TAG
holy place
சுகதேவ கோஸ்வாமியின் வருகை
மன்னர் கேள்வியெழுப்பிய அச்சமயத்தில், ஆத்ம திருப்தி யுடையவரும் சக்தி வாய்ந்தவருமான ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி அங்கு தோன்றினார். வியாஸதேவரின் புதல்வரான அவர் பதினாறு வயதே நிரம்பியவராக இருந்தார். அவரது பாதங்கள், கைகள், தொடைகள், கரங்கள், தோள்கள், நெற்றி, மற்றும் உடலின் எல்லா பகுதிகளும் நேர்த்தியாக அமைந்திருந்தன. அவரது கண்கள் அகன்றும், மூக்கு எடுப்பாகவும், கழுத்து சங்கு போலவும், முகம் மிகவும் கவர்ச்சியாகவும் விளங்கியது.
ரெமுணா
ரெமுணா என்பது ஒடிஸா மாநிலத்திலுள்ள ஒரு சிறிய கிராமம், ஆனால் எந்நேரமும் பக்தர்கள் வந்து செல்வதால் சுறுசுறுப்பான இடமாகக் காணப்படுகிறது. இவ்வூர் முழுவதுமே க்ஷீர-சோரா கோபிநாதரின் கோயிலை மையமாக வைத்துதான் செயல்படுகிறது. இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில், இங்குள்ள மக்கள் பக்தர்களை மகிழ்ச்சி பொங்க வரவேற்பதில் ஆனந்தம் கொள்கின்றனர். இது ரெமுணாவின் நீண்ட காலப் பண்பாட்டை நினைவுபடுத்துகிறது. மாதவேந்திர புரியும் பகவான் சைதன்யரும் எவ்வளவு மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்கள் என்பதை சைதன்ய சரிதாம்ருதத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஜகந்நாத புரி, பாகம் 2
wadminw -
கலி யுகத்திற்கு உகந்த திவ்ய க்ஷேத்திரமான ஜகந்நாத புரிக்கு பெருமை சேர்த்தவர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு என்றால் அது மிகையாகாது. ஜகந்நாத புரியிலுள்ள பல்வேறு முக்கிய ஸ்தலங்கள் அவருடன் தொடர்புடையவை என்பதும், புரிக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் அவரைப் பின்பற்றுவோர் என்பதும் இதற்கு சான்றாக அமைகின்றது. புரியின் பிரதான ஸ்தலமாகிய ஜகந்நாதரின் திருக்கோயிலைப் பற்றி “தீர்த்த ஸ்தலங்கள்" பிரிவின் சென்ற பகுதியில் (பிப்ரவரி மாத பகவத் தரிசனத்தில்) கண்டோம். இந்த இதழில் புரியிலுள்ள இதர முக்கிய ஸ்தலங்களைப் பற்றி காணலாம்.
ஜகந்நாத புரி
வழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இருந்து 60 கி.மீ தொலைவில் அழகான கடற்கரை ஓரத்தில் அமைந்திருப்பது ஸ்ரீ ஜகந்நாத புரி க்ஷேத்திரம். கம்பீரமான ஜகந்நாதர் வீற்றிருக்கும் இந்த க்ஷேத்திரத்திற்கு, ஸ்ரீ...

