- Advertisement -spot_img

TAG

Chaitanya Charitamrita

ஸ்ரீ சைதன்யரின் நீர் விளையாட்டுகள்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் யமுனைக் கரையில் லீலைகள் புரிய, அவரது திருப்பாதம் தனது நீரில் பதியாதா என கங்காதேவி பெரிதும் ஏங்கினாள். கங்கையின் ஏக்கத்தை போக்க பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கலி யுகத்தில் சைதன்ய மஹாபிரபுவாக கங்கைக் கரையோரத்தில் அமைந்துள்ள நவத்வீபத்தில் தோன்றினார். சைதன்ய மஹாபிரபு தமது 48 வருட பூலோக லீலையில் முதல் 24 வருடத்தை நவத்வீபத்திலும், இறுதி 24 வருடத்தை புரியிலும் அரங்கேற்றினார். புரியில் வசித்த முதல் ஆறு வருடத்தில், அவர் பல்வேறு பயணங்களை மேற்கொண்டார். சுருக்கமாகக் கூறினால் சைதன்ய மஹாபிரபு தமது முதற்பாதி திவ்ய லீலையை கங்கைக் கரையிலும் பிற்பாதி திவ்ய லீலையை வங்கக் கடற்கரையிலும் அரங்கேற்றினார்.

புரியில் பக்தர்களுடன் மஹாபிரபு

புரியில் வாழ்ந்த மஹாபிரபுவின் பக்தர்களில் ஒருவரான பகவானாசாரியர் மிகவும் பரந்த மனப்பான்மையுடன் இருந்தார். ஆனால் கண்டிப்புடன் திகழ்ந்த ஸ்வரூப தாமோதரர் தூய பக்தித் தொண்டின் கொள்கைகளுக்கு எதிரான எதையும் சகித்துக்கொள்ள மாட்டார், சில நேரங்களில் பகவானாசாரியரின் முடிவுகளை சந்தேகிப்பார்.

தமிழில் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் பிரம்மாண்ட வெளியீட்டு விழா

காலையில் ஸ்ரீல பிரபுபாதருக்கு குரு பூஜை முடிந்தவுடன், ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் பிரதிகள் முதலில் ஸ்ரீல பிரபுபாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டன. தவத்திரு பானு ஸ்வாமி, தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி, திரு முரளி பட்டர், திரு ராதே ஷ்யாம் தாஸ், திரு சுமித்ர கிருஷ்ண தாஸ், திரு ருக்மிஹா தாஸ், திரு ஸ்ரீ கிரிதாரி தாஸ், திரு ஸத்ய நாராயண தாஸ் ஆகியோர் நூலை ஸ்ரீல பிரபுபாதருக்கு முதலில் அர்ப்பணித்தனர். அதனைத் தொடர்ந்து, கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீஸ்ரீ கௌர நிதாய், ஸ்ரீஸ்ரீ ராதா-கிருஷ்ணர், ஸ்ரீஸ்ரீ ஜகந்நாத-பலதேவ-சுபத்திரை ஆகியோருக்கும் நூல் அர்ப்பணிக்கப்பட்டது.

ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் தமிழில் உருவான விதம்

ஸ்ரீ கிருஷ்ண தாஸ கவிராஜரால் 400 ஆண்டுகளுக்கு முன்பு வங்காளத்தில் வெளியிடப்பட்டு, ஸ்ரீல பிரபுபாதரால் 45 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் என்னும் மாபெரும் காவியம் தமிழில் தற்போது வெளிவந்துள்ளதால் பக்தர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் இருப்பதை அறிகிறோம். இத்தருணத்தில், இந்த தமிழ் நூல் எவ்வாறு உருவாகியது என்பதுகுறித்த முக்கிய தகவல்களை பகவத் தரிசன வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்

அமிர்தம் பருக வாரீர்!

பகவான் ஸ்ரீ சைதன்யரின் அவதாரம், அவரது போதனைகள், பக்தர்களுடன் அவர் புரிந்த லீலைகள் முதலியவற்றை அதிகாரபூர்வமான வேத சாஸ்திர பிரமாணங்களோடு வழங்கும் உன்னதப் படைப்பே ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமியின் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம். ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் என்னும் தலைப்பிற்கு அமரத்துவத்தில் உயிர்சக்தியின் இயல்புகள்” என்று ஸ்ரீல பிரபுபாதர் பொருள் கூறுகிறார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கலி யுகத்தில் பக்த ரூபத்தில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்து அனைத்து ஜீவராசிகளுடனும் ஹரி நாம ஸங்கீர்த்தனத்தைப் புரிந்து யுக தர்மத்தை நிலைநாட்டினார்.

Latest news

- Advertisement -spot_img