத்திற்குத் தொல்லைகள் ஏற்பட்டு (யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத) அதர்மம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ (அப்யுத்தானம் அதர்மஸ்ய), அப்போதெல்லாம் நான் (கிருஷ்ணர்) தோன்றுகிறேன் (ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்) (பகவத் கீதை 4.7). பௌதிக உலகிலும் இதே கோட்பாடு செயல்படுவதைக் காணலாம். அரசாங்கத்தின் சட்டங்கள் மீறப்படும்போது நிலைமையைச் சரி செய்ய எந்தவொரு குறிப்பிட்ட அரசு அதிகாரியோ போலீஸாரோ அந்த இடத்திற்கு வருகிறார்.